Feedback

From Noolaham Foundation
Revision as of 08:37, 21 July 2012 by Shaseevan (talk | contribs)
Jump to navigation Jump to search


நூலகம் நிறுவனம் 10000 நூலகளை எண்ணிமப்படுத்தி காகிதத்தை இதைய பூர்வமாக வாழ்த்து . இளைஞர்களின் பங்களிப்பை பார்த்து வியக்கின்றேன்.

முகுதந் காளிதாஸ்
25/02/2012



'பனையோலை' என்ற இந்த முயற்சி மிகவும் முக்கியமான காலப்பகுதியில் இலங்கையில் இளைஞர்/ யுவதிகளால் ஆராம்பிக்கப்பட்டுள்ளதில் மிக்க மகிழ்ச்சி. இலங்கை வரலாற்றில் ஆவணப்படுத்தல் என்னும் செயற்பாடு முக்கியமானதொரு இடத்தை என்றும் இல்லாதது போல் பெற்றிருக்கின்றது இதனை சரியாகப் புரிந்து கொண்டு இக்கால இளைஞர்/யுவதிகள் தங்களது வாழ்க்கைச் செயற்பாடுகளுடன் மட்டும் முடங்கிவிடாது சமூக மாற்றத்திற்காக செயற்படுவதை மிகவும் வரவேற்கின்றேன். கிடைத்த சந்தர்ப்பங்களை சரியான மற்றும் அதி திறனுடன் பயன்படுத்தி \ உங்களது இந்த முயற்சி மேலும் பல பனையோலைகளை உருவாக்க வாழ்த்துகிறேன்.

காயத்ரி
2.10.2011



தங்கள் மேற்கொள்ளும் பணிகள் ஓர் அரசு மேற்கொள்ள வேண்டிய உயர்ந்த பணிகளாகின்றன. பணிகள் தொடரவும் வளம் பெறவும் மேலெழுந்து சிறக்கவும் நல்வாழ்த்துக்கள்.

சபாஜெயராசா
5/06/2011




நூலகம் திட்டம் ஆரம்ப காலத்தில் இருந்து இன்றை வரை ஆனது செயற்பாடுகள் ஈழத்தின் எழுத்து வகை ஆவணப்படுத்தல் மட்டுமல்லாது, ஈழத்தின் எழுத்து வகை ஆவணப்படுத்தல் மட்டுமல்லாது ஈழத்தின் பண்பாட்டு வழக்காற்றலியல் சார்ந்தும் நீடித்த பாவனையை எதிர்காலச் சந்ததியினருக்கு விட்டுத்தந்திருக்கின்றது. தொடர்ந்தும் இவை பேணப்பட ஒலி வடிவ நூல்கள் தரவேற்றல் இன்ன பிற ஈழத்து பண்பாட்டில் சார்ந்த ஆவணங்களையும் இணைத்துக் கொள்ளல் போன்ற ஆரம்ப கால உருவாக்குனர்களின் கனவையும் மெய்ப்படுத்த வேண்டும். இதற்கான என்னாலான உதவிகளுடன் மனமார்ந்த வாழ்த்துக்கள் குழுவினர்களுக்கு.

நிலா.லோகநாதன்
5/6/2011




யாழ்ப்பாணத்தில் இணைப்பாளர் என்றவகையில் எனது கருத்துக்களைப் பதிவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். எமது இணைய எண்ணிம நூலகத்தினால் பயன் பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகுந்த மகிழ்வளிக்கிறது. எது வித லாப நோக்கமும் அற்று சேவையொன்றையே உண்மை இலக்காக கொண்டு செயற்படும் எண்ணிம நூலகத்தின் பங்காளி என்றவகையில் மிகவும் மகிழ்வடைக்கின்றேன். இந்தப் பணி மென்மேலும் மேன்மையுறுவதற்கு என்றும் பங்களிப்பேன் என்ற உறுதியுடன்.

கு.கௌதமன்
உளவியல் விரிவுரையாளர் யாழ்.பல்கலைக்கழகம்





முற்று முழுதாக தன்னார்வ இளைஞர்களால் நடாத்தப்படும் இந்நிகழ்வில் பங்கு பற்றி அதன் செயற்பாடுகளில் ஈடுபடுவது மிகவும் பொன்னான வாய்ப்பு. இளம் பருவத்தினர் இவ்வாறான சமூக செயற்பாடுகளில் ஈடுபடுவது எமது வருங்கால சந்ததியினரது ஆளுமையில் எமக்கு நம்பிக்கைபூட்டுவதாய் அமைகின்றது. இந்த செயற்பாடுகள் தலைமுறை தலைமுறையாய் கொண்டு நடத்தப்பட்டு வரும் தலைமுறைகள் பொறுப்பேற்க வேண்டும் என பிரார்த்திக்கொண்டு வாழ்த்துகிறோம்.

சி.சாருதன்
மொறட்டுவை பல்கலைழக மாணவன்




நூதனமான வாழ்கையில் ஒரு நூலகம் தேவை தான் என்பதை உறுதிப்படுத்துவோம்.

எஸ்.குகவரதன்.



வலைத்தளத்தில் நூலகம் நிறுவனம் செய்து வரும் எழுத்தாளர் பற்றியதும் வெளியீடுகள் நூல்கள், பருவ இதழ்கள், கட்டுரைகள் வேறு பல ஆக்கங்கள் பற்றியவையுமான பதிவுகள் சிறந்த உசாத்துணைக்கானதும் ஆய்வுகளுக்குமானதுமான பெரும் சேவையாகும். தமிழ் எழுத்தாளர்கள் அனைவரையும் எது வித பேதமுமில்லாது மதித்து வரவேற்று உள்வாங்கி உற்சாகப்படுத்தும் இச்சேவை எந்த இடையூறும் இல்லாது தொடர என்னால் முடிந்த உதவிகளை செய்ய ஆயத்தமாயுள்ளேன். எனது இதய பூர்வ வாழ்த்துக்கள்.

தாஸிம் அகமது
கொழும்பு 2
மின்னஞ்சல் doctorthashim@gmail.com.
0779664063


பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்கள், ஆய்வாளர்கள், ஆய்வு மாணவர்கள் தேவையான தகவல்களையும், ஆய்வு முயற்சிகளையும் இலகுவாகவும், வேகமாகவும் மேற்கொள்ளக்கூடிய வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் எண்ணிம நூலகம் எந்நாட்டிலிருப்பவரும் எந்நேரத்திலும் உடனடியாக அணுகும் வாய்ப்பைக் கொண்டிருப்பதும் மிகவும் வரவேற்கத்தக்க விடயம். பெறுமதிமிக்க கிடைத்தற்கரிய பல நூல்கள் அழிந்து மறைந்து இருக்கும் நிலையில் அழியும் நிலையில் உள்ள நூல்கள் எண்ணிமமயப்படுத்திப் பாதுகாப்பது மிக உயர்ந்த நோக்கமாகும். ஈழத்து எழுத்தாளர்களும் படைப்புகளும் உலகளாவிய அறிமுகம் பெறுவது நலமே. பாடப்புத்தகங்கள் மட்டுமல்லாது அனைத்து வெளியீடுகளும் ஆவணங்களும் எண்ணிமப் படுத்த- ப்பட்டிருப்பது வெவ்வேறு துறைகளிலீடுபட்டுள்ள எல்லோருக்கும் பெரும் பயன் அளிக்குமாதலால், இலாபகர நோக்கமற்று, பரந்த நன்னோக்குடன் செயற்படும். தங்கள் நூலக, காப்பகப் பணிகள் மென்மேலும் சிறக்க, எல்லாம் வல்ல இறைவனின் ஆசிகளை வேண்டி நன்றி கூறிக் கொள்ளும்.

திருமதி .இராஜினி தேவராஜன்.



நூலகம்.கொம் செய்யும் பணி இன்றைய காலகட்டத்தில் அவசியமான பணி இந்தப் பணியை இன்றைய இளைஞர்கள் முன்னின்று செய்வது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கின்றது. அவர்களின் அர்ப்பணிப்பான இந்த ஆவணப்பதிவானது எதிர்கால சந்ததியினருக்கு ஒரு வரப்பிரசாதம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவர்களின் பணியை வாழ்த்தி வணங்குகிறேன்.

-மு.கதிர்காமநாதன்



முற்று முழுதாக இளைஞர்களால் நூலகம்.கொம் ஆற்றிவரும் பணிகள் அளப்பரியது. அம்முயற்சிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினராகிய நாமும் எம்மாலான உதவிகள் புரிந்து வருகிறோம் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். உங்கள் முயற்சி கொழும்பு வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு மட்டும் பயன் தராது உலகெங்கும் பரந்துபட்டு வாழும் தமிழ் பேசும் மக்களுக்கும் பயன்பட்டு வருவது உவகை தரும் செய்தியாகும் . தங்கள் பணிகள் மென்மேலும் சிறப்புற்று, உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு தொண்டாற்ற வேண்டுமென மனமார வாழ்த்துகிறோம்.

-ஆ.இரகுபதி பாலஸ்ரீதரன்



அழிவுக்கு உட்பட்டிருக்கும் ஓர் இனத்தின் தடயங்களை தளராது ஆவணப்படுத்தும் உள்ள பணி சிறப்புற வாழ்த்துக்கள்.

-செ.திருச்செல்வன்



சிறு தியாகம் செய்தால் சிறிதளவு வெற்றியை பெறமுடியும் பாரிய தியாகம் செய்யும் இடத்து பாரிய வெற்றியை அடைய முடியும் அதற்கமைய கலை, கலாச்சாரம் இனத்தின் தொன்மையை தொலைத்த எமது தமிழ் இனத்தின் பதிவுகளை பல தியாகங்கள் மூலம் பேண வேண்டிய கடமையை செய்யும் இளைஞர்களுக்கு எனது மனமாந்த வாழ்த்துக்கள்.

-சி.பாஸ்க்கரா


உங்கள் மகத்தான சேவைக்கு தலை வணங்குகிறேன். எவருமே நினைக்காத அல்லது நினைத்தும் அவர்களால் முடியாத ஒரு மகோன்னதமான திட்டத்தை நீங்கள் செயற்படுத்துகிறீர்கள் எனும் போது உங்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது. கருத்தினை அளிப்பது இது முதல் தடவைதானேயொழிய நூலகத்தினை ஆரம்பித்த நாட்களில் இருந்து இதற்குள் நீந்தி விளையாடுகிறேன் தொடரட்டும் உங்கள் பணி.

- விசாகன்
(http://www.kidukuveil.blogspot.com)



நீண்ட நாட்களாகவே இத்தளத்தைத் தொடர்ந்து பார்த்துப் பயன்பெற்ற வருகிறேன். மிகவும் பயனுடையதாகவுள்ளது. எதிர்கால சிந்தனையைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. மிக்க மகிழ்ச்சி!!!!!

- முனைவர். இரா. குணசீலன்
(http://gunathamizh.blogspot.com)



வணக்கம். நூலகம் கண்டேன் மிகப் பயனுள்ள மின்தொகுப்புகள் .. உங்கள் பணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

-கல்பனா சேக்கிழார்
(http://www.sekalpana.com)



நல்ல முயற்சி தமிழுலகிற்கு ஒரு தரமான பணி. மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

- அருள்ஜோதிச்சந்திரன்



நூலகத்தில் அனைத்துப் பகுதியும் அற்புதம்.. தேவையின் கட்டாயம். மாணவர்களின் நன்மை கருதி நிறையப் பாடப் புத்தங்களை வெளியிட்டால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து.

-கண்ணன்



மிகச்சிறப்பான செயற்பாட்டை மேற்கொண்டுள்ளீர்கள் ... எனது ஆக்கங்களும் நாவல்களும் உங்கள் தளத்தை அலங்கரிக்கும் என தாங்கள் எண்ணும் பட்சத்தில் எனது பங்களிப்பு தொடர்ச்சியாக தங்களிடம் வந்து சேரும்.. நன்றிகள். இத்தாலியில் இருந்து,

-அருகன் (பிரான்சிஸ் மக்ஸிமிம்)
(http://arugan.spaces.live.com)