Feedback/9

From Noolaham Foundation
< Feedback
Revision as of 04:48, 1 January 2021 by Pireetha (talk | contribs)
Jump to navigation Jump to search


ஓலைச்சுவடிகளை ஆவணப்படுத்தலில் எமது ஆரம்பகால அச்சுப்பதிவுகளிலிருந்து தற்காலம் வரையிலான தமிழர் பதிவுகளை ஆவணப்படுத்தும் இந்த முயற்சி சிறக்க மனமார வாழ்த்துகிறேன்.

மு.சிவநேசன்
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி



ஆவணப்படுத்தல் என்பது தமிழ் சமுதாயத்தின் காலத் தேவையாகியுள்ள நிலையில் இந்த முயற்சியானது பாராட்டத்தக்க ஒன்றாகும்.இன்றைய ஆவணப்படுத்தல்கள் நாளைய வரலாறுகள்

சியாழினி சுர்யகுமார்
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி



ஆவணப்படுத்தல் என்பது முக்கியமான ஒன்றாகக் காணப்படுகின்றது.மிகவும் பயனுள்ள விடயங்கள் ,பாராட்டத்தக்க விடயங்கள்.

ஜே. மேரிபத்மா
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி



இந்த ஆவணப்படுத்தல் மூலம் பழைய, புதிய விடயங்களை அறிய முடிந்தது.

தி.அனிதா
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி



ஒரு நூற்றாண்டுக்கு நூலொன்றைப்படைப்பவனை ஒத்தவன்.அவன் பின் பல நூற்றாண்டுக்கு அதனைக்கடப்பவன் 200 ஆண்டுகள் கைபடாவிடனும் நூலொன்று நீர்த்துப் போகுமாம். வள்ளுவம் தொல்காப்பியம் முதற்கொண்டு அத்தனை நூல்களையும் இன்றுவரை நிலைத்திருக்கக் கடத்தியவர்கள் கடவுள்களே. இன்னொரு யுகத்திற்கும் நிலைத்திருக்கச் செய்யும் நூலக நிறுவனம் நிறைவாகத் தொடர்ந்திட வாழ்த்தும் பிராத்தனையும்.

பா. அம்புஜன்
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி



மரபுரிமையை பாதுகாப்பதன் அவசியத்தை எல்லோருக்கும் பல தடவைகள் எடுத்துரைப்பேன். நம் முன்னோர்கள் வகுத்த சாஸ்திரங்கள் இன்றைய சூழலில் நாம் அறியும் தருவாயில் உள்ளோம். என்றோ ஒரு நாள் முகநூலில் இவ் மரபுரிமைகளைத்தேடி எனும் பதிவேட்டை பார்த்தவுடன் கட்டாயம் சென்று பார்க்கவேண்டும் என்ற ஆவல் இருந்தது.எம்மை வழிநடத்திய நம் முன்னோர்களின் ஏடுகளை இங்கே கண்ணால் கண்டது மிக்க மகிழ்ச்சி. மருத்துவக்குறிப்புக்களை அதிகமாகச் சேர்க்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. நான் பருத்தித்துறையை சேர்ந்தவர்.என்னால் முடிந்த பங்களிப்பை நான் அவசியம் செய்வேன்.

அ.கிரியந்தி
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி



புதுமை புதுமை என்று ஓடிக்கொண்டிருக்கும் மக்களும் எங்கள் முன்னோர்களும் சேர்த்து வைத்த இந்தப்பதிவுகளை உங்களுக்கும் ஆனந்தம் மனநிறைவு, ஆரோக்கியம். இன்று என்னவெல்லாம் வேண்டுமோ அதை தரவல்லதும் நாம் எப்படி வாழ்ந்தோம் , எப்படி வாழ்கிறோம் இனி மேலாவது எப்படி வாழ வேண்டும் எனக்கற்பதற்கு இந்த ஆவணப்படுத்தல் நிகழ்வாகும். காலத்தில் இது மேலும் சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். தேடிப்பிடித்து எமக்கும் தந்த இக்குழுவை மனமாரப்பாராட்டுகிறேன். நன்றி.

நா. ஆனந்தன்
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி



ஒவ்வொரு தமிழனும் பங்களிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் .

ஜே. கிருசிகன்
22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி



21 ஆம் நூற்றாண்டில் வாழும் நம்மவர்க்கு அறியாத மற்றும் புரியாத பல விடயங்களை உள்ளடக்கியுள்ளது.இங்கு நான் எனக்கு இதுவரை அறிந்திடாத புதிய விடயங்களைக் கற்றுக்கொண்டேன்.

22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி



ஏட்டுச்சுவடிகள் பற்றிய பகுதி புதிதாகவும் மிகவும் சிறந்த முறையிலும் விளக்கமளிக்கப்பட்டது.காலத்தின் மிக முக்கியமான பணியை முன்னொடுத்துச்செல்கிறார்கள்.

22/02/2020
மரபுரிமைகளைத்தேடி கண்காட்சி