Feedback/5

From Noolaham Foundation
Jump to navigation Jump to search


நூலகத்தைப் பார்வையிட்டதன் மூலம் அவர்கள் செய்யும் வேலைகளின் கனமும் கடினமும் அறிந்துகொள்ள முடிகிறது.

நிவேதா உதயராஜன்
19/02/2018


6 கட்டுரைகள் செய்வதற்கான தேடல்களுக்காகவும் தொடர்ந்தும் வீட்டில் இருந்தே நூல்களை அல்லது சஞ்சிகைகளை கற்றுக்கொள்ள அல்லது வாசிப்பதற்காகவும் பாவித்தேன்.

தர்சிகா
22/06/2018



இன்று இந்த நூலகத்திற்கு விஜயம் செய்து சில 8 நூல்களை அன்பளிப்புச் செய்தேன். நூலகத்தின் பல பாகங்களையும் நூல்களின் கையிருப்புக்களையும் அவதானித்தேன். இங்கு கடமைபுரியும் சுமார் பத்துப் பணியாளர்களைச் சந்தித்து உரையாற்றியதுடன் நிழல் படங்களும் எடுத்துக் கொண்டேன். தமிழ்ப்பணியும் சேவைகளும் பாராட்டலுக்குரிய விடையமாகும் இன்னும் வளர வேண்டும் சிறக்க வேண்டும் எம்மாலான உதவிகள் கிடைக்கும் எல்லோரும் ஒருமித்து தமிழை வளர்ப்போம் பாதுகாப்போம் மென்மேலும் பல தொண்டுகள் செய்வோம்.

வி.சிவராஜ்
27/08/2018



தமிழர்களுக்கு பல வகையில் இந்த பணி மிக உதவியாகவும் ஆய்வுகள் மொழிபெயர்ப்பிற்கு உதவியாகவும் உள்ள இவர்கள் பணி மேலும் வளர வாழ்த்துகள் இராமருக்கு உதவிய அணில்போல நானும் சிறு பங்களிப்பு செய்வதில் பெருமையடைகிறேன்.

வேதா இலங்கதிலகம்
28/09/2018



எனது தந்தையார் க. ம. செல்வரத்தினம் என்பவரால் 1964 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட உயிர்க்கூடு சமூக நாவலின் பிரதி எம்மிடம் கைவசம் இல்லாதிருந்தது. நூலகம் வலைத்தளம் மூலம் நாம் அந்நூலின் பிரதியைப் பெற முடிந்தது.

சரத்சந்திரன்
25/04/2019



விக்கிபீடியரின் 16ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடத்தின் ஒரு சிறிய பகுதியாக அனைவருக்கும் நூலகம் அறக்கட்டளையினரை காணும் வாய்ப்பு கிடைத்தது. பல அரிய சுவடிகளை படி எடுக்கும் செயலை இங்கே முதன் முதலில் கண்டோம். அதன் தனித்துவத்தையும் அவர்கள் படி எடுக்கும் நுணுக்கத்தையும் கண்டு வியப்படைந்தோம். பிற நூல்களை படி எடுக்கும் நுணுக்கமும் அருமையானதொரு வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். இவர்களின் அடுத்த முயற்சியாக சுவடிகளின் எழுத்துக்களை மட்டும் கோப்பாக மாற்றினால் பழைமையான பல சுவடிகளை ஆராயும் ஆராய்ச்சியாளர்களின் எண்ணிக்கை பெருகும் என்பது என் எண்ணம். உங்களது முயற்சிகள் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

க.திவ்வியா
19/10/2019



நூலகம் வேலைத்திட்டம் மகிழ்ச்சியாக உள்ளது.

ச.மனோகர்




ஆவணக்காப்பகம் தொடர்பாக விபரம் அறிந்து கொண்டேன்.

ந.குகதாஸன்




நூலகம் ஆவணகம் என்ற பெயரில் கடந்த நிறுவனம் இலங்கைக்கு மாத்திரமன்றி உலகம் முழுவதிலுமே செறிந்து வாழும் தமிழ்ப்பேசும் தமிழர்களின் ஒட்டுமொத்தமான வாழ்வு பண்பாடு மரபு கலாசாரம் இலக்கிய இலக்கணச்சிறப்பு என்றினைந்த எல்லாவற்றுக்குமான ஒன்றிணைப்பு வளர்ச்சி தொடர்பில் ஆற்றப்படும் சேவையை மனதாரப் பாராட்டி வாழ்த்துவதில் பெருமகிழ்வெய்துகிறேன்.

செந்தமிழ் செம்மல்