பேரா. கா. குகபாலன் தனது நூல்களை அணுக்கப்படுத்த அனுமதியினை வழங்கினார்

Published on Author Noolaham Foundation

புவியியல்த் துறை ஓய்வுநிலைப் பேரா.குகபாலன் கார்த்திகேசு 22/07/2015 அன்று நூலக நிறுவன யாழ் அலுவலகத்துக்கு வருகை தந்து, இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான ஆவணப்படுத்தல் மேற்கொள்வதன் அவசியம் குறித்து நூலக அலுவலகர்களுடன் ஓர் சிறப்பான கலந்துரையாடலில் ஈடுபட்டு இருந்தார். பேரா.குகபாலன் புவியியல், வரலாறு, அரசியல் நிலைப்பட்ட பல முக்கிய புத்தகங்களினை எழுதியுள்ளார். அவற்றில் இதுவரை நூலக நிறுவனத்துக்கு கிடைக்கப்பெற்றன, நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் பத்வேற்றப்பட்டு அனைவருக்கும் இலவசமாகவும் இன்று பகிரப்பட்டுள்ளன. இவ்வாறு பகிர்வதற்கான அனுமதியையும்… Continue reading பேரா. கா. குகபாலன் தனது நூல்களை அணுக்கப்படுத்த அனுமதியினை வழங்கினார்

“சூரியா” பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் வெளியீடுகளை அணுக்கப்படுத்தல்

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலகத்தில் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் வெளியீடுகள் யாவற்றையும் ஆவணப்படுத்தி வெளியிடுவதற்கான அனுமதி ‘சூரியா’ நிலையத்தினால் 30-06-2015 அன்று லேடி மன்னிங் றைவ், மட்டக்களப்பில் அமைந்துள்ள தமது அலுவலகத்தில் வைத்து நூலக நிறுவனத்தின் தொடர்பாடல் அலுவலகரிடம் கையளிக்கப்பட்டது. கிழக்கிலங்கையில் கடந்த பல ஆண்டுகளாக பெண்கள் தொடர்பான முன்னேற்றம், அபிவிருத்தியில் பல பெண்கள் மற்றும் புத்தியீவிகளின் ஒத்துழைப்புடன் இயங்கிவரும் ‘சூரியா’ நிலையம் பல்வேறு பெண்ணியம் சார்ந்த வெளியீடுகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றது. மேலும் பெண்ணியம் சார்ந்து… Continue reading “சூரியா” பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் வெளியீடுகளை அணுக்கப்படுத்தல்

தவில் தட்சணாமூர்த்தி ஆவணப்பட வெளியீட்டு விழாவில் அருண்மொழிவர்மன் ஆற்றிய உரை

Published on Author Noolaham Foundation

சமூகத்தினை நோக்கிய தசாப்தம் கடந்த பயணத்தின் தொடர்ச்சியில் “இலங்கையின் தமிழ் பேசும் சமூகத்தின் ஓர் எண்ணிம ஆவணக்காப்பகம்- “நூலக நிறுவனம்” கனடாவில் 09/05/2015 அன்று இடம்பெற்ற தவில் மேதை தட்சணாமூர்த்தி அவர்களின் ஆவண இறுவெட்டு வெளியீட்டு வைபவத்தில் நூலகத்தின் தனார்வலர்களின் ஒருவரான சுதர்சன் ஶ்ரீனிவாசன் (அருண்மொழிவர்மன்) அவர்கள், “நூலகத்துடன் உலகம் பூராகவும் பரந்து வாழும் தமிழ் பேசும் சமூகங்கள் இணைந்து பங்களிக்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார். நூலகத்துடன் அனைவரும் # அரிய பலஆவணங்களினைப் பகிந்தும், #… Continue reading தவில் தட்சணாமூர்த்தி ஆவணப்பட வெளியீட்டு விழாவில் அருண்மொழிவர்மன் ஆற்றிய உரை

தவில் தட்சணாமூர்த்தி ஆவணப்பட வெளியீட்டு விழாவில் இளையதம்பி தயானந்தா ஆற்றிய உரை

Published on Author Noolaham Foundation

லண்டனில் 26/04/2015 அன்று இடம்பெற்ற, “தவில் மேதை தட்சணாமூர்த்தி” அவர்களைப்பற்றிய ஆவண இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வில் நூலக நிறுவனம் பற்றியதும், நூலக நிறுவனத்தின் சாதனைகள் பற்றியதுமான சிறப்பான உரை ஒன்று இளையதம்பி தயானந்தா அவர்களினால் ஆற்றப்பட்டது. அவர் தனது உரையில் நூலகம் நிறுவனம், இலங்கைத் தமிழ் பேசும் சமூகம் சார் 15,000க்கும் மேற்பட்ட எழுத்தாவணங்களை கடந்த 11 வருடங்களில் ஆவணப்படுத்தி உலகம் பூராகவும் இலவசமாக பகிர்ந்திருப்பதனை நினைவு கூர்ந்தார். மேலும் அவரது அவ்வுரையில் நூலக நிறுவனத்தின் அனைத்து… Continue reading தவில் தட்சணாமூர்த்தி ஆவணப்பட வெளியீட்டு விழாவில் இளையதம்பி தயானந்தா ஆற்றிய உரை