கொக்குவில் நம் ஊர் | ஊர் வலம் 02

Published on Author தண்பொழிலன்

“வில்வளைவான அமைப்புடைமையாற் குளங்களோடு சேர்ந்த பல தமிழ்ப்பெயர்கள் ஊர்ப்பெயராயின. பொத்துவில், தம்பிலுவில், கொக்குவில், கோண்டாவில், நந்தாவில், இனுவில், மல்வில், மந்துவில் இன்னும் பல இதற்கு உதாரணமாகும். செழிப்பான கியாதி நிறைந்த வரலாற்றுப் புகழ் வாய்ந்த யாழ்ப்பாணக்குடா நாட்டிலமைந்த ஊர்களில் புகழ்பூத்த ஒரு ஊர், கொக்குவில். கொக்கு ஒரு பறவை, ஒரு பூமரம், ஒரு குதிரை, மாமரம் என்றெல்லாம் பொருள்படும்.” “கொக்குவில் நம் ஊர்” நூலுக்கான தன் அணிந்துரையில் யாழ்ப்பாணத்துக் கொக்குவில் பதியை இப்படித்தான் அறிமுகப்படுத்துகிறார் புலோலி முருகவே.… Continue reading கொக்குவில் நம் ஊர் | ஊர் வலம் 02

ஏழாலை | ஊர் வலம் 01

Published on Author தண்பொழிலன்

சமூகமொன்றின் இருப்புக்கு வரலாறும் பண்பாடும் அத்தியாவசியமானது. வரலாறு, மற்றும் தொல்லியல் சான்றுகளை, அறியாமையாலும் வேறு புறக்காரணிகளாலும் நாம் கைவிட்டுச் செல்லும் இந்தக் காலத்தில், அவற்றை எதிர்காலத்துக்குக் கடத்த முடியாவிட்டாலும், ஆவணப்படுத்தியாவது வைக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நம் சமூக அலகுகளில்  ‘ஊர்’ என்பது முக்கியமான ஒன்று. அந்த மட்டத்திலேயே ஆவணப்படுத்தலை மேற்கொள்வது சிறப்பானது. ஊர் ஆவணப்படுத்தலை இன்னொருவர் செய்யாது, அந்தந்த ஊரவரே செய்யும் போது, அதன் பெறுமதி அதிகமாக இருக்கும். நம்பகத்தன்மை, சரிபிழை முதலிய பல தகவல்களையும் அதனுடன் இணைத்து ஆராயக்கூடியதாக… Continue reading ஏழாலை | ஊர் வலம் 01

நூலகத்தின் ஊர் ஆவணப்படுத்தல் திட்டம்

Published on Author தண்பொழிலன்

வரலாறு என்றால், நாமெல்லாம் சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு, என்று பட்டியல் வாசிப்போம். இதே கேள்வியை தொன்மையான வரலாற்றுக் குடியிருப்புகள் என்றால், மதுரை, தஞ்சை, காஞ்சி என்றோ, கீழடி, ஆதிச்சநல்லூர் என்றோ மீண்டும் தமிழகத்திலேயே போய் நிற்போம்.   கொஞ்சம் விடயம் தெரிந்தவர் என்றால் யாழ்ப்பாண இராச்சியம், வன்னிச் சிற்றரசுகள், மட்டக்களப்பு வன்னிமைகள் திருக்கோணமலை, கந்தரோடை, பொம்பரிப்பு, என்று இங்குள்ள பட்டியலையும் சேர்த்துக்கொள்ளுவோம். . இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். நீங்கள் பிறந்த ஊரின் வரலாறு உங்களுக்குத் தெரியுமா? தமிழரின் வரலாற்றுக் குடியிருப்புகளில் உங்கள் ஊரின் பெயரையும்… Continue reading நூலகத்தின் ஊர் ஆவணப்படுத்தல் திட்டம்