கனடாவிலிருந்து சுகந்தி மார்க்கண்டு அவர்களின் நூலக வருகை

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

2025, மே மாதம் 05 ஆம் திகதி யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்திற்கு, கனடாவிலிருந்து சுகந்தி மார்க்கண்டு  அவர்கள் வருகை தந்திருந்தார்.  நூலக வலைத்தளத்தையும், அதன் செயல்பாடுகளைப் பற்றிய அடிப்படை அறிவைய ஏற்கனவே பெற்றிருந்த இவர், நூலக நிறுவனத்தின் செயற்பாடுகள், ஆவணப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சமூக அடிப்படையிலான ஆவணப்படுத்தல் முயற்சிகளை நேரடியாக அறிந்துகொள்வதற்காக வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் நிறுவனத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அரிய ஆவணங்களை பார்வையிட்டதுடன், ஓலைச்சுவடிகளை ஆவணப்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பாக கூடுதல்… Continue reading கனடாவிலிருந்து சுகந்தி மார்க்கண்டு அவர்களின் நூலக வருகை

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் (National Library and Documentation Services Board) இயக்குனர் பத்மா பண்டாரநாயக்கே மற்றும் அனுராதா தசாநாயக்கே, உதித குணசேகர ஆகியோரது நூலக வருகை

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

ஏப்ரல் மாதம் 08ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்திற்கு, தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் (National Library and Documentation Services Board) இயக்குனர் பத்மா பண்டாரநாயக்கே மற்றும் அனுராதா தசாநாயக்கே, உதித குணசேகர ஆகியோர் வருகை தந்திருந்தனர். நிறுவனம் சார்ந்த ஆவணமாக்க செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்ட இவர்கள், ஒவ்வொரு துறை சார்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்றிட்டங்கள் சார்ந்த செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடியதுடன் அத்துடன் நிறுவனத்தில் ஆவணப்படுத்தப்பட்டுப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும்… Continue reading தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் (National Library and Documentation Services Board) இயக்குனர் பத்மா பண்டாரநாயக்கே மற்றும் அனுராதா தசாநாயக்கே, உதித குணசேகர ஆகியோரது நூலக வருகை

வட மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களின் நூலக வருகை

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

2025, ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்திற்கு, இலங்கையின் வடக்கு மாகாணத்தின் கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் வருகை தந்திருந்தார்.  நிறுவனத்தின் வரவேற்பறையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அரிய ஆவணங்களைப் பார்வையிட்ட இவர், ஓலைச்சுவடிகளை ஆவணப்படுத்துவது தொடர்பில் கூடுதலாக கேட்டறிந்து கொண்டார்.   தொடர்ந்து, நிறுவனத்தின் ஒவ்வொரு துறையினையும் சென்று பார்வையிட்ட போது, துறை சார் செயற்பாடுகள் மற்றும் அதில் காணப்படக்கூடிய தேவைகள் தொடர்பில் அந்தந்த துறைசார் தலைவர்கள் தெளிவாக… Continue reading வட மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களின் நூலக வருகை

துயர் பகிர்வு : ரவிச்சந்திரநேசன் பொன்னுத்துரை

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

2008ஆம் ஆண்டிலிருந்து நூலக நிறுவனத்திற்கு ஆவணங்களை வழங்கியும் பின்னர் ஆவணப்படுத்தல் பணிகளுக்கான நன்கொடையினை வழங்கியும் 2021 ஆம் ஆண்டிலிருந்து கனடாவில் நிதிச்சேகரிப்பாளருமாய் பங்களித்த அரசியல், சமூகச் செயற்பாட்டாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான ரவிச்சந்திரநேசன் பொன்னுத்துரை அவர்கள் ஜனவரி 24, 2025 வெள்ளிக்கிழமை இலங்கையில் காலமானார். அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவர்தம் துயரிலும் நூலக நிறுவனம் பங்குகொள்கிறது.

ஜெர்மனி கான்ஸ்டான்ஸ் பல்கலைக்கழகத்தின் நூலகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் துணை இயக்குநர் டாக்டர். அஞ்சா ஓபர்லேண்டர் உள்ளிட்ட குழுவினரின் நூலக வருகை – 12.11.2024

Published on Author Loashini Thiruchendooran

நவம்பர் மாதம் 12ஆ ம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்திற்கு, ஜெர்மனி கான்ஸ்டான்ஸ் பல்கலைக்கழகத்தின் நூலகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் துணை இயக்குநர் டாக்டர். அஞ்சா ஓபர்லேண்டர் (Dr. Anja Oberländer, Vice-Director of Library & IT), திறந்த அறிவியல் குழுவின் தலைவர் திரு. மத்தியாஸ் லேண்ட்வேர் (Mr. Matthias Landwehr, Head of the Open Science Team), பொது மற்றும் கணக்கீட்டு மொழியியல் துறையின் பேராசிரியர் மிரியம்… Continue reading ஜெர்மனி கான்ஸ்டான்ஸ் பல்கலைக்கழகத்தின் நூலகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் துணை இயக்குநர் டாக்டர். அஞ்சா ஓபர்லேண்டர் உள்ளிட்ட குழுவினரின் நூலக வருகை – 12.11.2024

ஏறாவூர் புத்தக கொண்டாட்டம் 2024 இல் “நூலக நிறுவனம்”

Published on Author Loashini Thiruchendooran

ஒக்டோபர் 30 தொடக்கம் நவம்பர் 03ஆம் திகதி வரை காலை 10.00 மணி முதல் மட்டக்களப்பு, ஏறாவூர் நகர் பிரதேச செயலகம், வாவிக்கரை அருகில் இடம்பெறுகின்ற “ஏறாவூர் புத்தக கொண்டாட்டம் 2024” இல் நூலக நிறுவனத்தின் காட்சியறையினையும் பார்வையிடலாம். அச்சு ஆவணங்கள், பல்லூடக ஆவணங்கள், ஓலைச் சுவடிகள் என 5,843,832 பக்கங்களைக் கொண்ட 160,077 ஆவணங்களை ஆவணப்படுத்தியுள்ள இந்நிறுவனத்தின் செயற்பாடுகளை நீங்களும் தெரிந்துக் கொள்வதற்கான வாய்ப்பு. நூலகம் (www.noolaham.org) என்பதை பிரதான வலைத்தளமாகக் கொண்டு பல்லூடக நூலகம்… Continue reading ஏறாவூர் புத்தக கொண்டாட்டம் 2024 இல் “நூலக நிறுவனம்”

160,000 ஆவணங்களைக் கடந்துள்ள நூலக நிறுவனம்

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனத்தின் ஆவணமாக்கப் பணிகள் மேலும் வேகமாக முன்னெடுக்கப்பட்டு 2024 மார்ச் மாதத்தில் 150,000 ஆக இருந்த ஆவண எண்ணிக்கை 10,000 ஆல் அதிகரித்து 160,000 இனைக் கடந்துள்ளது! இப்போது 5.8 மில்லியன் பக்கங்களைக் கொண்ட 160,000+ ஆவணங்களை எண்ணிமப்படுத்தியுள்ள நூலக நிறுவனத்தின் சுவடியாக்கப் பயணத்தில் பங்கேற்க வாருங்கள்!