நூலக நிறுவனத்தின் பொங்கல் நிகழ்வும் 19ஆவது ஆண்டு ஆரம்ப சந்திப்பும்

Published on Author Loashini Thiruchendooran

பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஜனவரி 15, 2005 அன்று ஆரம்பிக்கப்பட்டு இவ்வாண்டு 130,545 ஆவணங்களுடனும் 4,631,372 பக்கங்களுடனும் தனது 19ஆவது அகவையில் காலடி எடுத்து வைத்திருக்கிற நூலக நிறுவனம், பாரம்பரிய அறுவடைத் திருவிழாவான ‘தைப் பொங்கல்’ மற்றும் நூலக நிறுவனத்தின் 19ஆவது ஆண்டு ஆரம்ப விழா என்பவற்றை சுண்டுகுளி சோமசுந்தரம் ஒழுங்கையில் அமைந்துள்ள நூலக அலுவலகத்தில் 15 ஜனவரி 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று உற்சாகத்துடன் கொண்டாடியது. நூலக நிறுவனப் பணியாளர்கள் மற்றும் நூலகத் தன்னார்வலர்கள் ஆகியோர் இப்பொங்கல்… Continue reading நூலக நிறுவனத்தின் பொங்கல் நிகழ்வும் 19ஆவது ஆண்டு ஆரம்ப சந்திப்பும்

நூலக நிறுவனத்தின் வருடாந்த பணியாளர் ஒன்றுகூடல் – 2022

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனத்தின் வருடாந்த பணியாளர் ஒன்றுகூடலானது 25.11.2022 – 26.11.2022 வரையிலான காலப்பகுதியில் இரண்டு நாட்கள் பயணமாகத் திருகோணமலையில் இடம்பெற்றது. இப்பயணத்தில் நூலக நிறுவனப் பணியாளர்கள் கலந்துகொண்டிருந்ததுடன் அவர்களிடையே வேடிக்கையான விளையாட்டுக்களும் நடாத்தப்பட்டன. இப்பயணத்தின் முதல் நாள், # திருகோணமலை ஸ்ரீ லக்‌ஷ்மி நாராயனப் பெருமாள் கோவில் # ஸ்ரீ திருக்கோணேஸ்வரம் கோவில் # சீனக்குடா துறைமுகம் # நிலாவெளி கடற்கரை போன்ற இடங்களும் இரண்டாம் நாள், # திருகோணமலை மாபல் கடற்கரை # கண்ணியா வெந்நீரூற்று என்பனவும் பார்வையிடப்பட்டன.  … Continue reading நூலக நிறுவனத்தின் வருடாந்த பணியாளர் ஒன்றுகூடல் – 2022