நூலகத்தில் “செங்கதிர்” சஞ்சிகை

Published on Author Loashini Thiruchendooran

‘செங்கதிர்’ கிழக்கிலங்கையில் இருந்து வெளிவருகின்ற கலை இலக்கிய பண்பாட்டுப் பல்சுவை மாத இதழ் ஆகும். 2008ஆம் ஆண்டு தை மாதம் இவ் வெளியீடு ஆரம்பிக்கப்பட்டதுடன் 2013 ஆம் ஆண்டு வரையில் 61 இதழ்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. திறந்த பொருளாதாரமும் உலகமயமாதலும் பண்பாட்டுத் தனித்துவங்களை பாதித்து வருகின்ற சூழலில் மனித மனங்களை செழுமைப்படுத்தும் வல்லமை இலக்கியங்களுக்கு உண்டு என்பதை எடுத்தியம்பும் வகையில் மரபுகளில் காலூன்றி நின்று புதுமையை நோக்குவதாக அமைந்துள்ள இச் சிற்றிதழ்கள் நூலக நிறுவனத்தால் ஆவணப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,… Continue reading நூலகத்தில் “செங்கதிர்” சஞ்சிகை

நூலக நலன்விரும்பிகளின் நூலக விஜயம் – 11.06.2023

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனத்தின் நலன்விரும்பிகளுள் ஒருவரான வானொலி – திரைப்படக்கலைஞர், தொலைக்காட்சி அறிவிப்பாளர், மேடை நிகழ்ச்சித் தொகுப்பாளர், நடன ஆசிரியை, பாடகர்  என பல பெருமைக்குரிய கலைஞர் ஆனந்தராணி, பாலேந்திரா அவர்கள்  கடந்த 11.06.2023 அன்று நூலக நிறுவனத்தின் யாழ் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார்.   இவர் நூலக நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன் நூலக செயற்பாடுகளின் போக்கு தொடர்பிலும் கலந்துரையாடினார். மேலும் Sri Lankan Airlines விமானங்களில் முதன் முதலாக பல வருடங்கள் ஒலித்த தமிழ்… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக விஜயம் – 11.06.2023