நூலக நிறுவனம் (Noolaham Foundation) என்றுமே எரிக்கமுடியாத மின்னலை நூலகம்

Published on Author Loashini Thiruchendooran

தெற்காசியாவின் அறிவுக்களஞ்சியம் எனப் போற்றப்பட்ட யாழ் நூலகமானது எரியூட்டப்பட்டு இவ்வருடத்துடன் 44 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதுபோன்ற ஒரு அசம்பாவிதம் எதிர்காலத்தில் இடம்பெறக்கூடாது என்பதை முன்னிறுத்தி உதயமாகியதே நூலக நிறுவனமாகும். நூலக நிறுவனம் (Noolaham Foundation) என்பது இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எல்லா வகையான அறிவுத் தொகுதிகளையும் மரபுரிமைகளையும் மின்வடிவாக்கி, பாதுகாத்து, அவற்றை உலகவாழ் மானிடருக்கு www.noolaham.org, www.noolaham.media என்ற இணையத்தளங்கள் மூலம் இலவசமாக வழங்கி வரும் இலாப நோக்கமற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும். 2005 ஆம்… Continue reading நூலக நிறுவனம் (Noolaham Foundation) என்றுமே எரிக்கமுடியாத மின்னலை நூலகம்

2025 ஆம் ஆண்டு அக்கரைப்பற்று புத்தகக் காட்சியில், நூலக நிறுவனத்திற்கு “புத்தகப் பண்பாட்டுக்குப் பங்களித்தமைக்கான சிறப்பு விருது”

Published on Author Loashini Thiruchendooran

உலகின் தமிழறிவுப் பெருங்கடலாக திகழ்ந்த யாழ் நூலகம் கிடைத்தற்கரிய 97000 ஆவணங்களுடன் எரியூட்டப்பட்டு 44 ஆண்டுகள் நிறைவடைகிறது. இவ்வகை அனர்த்கங்களினால் இனியும் அறிவுச்சேகரங்களின் மீட்கமுடியாத அழிவு நிகழக்கூடாது என்ற நோக்கத்தடன்; 2005ஆம் ஆண்டு ‘நூலக நிறுவனம்’ ஆரம்பிக்கப்பட்டது. இது ஈழத்தின் தமிழ் பேசும் சமூகத்தினரின் அறிவு, பண்பாடு, வரலாறு, மரபுகளை பாதுகாக்கும் தனித்துவமான இலாப நோக்கமற்ற தன்னார்வலர்களின் இயக்கமாக செயற்பட்டுவருகின்றது. நூலகம் இன்றைய திகதிவரை 6 மில்லியனுக்கும் மேற்பட்ட பக்கங்களை எண்ணிமவடிவில் காப்பகப்படுத்தி அனைவரும் அணுகக்கூடியவகையில் மின்நூலகமாக… Continue reading 2025 ஆம் ஆண்டு அக்கரைப்பற்று புத்தகக் காட்சியில், நூலக நிறுவனத்திற்கு “புத்தகப் பண்பாட்டுக்குப் பங்களித்தமைக்கான சிறப்பு விருது”

கனடாவிலிருந்து சுகந்தி மார்க்கண்டு அவர்களின் நூலக வருகை

Published on Author Loashini Thiruchendooran

2 0 1 2025, மே மாதம் 05 ஆம் திகதி யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்திற்கு, கனடாவிலிருந்து சுகந்தி மார்க்கண்டு  அவர்கள் வருகை தந்திருந்தார்.  நூலக வலைத்தளத்தையும், அதன் செயல்பாடுகளைப் பற்றிய அடிப்படை அறிவைய ஏற்கனவே பெற்றிருந்த இவர், நூலக நிறுவனத்தின் செயற்பாடுகள், ஆவணப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சமூக அடிப்படையிலான ஆவணப்படுத்தல் முயற்சிகளை நேரடியாக அறிந்துகொள்வதற்காக வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் நிறுவனத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அரிய ஆவணங்களை பார்வையிட்டதுடன், ஓலைச்சுவடிகளை ஆவணப்படுத்தும்… Continue reading கனடாவிலிருந்து சுகந்தி மார்க்கண்டு அவர்களின் நூலக வருகை

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் (National Library and Documentation Services Board) இயக்குனர் பத்மா பண்டாரநாயக்கே மற்றும் அனுராதா தசாநாயக்கே, உதித குணசேகர ஆகியோரது நூலக வருகை

Published on Author Loashini Thiruchendooran

1 0 0 ஏப்ரல் மாதம் 08ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்திற்கு, தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் (National Library and Documentation Services Board) இயக்குனர் பத்மா பண்டாரநாயக்கே மற்றும் அனுராதா தசாநாயக்கே, உதித குணசேகர ஆகியோர் வருகை தந்திருந்தனர். நிறுவனம் சார்ந்த ஆவணமாக்க செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்ட இவர்கள், ஒவ்வொரு துறை சார்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்றிட்டங்கள் சார்ந்த செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடியதுடன் அத்துடன் நிறுவனத்தில்… Continue reading தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் (National Library and Documentation Services Board) இயக்குனர் பத்மா பண்டாரநாயக்கே மற்றும் அனுராதா தசாநாயக்கே, உதித குணசேகர ஆகியோரது நூலக வருகை

வட மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களின் நூலக வருகை

Published on Author Loashini Thiruchendooran

1 0 0 2025, ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்திற்கு, இலங்கையின் வடக்கு மாகாணத்தின் கௌரவ ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் வருகை தந்திருந்தார்.  நிறுவனத்தின் வரவேற்பறையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அரிய ஆவணங்களைப் பார்வையிட்ட இவர், ஓலைச்சுவடிகளை ஆவணப்படுத்துவது தொடர்பில் கூடுதலாக கேட்டறிந்து கொண்டார்.   தொடர்ந்து, நிறுவனத்தின் ஒவ்வொரு துறையினையும் சென்று பார்வையிட்ட போது, துறை சார் செயற்பாடுகள் மற்றும் அதில் காணப்படக்கூடிய தேவைகள் தொடர்பில் அந்தந்த… Continue reading வட மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் அவர்களின் நூலக வருகை

துயர் பகிர்வு : ரவிச்சந்திரநேசன் பொன்னுத்துரை

Published on Author Loashini Thiruchendooran

1 0 0 2008ஆம் ஆண்டிலிருந்து நூலக நிறுவனத்திற்கு ஆவணங்களை வழங்கியும் பின்னர் ஆவணப்படுத்தல் பணிகளுக்கான நன்கொடையினை வழங்கியும் 2021 ஆம் ஆண்டிலிருந்து கனடாவில் நிதிச்சேகரிப்பாளருமாய் பங்களித்த அரசியல், சமூகச் செயற்பாட்டாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான ரவிச்சந்திரநேசன் பொன்னுத்துரை அவர்கள் ஜனவரி 24, 2025 வெள்ளிக்கிழமை இலங்கையில் காலமானார். அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவர்தம் துயரிலும் நூலக நிறுவனம் பங்குகொள்கிறது.

அழிவடைந்து போகும் ஓலைச்சுவடிகளை எண்ணிமப்படுத்தல்.

Published on Author Loashini Thiruchendooran

1 0 1 இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டுவரும் நூலக நிறுவனமானது, அழிந்து போகும் நிலையில் இருக்கும் ஓலைச்சுவடிகளினை எண்ணிமப்படுத்தி வருகின்றது. அந்தவகையில், எண்ணிமப்படுத்தலுக்குத் தேவையான ஓலைச்சுவடிகள் தனிநபர்களிடமிருந்தும், நிறுவனங்களிடமிருந்தும் சேகரிக்கப்பட்டு எண்ணிமைப்படுத்தப்பட்ட பின்னர் அவர்களிடமே கையளிக்கப்படுகின்றன. மூல நன்கொடையாளர்களிடமிருந்து ஓலைச்சுவடிகளை பெற்றுக்கொள்ளும் முறைமை பற்றிய காணொளியின் இணைப்பினை இங்கு காணலாம். ஓலைச்சுவடிகளை பெற்றுக்கொள்ளல் https://youtu.be/pnf6FEMaqlM?si=Hvf5gbQk4LAmXCFu ஓலைச்சுவடிகளின் ஆயுட்காலத்தை அதிகரிக்க, நூலக நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் இம்முயற்சியில் நீங்களும் பங்களிக்கலாம். மேலதிக விடயங்களுக்கு… Continue reading அழிவடைந்து போகும் ஓலைச்சுவடிகளை எண்ணிமப்படுத்தல்.