நூலக நிறுவனத்தின் Digital Library & Archive (Information Architecture) இன் Process Mentor திரு. நடராஜா செல்வராஜா அவர்களின் நூலக வருகை

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

18.09.2024, புதன்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்திற்கு, நூலக நிறுவனச் செயற்பாடுகளுக்கு நீண்ட காலமாகப் பங்களித்து வரும் ஈழத்து நூலகவியலாளரான  திரு. நடராஜா செல்வராஜா அவர்கள் வருகை தந்திருந்தார்.  நூலக நிறுவனம் அதனது ஆவணப்படுத்தல் பணிகள் தொடர்பில் ஏற்கனவே நன்கறிந்த இவர், “எண்ணிம நூலக மற்றும் ஆவணகம் துறை” சார்ந்த அனைத்து முன்னெடுப்புகளிலும் பங்களித்து வருகிறார். ஆவணங்களுக்கான அனுமதி பெறல், அரிய ஆவணங்களின் ஆவணமாக்கம், நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள இதழ்கள், சஞ்சிகைகள் பற்றிய தெளிவுப்படுத்தல் என… Continue reading நூலக நிறுவனத்தின் Digital Library & Archive (Information Architecture) இன் Process Mentor திரு. நடராஜா செல்வராஜா அவர்களின் நூலக வருகை

நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தலில் வட இலங்கை மருத்துவ வரலாறு

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

இலங்கையின் மருத்துவ வரலாறு பல நூற்றாண்டுகளாக பல உள்ளார்ந்த மற்றும் வெளிப்புற காரணிகளின் தொகுப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது, அவற்றில் சில நாட்டிற்கு தனித்துவமானவை. அத்தகைய மருத்துவ வரலாறு, வட இலங்கையைப் பொறுத்தவரையில் எத்தகைய முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது என்பதனை ஆவணப்படுத்துவதற்காக நூலக நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்றிட்டமே “வட இலங்கை மருத்துவ வரலாற்று ஆவணமாக்கம்” (History of Medicine in Northern Sri Lanka Collection) . பொதுவாக மக்களுக்கு வரலாற்றின் முக்கியத்துவம் தெரியாதிருப்பினும், இச்செயற்றிட்டம் மருத்துவ வரலாறு மற்றும்… Continue reading நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தலில் வட இலங்கை மருத்துவ வரலாறு

இந்தியாவின் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் பணிப்பாளர் திரு. சுந்தர் கணேசன் உள்ளிட்ட குழுவினரின் நூலக வருகை

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

11 செப்டம்பர் 2024, புதன்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு, தென்னிந்திய ஆய்வுகளுக்கான ஒரு வள மற்றும் ஆராய்ச்சி மையமாகவும், மனிதநேயம், சமூக அறிவியல் முதல் பிரபலமான கலாச்சாரம் வரை பல்வேறு துறைகளை உள்ளடக்கிய ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் பணிப்பாளர், திரு. சுந்தர் கணேசன், உதவி பணிப்பாளர்களான, எஸ்.முத்து மாலதி, எம்.மணிகண்ட சுப்பு ஆகியோர் வருகை தந்திருந்தனர்.   நூலக நிறுவனம் அதனது ஆவணப்படுத்தல் பணிகள் தொடர்பில் ஏலவே நன்கறிந்த இவர்கள்,… Continue reading இந்தியாவின் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் பணிப்பாளர் திரு. சுந்தர் கணேசன் உள்ளிட்ட குழுவினரின் நூலக வருகை

நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

05 செப்டம்பர் 2024, வியாழக்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு, 2024ஆம் ஆண்டிலிருந்து பிரித்தானியா செப்டர் ஊடாக நூலகத்தின் செயல்பாட்டு சார்ந்து பங்களிப்பு செய்து வரும் கனகலிங்கம் மோகனகுமார் அவரது மனைவி பிரேமதர்ஷினி கனகலிங்கம் மற்றும் அவரோடு யாழ்ப்பாணத்திலிருந்து வைஷ்ணவி ஆகியோர் வருகை தந்திருந்தனர். இவர்கள் நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன் ஒவ்வொரு துறை சார்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்றிட்டங்கள் மற்றும் அவை சார் அடைவுகள் என்பன தொடர்பிலும் கலந்துரையாடினார்.  … Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை

நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

06 செப்டம்பர் 2024, வெள்ளிக்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு, இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து BHEEM MOVIES இனது Filmmaker, Photographer உம் இதுவரை 15 ஆவணப்படங்கள் இயக்கியிருக்கின்ற தமிழகத்தின் முக்கிய ஸ்ட்ரீட் போட்டோகிராஃபர்களில் ஒருவரான ஆர்.ஆர். சீனிவாசன் இராமமூர்த்தி மற்றும் பாடலாசிரியர், பெண்ணிய ஆர்வலர், திரைப்பட இயக்குநர், சித்த மருத்துவர் என பன்முகங்களுடனும் சமகாலத்தில் எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராகவும் இயங்கிவருகின்ற குட்டி ரேவதி என அழைக்கப்படும் ரேவதி சுயம்புலிங்கம் ஆகியோர்… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை

நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

03 செப்டம்பர் 2024, செவ்வாய்க்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு அவுஸ்திரேலியாவிலிருந்து ராஜ் சிவநாதன் வருகை தந்திருந்தார். இவர் நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், நிறுவனம் எவ்வாறு செயற்படுகிறது, நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்றிட்டங்கள் மற்றும் அவை சார் அடைவுகள் என்பன தொடர்பில் கலந்துரையாடினார். அத்துடன் நிறுவனத்தில் ஆவணப்படுத்தப்பட்டுப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பழமையான ஆவணங்களையும் பார்வையிட்டார். மேலும், நிறுவனம்சார் ஆவணமாக்கலில் பாடசாலைகளை ஆவணப்படுத்துவது தொடர்பில் சில பாடசாலைகளை பரிந்துரை செய்ததுடன், நூலக… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை

யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மாணவர்களுக்கான உள்ளகப் பயிற்சியின் இறுதி நாள் நிகழ்வு – 2024

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட வரலாற்றுத்துறையை சேர்ந்த 13 மாணவர்களின் உள்ளக பயிற்சி நிறைவின் இறுதி நாள் நிகழ்வு கடந்த 12.08.2024 திங்கட்கிழமை மாலை 2.30 மணிக்கு யாழ் சுண்டிக்குழியில் அமைந்துள்ள நூலக நிறுவனத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான திருமதி சாந்தினி அருளானந்தம் , வரலாற்றுத்துறையை சேர்ந்த 13 மாணவர்கள், நூலக நிறுவன பிரதம நிறைவேற்று அலுவலர், துறை சார் தலைவர்கள் மற்றும் நூலகப் பணியாளர்களும் கலந்துகொண்டனர். நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட… Continue reading யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மாணவர்களுக்கான உள்ளகப் பயிற்சியின் இறுதி நாள் நிகழ்வு – 2024