நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

03 செப்டம்பர் 2024, செவ்வாய்க்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு அவுஸ்திரேலியாவிலிருந்து ராஜ் சிவநாதன் வருகை தந்திருந்தார்.

10இவர் நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், நிறுவனம் எவ்வாறு செயற்படுகிறது, நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்றிட்டங்கள் மற்றும் அவை சார் அடைவுகள் என்பன தொடர்பில் கலந்துரையாடினார். அத்துடன் நிறுவனத்தில் ஆவணப்படுத்தப்பட்டுப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பழமையான ஆவணங்களையும் பார்வையிட்டார்.

மேலும், நிறுவனம்சார் ஆவணமாக்கலில் பாடசாலைகளை ஆவணப்படுத்துவது தொடர்பில் சில பாடசாலைகளை பரிந்துரை செய்ததுடன், நூலக நிறுவனத்தின் ஆவணமாக்கல் செயற்பாட்டிற்கு தன்னால் இயன்ற பங்களிப்பினை வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார்.

04 09

இவர்களுடனான சந்திப்பில் நூலக நிறுவனத்தின் ஆளுகைச் சபை உறுப்பினரான சசீவன் கணேசானந்தன், நூலக பிரதம நிறைவேற்று அலுவலர் மற்றும் நிறுவனத்தின் ஏனைய பணியாளர்களும் இணைந்து கொண்டனர்.

11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *