நூலக நலன்விரும்பிகளின் நூலக விஜயம் – 26.05.2023

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனத்தின் ஆளுகைச் சபை உறுப்பினரான சசீவன் கணேசானந்தன் மற்றும் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், மனித உரிமைகள் சட்டத்தரணி மற்றும் மனித உரிமைகள் ஆர்வலரான அம்பிகா சத்குணநாதன் ஆகியோர் கடந்த 26.05.2023 அன்று நூலக நிறுவனத்தின் யாழ் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார்கள். இவர்கள் இருவரும் நூலக நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன் குறிப்பாக அம்பிகா சத்குணநாதன் அவர்கள் நூலக நிறுவனத்தின் சட்ட ரீதியான பிரச்சினைகள், தூதரகங்களுடன் எவ்வாறு ஒருங்கிணந்து செயற்படலாம், ஏனைய… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக விஜயம் – 26.05.2023

வன்னி புத்தகத் திருவிழாவில் நூலக நிறுவன செயற்பாடுகள் – 2023

Published on Author Loashini Thiruchendooran

தமிழ்மாமன்றத்தின் 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜூன் 24,25 ஆம் திகதிகளில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நடாத்தப்பட்ட வன்னியின் புத்தகப் பண்பாட்டு திருவிழாவில் நூலக நிறுவனமும் கலந்து கொண்டது. இந்நிகழ்வில் நூலக நிறுவனம் சார்பில் சிறகுகள் அமைய வன்னி பிராந்திய செயற்பாட்டாளர்கள்  கலந்து கொண்டதுடன்  பார்வையாளர்கள் மத்தியில் நூலக நிறுவனம் தொடர்பிலான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிப்பு, நூலகத்தின் ஈ-பள்ளிக்கூடம் செயற்றிட்டம் தொடர்பான விளக்கமளிப்பு மற்றும் நூலக நிறுவன செயற்பாடுகள் தொடர்பான விளக்கமளிப்பு என்பன இடம்பெற்றன. குறிப்பாக… Continue reading வன்னி புத்தகத் திருவிழாவில் நூலக நிறுவன செயற்பாடுகள் – 2023