நூலக நிறுவனம் (Noolaham Foundation) என்றுமே எரிக்கமுடியாத மின்னலை நூலகம்

Published on Author Loashini Thiruchendooran

தெற்காசியாவின் அறிவுக்களஞ்சியம் எனப் போற்றப்பட்ட யாழ் நூலகமானது எரியூட்டப்பட்டு இவ்வருடத்துடன் 44 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதுபோன்ற ஒரு அசம்பாவிதம் எதிர்காலத்தில் இடம்பெறக்கூடாது என்பதை முன்னிறுத்தி உதயமாகியதே நூலக நிறுவனமாகும். நூலக நிறுவனம் (Noolaham Foundation) என்பது இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எல்லா வகையான அறிவுத் தொகுதிகளையும் மரபுரிமைகளையும் மின்வடிவாக்கி, பாதுகாத்து, அவற்றை உலகவாழ் மானிடருக்கு www.noolaham.org, www.noolaham.media என்ற இணையத்தளங்கள் மூலம் இலவசமாக வழங்கி வரும் இலாப நோக்கமற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும். 2005 ஆம்… Continue reading நூலக நிறுவனம் (Noolaham Foundation) என்றுமே எரிக்கமுடியாத மின்னலை நூலகம்

2025 ஆம் ஆண்டு அக்கரைப்பற்று புத்தகக் காட்சியில், நூலக நிறுவனத்திற்கு “புத்தகப் பண்பாட்டுக்குப் பங்களித்தமைக்கான சிறப்பு விருது”

Published on Author Loashini Thiruchendooran

உலகின் தமிழறிவுப் பெருங்கடலாக திகழ்ந்த யாழ் நூலகம் கிடைத்தற்கரிய 97000 ஆவணங்களுடன் எரியூட்டப்பட்டு 44 ஆண்டுகள் நிறைவடைகிறது. இவ்வகை அனர்த்கங்களினால் இனியும் அறிவுச்சேகரங்களின் மீட்கமுடியாத அழிவு நிகழக்கூடாது என்ற நோக்கத்தடன்; 2005ஆம் ஆண்டு ‘நூலக நிறுவனம்’ ஆரம்பிக்கப்பட்டது. இது ஈழத்தின் தமிழ் பேசும் சமூகத்தினரின் அறிவு, பண்பாடு, வரலாறு, மரபுகளை பாதுகாக்கும் தனித்துவமான இலாப நோக்கமற்ற தன்னார்வலர்களின் இயக்கமாக செயற்பட்டுவருகின்றது. நூலகம் இன்றைய திகதிவரை 6 மில்லியனுக்கும் மேற்பட்ட பக்கங்களை எண்ணிமவடிவில் காப்பகப்படுத்தி அனைவரும் அணுகக்கூடியவகையில் மின்நூலகமாக… Continue reading 2025 ஆம் ஆண்டு அக்கரைப்பற்று புத்தகக் காட்சியில், நூலக நிறுவனத்திற்கு “புத்தகப் பண்பாட்டுக்குப் பங்களித்தமைக்கான சிறப்பு விருது”

நூலக நிறுவனப் பணியாளர்கள் நால்வர் “நூலக தகவல் விஞ்ஞானத்தில் உயர் டிப்ளோமா” பட்டத்தை பெற்றுக்கொண்டனர்

Published on Author Loashini Thiruchendooran

1 0 0 கடந்த 28.06.2024 வெள்ளிக்கிழமை கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரியில், இலங்கை நூலகச் சங்கத்தால் ஒழுங்குப்படுத்தப்பட்ட நூலக தகவல் விஞ்ஞானத்தில் உயர் டிப்ளோமாவினை பூர்த்தி செய்தவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் நான்கு நூலகப் பணியாளர்கள் பட்டம் பெற்றிருக்கின்றனர். நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலக மற்றும் ஆவணகத்துறையின் கீழ் பணிபுரிந்து வரும் புகழினி பிரியலக்சன், மதுராங்கி விநாயகமூர்த்தி, அபர்ணாங்கி சிவதீபன், விக்னேஸ்வரன் குருபரன் ஆகியோரே இப்பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றுள்ளனர். நூலக நிறுவனத்தின் பணியாளர்களின் தொழில்… Continue reading நூலக நிறுவனப் பணியாளர்கள் நால்வர் “நூலக தகவல் விஞ்ஞானத்தில் உயர் டிப்ளோமா” பட்டத்தை பெற்றுக்கொண்டனர்

என்றும் எரிக்க முடியாத மின் அலை நூலகம் – 2024

Published on Author Loashini Thiruchendooran

0 0 0 வாசிப்பு, வெளியீடு மற்றும் பதிப்புரிமை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு வருடாந்திர நிகழ்வு “சர்வதேச புத்தக தினம்”. புத்தகங்களைப் படிக்க மக்களை ஊக்குவிப்பதையும், வெளியீட்டை ஊக்குவிப்பதையும், எழுத்தறிவை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்ட இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 அன்று அனுசரிக்கப்படுகிறது. இவ்வாண்டு வாசிப்பு ஆர்வத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதோடு   எல்லா வயதினரும்  புத்தகங்களுடன் இணைவதற்கு  வழிகளைக் கண்டறிய ஊக்குவிக்கும் வகையில் “உங்கள் வழியைப் படியுங்கள்” என்ற… Continue reading என்றும் எரிக்க முடியாத மின் அலை நூலகம் – 2024

நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 20.03.2024

Published on Author Loashini Thiruchendooran

0 0 0 20 மார்ச் 2024, புதன்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு சுவிட்சர்லாந்தில் இருந்து லாவண்யா இலக்சுமணன் அவர்கள் வருகை தந்திருந்தார்.           இவர் நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், நிறுவனம் எவ்வாறு செயற்படுகிறது, நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்றிட்டங்கள் மற்றும் அவை சார் அடைவுகள், நிறுவனத்தினது எதிர்காலத் திட்டங்கள் என்பன தொடர்பில் கலந்துரையாடினார். அத்துடன் நிறுவனத்தில் ஆவணப்படுத்தப்பட்டுப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பழமையான ஆவணங்களையும்… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 20.03.2024

நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 19.03.2024

Published on Author Loashini Thiruchendooran

0 0 0 19 மார்ச் 2024, செவ்வாய்க்கிழமை அன்று யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்குக் கனடாவிலிருந்து இ. இளஞ்செழியன் அவர்கள் வருகை தந்திருந்தார்.        இவர் நூலக நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், நிறுவனத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பழமையான ஆவணங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினார். மேலும் நிறுவனத்தின் செயற்பாட்டுசார் வளர்ச்சியில் தானும் பங்களிப்பதாயும் குறிப்பிட்டு இருந்தார். இவருடனான சந்திப்பில் நூலக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அலுவலகர் திருமதி. றஞ்சுதமலர்… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 19.03.2024

நூலகத்தில் திருகோணமலை மண்ணின் – “மலைமுரசு”

Published on Author Loashini Thiruchendooran

0 0 0 திருகோணமலையிலிருந்து வாராந்தம் வெளிவந்த ‘மலைமுரசு’ பத்திரிகையின் இதழ்களை இப்போது நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் பார்வையிடமுடியும். இப் பத்திரிகை வார இதழாக 29.07.2012 வெளிவர ஆரம்பித்தது. 22.04.2016 வரை வெளிவந்த இப்பத்திரிகையின் 180 இதழ்களும் முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டு நூலக வலைத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன.  திருகோணமலை சார்ந்த செய்திகள், ஆக்கங்கள், கட்டுரைகள், ஆய்வுகள் மற்றும் கலாசார விடயங்கள் என பல்வகைத்தன்மை கொண்ட விடயங்களை உள்ளடக்கங்களாகக் கொண்டு இவ்விதழ்கள் வெளிவந்துள்ளன.   இக்காத்திரமான பத்திரிகையின் உரிமையாளரும், பிரதம… Continue reading நூலகத்தில் திருகோணமலை மண்ணின் – “மலைமுரசு”