நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 20.03.2024

Published on Author Loashini Thiruchendooran

20 மார்ச் 2024, புதன்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு சுவிட்சர்லாந்தில் இருந்து லாவண்யா இலக்சுமணன் அவர்கள் வருகை தந்திருந்தார். 

IMG_2629 IMG_2631

IMG_2632 IMG_2634 IMG_2635

IMG_2633 IMG_2635

IMG_2636 1

இவர் நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், நிறுவனம் எவ்வாறு செயற்படுகிறது, நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்றிட்டங்கள் மற்றும் அவை சார் அடைவுகள், நிறுவனத்தினது எதிர்காலத் திட்டங்கள் என்பன தொடர்பில் கலந்துரையாடினார். அத்துடன் நிறுவனத்தில் ஆவணப்படுத்தப்பட்டுப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பழமையான ஆவணங்களையும் பார்வையிட்டார். மேலும் நூலக நிறுவனத்தின் செயற்பாடுகளுக்குத் தன்னாலான பங்களிப்பை வழங்குவதாயும் குறிப்பிட்டிருந்தார்.

இவருடனான சந்திப்பில் நூலக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அலுவலகர், எண்ணிமமாக்கமும் எண்ணிமப் பாதுகாப்புச் செயன்முறை பணியாளர்கள், எண்ணிம நூலகப் பணியாளர்கள் மற்றும் நூலக நிறுவனத்தின் ஏனைய பணியாளர்களும் இணைந்து கொண்டனர்.