2024 யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழாவின் மூன்றாவது நாளில் “நூலக நிறுவனம்”

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

ஆவணப்படுத்தலில் 20 ஆண்டுகளை பூர்த்தி செய்யவுள்ள நூலக நிறுவனத்தின் காட்சியறை, யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழாவின் மூன்றாவது நாளும் காலை 10 மணி முதல் இரவு 8.00 மணி வரை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.       நூலக நிறுவனம் பற்றித் தெரிந்த பலரும் வருகை தந்திருந்ததுடன் நிறுவனத்தின் செயற்பாடுகள் சார்ந்து மேலதிக விடயங்களையும் கேட்டறிந்து கொண்டனர். குறிப்பாக பலரும் தங்களது பின்னூட்டல்களை வழங்கியிருந்த நிலையில், வலைத்தளத்தில் சேர்க்கும் படி சில விடயங்களையும் பரிந்துரை செய்திருந்தனர். குறிப்பாக, பள்ளிக்கூட… Continue reading 2024 யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழாவின் மூன்றாவது நாளில் “நூலக நிறுவனம்”

2024 யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழாவின் இரண்டாவது நாளில் “நூலக நிறுவனம்”

Published on Author Loashini Thiruchendooran

யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2024 இன் இரண்டாவது நாளும், நூலக நிறுவனமானது ஆவணமாக்கல் முயற்சிகளை சமூகத்திற்கு அறியச் செய்யும் நோக்கில் மும்முரமாக ஈடுபட்டிருந்தது. பெருமளவிலான சமூக ஆர்வலர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டிருந்ததுடன், நூலக நிறுவன காட்சியறையினையும் நேரடியாகப் பார்வையிட வந்திருந்தனர். வந்திருந்தோரில் அதிகமானோருக்கு நூலக நிறுவனம் மற்றும் www.noolaham.org வலைத்தளம் பற்றி ஏற்கனவே தெரிந்திருந்தமை மகிழ்ச்சியளித்தது. மேலும், நூலக வலைத்தளங்களைப் பயன்படுத்தியே தேவையான ஆவணங்களை தரவிறக்கம் செய்து கல்வி மற்றும் ஆய்வுத் தேவைகளுக்கு பயன்படுத்துவதாகவும், “வாசிப்பிற்கும்… Continue reading 2024 யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழாவின் இரண்டாவது நாளில் “நூலக நிறுவனம்”

2024 யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழாவின் முதலாவது நாளில் “நூலக நிறுவனம்”

Published on Author Loashini Thiruchendooran

09.08.2024 அன்று காலை 10.00 மணி அளவில் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் ஆரம்பமான யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2024 இல் நூலக நிறுவனமும் கலந்து கொண்டிருந்தது.   புத்தகத் திருவிழாவின் முதல் நாள், * பாடசாலை மாணவர்கள், * எழுத்தாளர்கள், * ஆய்வாளர்கள், * வாசகர்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர். குறிப்பாக நூலக நிறுவனத்தின் காட்சியறையில் 1900ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இதழ்கள், நூல்கள், பத்திரிகைகள் போன்ற சில அரிய ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.  … Continue reading 2024 யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழாவின் முதலாவது நாளில் “நூலக நிறுவனம்”

2024 நெடுவூர்த் திருவிழாவில் நூலக நிறுவனம்

Published on Author Loashini Thiruchendooran

உலகம் முழுவதும் பரந்து வாழும் நெடுந்தீவின் உறவுகளை ஒன்றிணைத்து, பிரதேச அபிவிருத்தியினையும் உள்ளூரில் வாழும் உறவுகளினது வாழ்வியலையும் மேம்படுத்தும் நோக்கில், “மீண்டும் ஊருக்கு போகலாம்” எனும் தொனிப்பொருளில், நெடுவூர்த் திருவிழா ஆகஸ்ட் 4 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை நெடுந்தீவில் முன்னெடுக்கப்பட்டது. கண்காட்சி, புத்தக வெளியீடு, போட்டிகளும் பரிசளிப்பும், பாரம்பரிய விளையாட்டுக்கள், கொண்டாட்டங்கள் என பல்துறை சார்ந்த நிகழ்வுகளைக் கொண்ட இத்திருவிழாவில் கடந்த 7ஆம் திகதி நூலக நிறுவனப் பணியாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.  … Continue reading 2024 நெடுவூர்த் திருவிழாவில் நூலக நிறுவனம்

திருகோணமலை பிராந்திய ஆவணமாக்கலுக்கான வலுவூட்டல் கலந்துரையாடல்

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனத்தின் பிராந்திய ஆவணமாக்கல் முயற்சியின் ஒரு பகுதியான திருகோணமலை பிராந்திய ஆவணப்படுத்தல் செயற்றிட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. திருகோணமலை பிராந்தியம் சார்ந்து காணப்படக்கூடிய மாவட்டத்தின் வரலாறு, அங்கு வாழும் மக்களின் பாரம்பரியங்கள், பழக்கவழக்கங்கள், கலை கலாசாரக் கூறுகள், சமூகக் கட்டமைப்புக்கள் மற்றும் சமூக நிறுவனங்கள் போன்றனவற்றை ஆவணப்படுத்துவதை நோக்காகக் கொண்ட இச்செயற்றிட்டத்தை, நிதிப்பற்றாக்குறையால் இடைநிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், இதன் தொடர்ச்சித் தன்மைக்கு ஆதரவளிக்கும் முகமாக கடந்த மாதம் 28 ஜூலை… Continue reading திருகோணமலை பிராந்திய ஆவணமாக்கலுக்கான வலுவூட்டல் கலந்துரையாடல்

நூலக நிறுவனத்தின் வாசிகசாலை செயற்றிட்டம்

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனம் பல்வேறு விதமான செயற்றிட்டங்களுக்கூடாக ஈழத்துத் தமிழ் பேசும் சமூகங்களினுடைய ஆவணங்களை ஆவணப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றது. 2005 முதல் இன்று வரையான காலங்களில் நூலக நிறுவனம் பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகள் ஆவணப்படுத்தலை மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் ஈழத்தின் தமிழ் பேசும் சமூகங்களில் இருந்து வெளிவந்த ஆரம்ப கால பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக நாளாந்தம் தமிழ் பேசும் சமூகங்களில் இருந்து வெளிவருகின்ற பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகள் ஆவணப்படுத்தல் என்பது முக்கிய… Continue reading நூலக நிறுவனத்தின் வாசிகசாலை செயற்றிட்டம்

YGC புத்தாக்கத் திருவிழா 2024 இல் “நூலக நிறுவனம்”

Published on Author Loashini Thiruchendooran

ஆகஸ்ட் மாதம் 01, 02, 03 மற்றும் 04 ஆம் திகதிகளில்  காலை 9.00 மணிமுதல், யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெற்ற “YGC புத்தாக்கத் திருவிழா 2024” இல் நூலக நிறுவனமும் பங்குபற்றியது.  புத்தாக்க, தொழில்நுட்பம் மற்றும் முயற்சியாண்மை அனைத்தும் சந்திக்கும் ஒரு மிகப்பெரிய கொண்டாட்டமான இந்நிகழ்வில் நூலகத்தின் ஆவணப்படுத்தலில் புத்தாக்க, தொழில்நுட்பங்களின் பயன்பாடு எவ்வாறாக உள்வாங்கப்பட்டு இருக்கின்றது என்பது பற்றி சமூகத்திற்கு கொண்டு சேர்க்க இது ஒரு வாய்ப்பாக அமைந்திருந்தது. நூலக நிறுவனம் சார்பில்… Continue reading YGC புத்தாக்கத் திருவிழா 2024 இல் “நூலக நிறுவனம்”