திருகோணமலை மாவட்ட எழுத்தாளர்களின் புத்தக கண்காட்சியில் நூலக நிறுவனம் – 2023

Published on Author Loashini Thiruchendooran

ஒக்ரோபர் மாதம் 22 ஆம் திகதி காலை 9.00 மணிமுதல், திருகோணமலை பொதுநூலக கேட்போர் கூடத்தில், திருகோணமலை நகராட்சி மன்ற நூலகத்தின் வாசகர் வட்டம் ஒழுங்கமைத்த “திருகோணமலை மாவட்ட எழுத்தாளர்களின் புத்தக கண்காட்சி 2023” இல் நூலக நிறுவனமும் பங்குபற்றியது.  புத்தக மாதத்தை முன்னிட்டு இடம்பெற்ற இக்கண்காட்சியில் திருகோணமலை மாவட்டத்தினை சேர்ந்த எழுத்தாளர்களின் நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், உள்ளுர் உணவு உற்பத்தி, சுயதொழில் உற்பத்தி கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வும் இடம்பெற்றது. ஆரம்பத்தில் புத்தகக் கண்காட்சி பற்றிய ஒரு… Continue reading திருகோணமலை மாவட்ட எழுத்தாளர்களின் புத்தக கண்காட்சியில் நூலக நிறுவனம் – 2023

வென்மேரி அறக்கட்டளையின் 2023 ஆம் ஆண்டிற்கான “அருட்தந்தை திமோதி எம்.எப் லோங் ஞாபகார்த்த விருதினை” பெற்றுக்கொண்ட நூலக நிறுவனம்

Published on Author Loashini Thiruchendooran

எமது இனத்திற்கும் மொழிக்கும் அரும்பணி ஆற்றிய மாமணிகளை இனங்கண்டு மதிப்பளித்து, பாராட்டி, வாழ்த்தி ஏனையோர்க்கும் முன்மாதிரியாகத் திகழும் அவர்களை மண்ணின் மாமணிகளாகப் பதிவு செய்யும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட வென்மேரி அறக்கட்டளையின்  இரண்டாவது சர்வதேச விருதுகள் வழங்கும் விழா ஆவணி மாதம் ஆறாம் திகதி 2023ம் ஆண்டு (06/08/2023) பிரான்ஸ் நாட்டில் இடம்பெற்றது. வென்மேரி அறக்கட்டளையின் மதிப்புமிக்க நிர்வாகக் குழுவினால் தெரிவு செய்யப்பட்ட, இவ் ஆண்டிற்கான சாதனையாளர்களை அறிமுகம் செய்வதில் வென்மேரி அறக்கட்டளை ஆவணப்படுத்தல் பணிகளை செம்மையாக செய்து… Continue reading வென்மேரி அறக்கட்டளையின் 2023 ஆம் ஆண்டிற்கான “அருட்தந்தை திமோதி எம்.எப் லோங் ஞாபகார்த்த விருதினை” பெற்றுக்கொண்ட நூலக நிறுவனம்

வன்னி புத்தகத் திருவிழாவில் நூலக நிறுவன செயற்பாடுகள் – 2023

Published on Author Loashini Thiruchendooran

தமிழ்மாமன்றத்தின் 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜூன் 24,25 ஆம் திகதிகளில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நடாத்தப்பட்ட வன்னியின் புத்தகப் பண்பாட்டு திருவிழாவில் நூலக நிறுவனமும் கலந்து கொண்டது. இந்நிகழ்வில் நூலக நிறுவனம் சார்பில் சிறகுகள் அமைய வன்னி பிராந்திய செயற்பாட்டாளர்கள்  கலந்து கொண்டதுடன்  பார்வையாளர்கள் மத்தியில் நூலக நிறுவனம் தொடர்பிலான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிப்பு, நூலகத்தின் ஈ-பள்ளிக்கூடம் செயற்றிட்டம் தொடர்பான விளக்கமளிப்பு மற்றும் நூலக நிறுவன செயற்பாடுகள் தொடர்பான விளக்கமளிப்பு என்பன இடம்பெற்றன. குறிப்பாக… Continue reading வன்னி புத்தகத் திருவிழாவில் நூலக நிறுவன செயற்பாடுகள் – 2023

ஏறாவூர் புத்தகக் கொண்டாட்டத்தில் நூலக நிறுவன செயற்பாடுகள் – 2023

Published on Author Loashini Thiruchendooran

ஏறாவூர் வாசிப்பு வட்டமும் ஏறாவூர் நகரசபையும் இணைந்து நடத்திய ஏறாவூர் புத்தகக் கொண்டாட்டம் 05ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை ஏறாவூர் வாவிக்கரையோரம் அமைந்துள்ள டாக்டர் அஹமட் பரீட் விளையாட்டு மைதானத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றது. நூலக நிறுவனம் சார்பில் இந்நிகழ்வில் மட்டக்களப்பு அலுவலகப் பணியாளரான ரிஃப்கான் அவர்கள் கலந்துகொண்டதுடன் பார்வையாளர்கள் மத்தியில் நூலக நிறுவனம் தொடர்பிலான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பு, முஸ்லிம் எஃப்பமேரா செயற்றிட்டம் பற்றிய விளக்கமளிப்பு, மாணவர்களுக்கு ஈ-பள்ளிக்கூடம் தொடர்பான விளக்கமளிப்பு, நூலக நிறுவன செயற்பாடுகள்… Continue reading ஏறாவூர் புத்தகக் கொண்டாட்டத்தில் நூலக நிறுவன செயற்பாடுகள் – 2023

ஏறாவூர் புத்தகக் கொண்டாட்டத்தில் நூலக நிறுவனம் – 2023

Published on Author Loashini Thiruchendooran

ஏறாவூர் வாசிப்பு வட்டமும் ஏறாவூர் நகரசபையும் இணைந்து நடத்தும் ஏறாவூர் புத்தகக் கொண்டாட்டம் 05ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை ஏறாவூர் வாவிக்கரையோரம் அமைந்துள்ள டாக்டர் அஹமட் பரீட் விளையாட்டு மைதானத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. தமிழ், முஸ்லிம், சிங்கள பாரம்பரிய கலைகள், புத்தக வெளியீடுகள், ஆய்வுக் கருத்தரங்குகள், திரையிடுதல், உரையாடல்கள், சிறுவர்களுக்கான தனி அரங்குகள், சமகால தமிழ், சிங்கள இலக்கியங்கள், சிங்கள சினிமாக்கள், சமூகங்களுக்கிடையிலான ஆரோக்கியமான உரையாடல்கள், வாசிப்பை மேம்படுத்தும் வகையிலான மாணவர்களுக்கான நிகழ்வுகள்,… Continue reading ஏறாவூர் புத்தகக் கொண்டாட்டத்தில் நூலக நிறுவனம் – 2023

மட்டக்களப்பு புத்தகத் திருவிழாவில் நூலக நிறுவனம் – 2023

Published on Author Loashini Thiruchendooran

கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மட்டக்களப்பு அலுவலகமும் மட்டக்களப்பு மாநகர பொது நூலகமும் இணைந்து கடந்த ஏப்ரல் மாதம் 28,29,30 ஆந் திகதிகளில் முற்பகல் 09:15 மணி தொடக்கம் மாலை 07:15 மணி வரைக்கும் மட்டுநகர் காந்தி பூங்காவிற்கு அருகிலுள்ள வாவிக்கரையினை அண்டியுள்ள பொது நூலக வளாகத்தில் நடத்திய மட்டக்களப்பு புத்தகத் திருவிழாவில் நூலக நிறுவனமும் பங்குபற்றியது.              சர்வதேச புத்தகத் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற இக்கண்காட்சியில் மட்டக்களப்பிலிருந்து வெளிவந்துள்ள நூல்கள், சஞ்சிகைகள்,… Continue reading மட்டக்களப்பு புத்தகத் திருவிழாவில் நூலக நிறுவனம் – 2023

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொழிற்சந்தையில் நூலக நிறுவனம்

Published on Author Loashini Thiruchendooran

03.03.2023 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தொழிற்சந்தையில் நூலக நிறுவனமும் கலந்து கொண்டது. பெருமளவிலான தொழில் நிறுவனங்கள் பங்குகொண்ட இத்தொழிற் சந்தையில் நூலக நிறுவனம் சார்பில் நிறுவன பிரதம நிறைவேற்று அலுவலகர் றஞ்சுதமலர் நந்தகுமார் அவர்கள் கலந்துகொண்டு தொழில் வாய்ப்புகள் பற்றிய விளக்கத்தை வழங்கினார். இந்நிகழ்வில் 100 இற்கும் மேற்பட்ட தொழில் தேடுநர்கள் நூலக நிறுவனம் மற்றும் அதனது செயற்பாடுகள் பற்றி அறிந்து கொண்டதுடன் தம்மை பதிவு செய்து கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.       … Continue reading யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொழிற்சந்தையில் நூலக நிறுவனம்