நூலக நிறுவனப் பணியாளர்கள் நால்வர் “நூலக தகவல் விஞ்ஞானத்தில் உயர் டிப்ளோமா” பட்டத்தை பெற்றுக்கொண்டனர்

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

கடந்த 28.06.2024 வெள்ளிக்கிழமை கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரியில், இலங்கை நூலகச் சங்கத்தால் ஒழுங்குப்படுத்தப்பட்ட நூலக தகவல் விஞ்ஞானத்தில் உயர் டிப்ளோமாவினை பூர்த்தி செய்தவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் நான்கு நூலகப் பணியாளர்கள் பட்டம் பெற்றிருக்கின்றனர்.

நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலக மற்றும் ஆவணகத்துறையின் கீழ் பணிபுரிந்து வரும் புகழினி பிரியலக்சன், மதுராங்கி விநாயகமூர்த்தி, அபர்ணாங்கி சிவதீபன், விக்னேஸ்வரன் குருபரன் ஆகியோரே இப்பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றுள்ளனர்.

நூலக நிறுவனத்தின் பணியாளர்களின் தொழில் திறனை மேம்படுத்தும் நோக்கோடு 2020ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட ‘பணியாளர்களின் தொழில் மேம்பாடு மற்றும் வலுவூட்டல்’ செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக, நூலக நிறுவனம் இக்கற்கைநெறிக்கான பங்களிப்பினை இப்பணியாளர்களுக்குச் செய்திருந்தது.

WhatsApp Image 2024-07-01 at 16.48.40 WhatsApp Image 2024-06-28 at 16.43.46

Red Gold Drive-by College Graduation Banner (1)

Travel Landscape Photo Collage

 

இப்பணியாளர்கள் நால்வரும் இக்கற்கை நெறியினை பூரணமாக நிறைவு செய்து நூலக தகவல் விஞ்ஞானத்தில் உயர் டிப்ளோமா பட்டம் பெற்றதையிட்டு நூலக நிறுவனமானது மகிழ்ச்சியடைவதுடன், இத்துறையில் மேலும் முன்னேறிச் செல்ல இவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *