2017இல் நூலக நிறுவனம்: ஒரு மீள் பார்வை

Published on Author தண்பொழிலன்

நூலக நிறுவனமானது, வெற்றிகரமாக தனது 14 ஆவது ஆண்டுக்குள் காலடியெடுத்து வைக்கும் இவ்வேளையில், கடந்த 2017இல் சிறப்பாகச் செய்துமுடித்த முக்கியமான மைல்கற்களையும், அடுத்த ஆண்டுக்காகவும் தொடரும் நடவடிக்கைகளையும் கவனப்படுத்த விரும்புகின்றது. நூலகத்தின் 2017ஆம் ஆண்டில் செய்து முடிக்கப்பட்ட முதன்மை அடைவுகளாக பின்வருவனவற்றைப் பட்டியல் படுத்தலாம். 50,000 எழுத்தாவணங்கள் இலக்கைத் தாண்டியது – எண்ணிம நூலகம் ஆவணகத் தளம் வெளியீடும் சுமார் 2,500 பல்லூடகங்களின் சேமிப்பும் 70 இற்கும் மேற்பட்ட வாய்மொழி வரலாறுகள் ஈழத்து நூற்பட்டியலை எண்ணிமப்படுத்தல் – 11,500 நூல் விபரங்கள் மலையகம், திருகோணமலை,… Continue reading 2017இல் நூலக நிறுவனம்: ஒரு மீள் பார்வை

கேப்பாபுலவு : நிலமீட்புக்கான மக்கள் போராட்டத்தின் கதை

Published on Author Noolaham Foundation
கேப்பாபுலவு

கேப்பாபுலவு மக்கள் தமது வாழ்விடங்களை இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து மீளப்பெறுவதற்காக தன்னிச்சையாக உறுதியுடன் வயது பாரபட்ச்சமின்றி இரவு பகலாக போராடி வருகின்றனர். இந்த நூலானது 20 நாட்கள் தாண்டிய அவர்களது அறப்போரட்ட காலத்தில் வரலாற்றுப்பதிவாக வெளிவந்துள்ளது. இதில் கேப்பாபுலவின் வரலாறு, இராணுவ ஆக்கிரமிப்பு , மக்களின் மனநிலைகளை அவரவர்களின் வார்த்தைகளிலும், அறப்போரட்ட நிகழ்வுகளை கால அட்டவணையிலும் விரிவாக பதியப்பட்டிருக்கிறது. ஈழத்தமிழர் வரலாற்றில் இவ்வாறன வரலாற்றுப்பதிவுகள் அவை நிகழும் சமகாலத்தில் எழுதப்படுவது அரிது. இந்த நூலினை நூலகத்தில் வாசிக்கலாம் http://www.noolaham.org/wiki/index.php/கேப்பாபுலவு:_நிலமீட்புக்கான_மக்கள்_போராட்டத்தின்_கதை

நூலகத்தில் திருமறைக் கலாமன்ற வெளியீடுகள்

Published on Author Noolaham Foundation

இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்களின் அரங்கவியல் வரலாற்றில் நீங்காத இடம்பிடித்துள்ள “திருமறைக்கலாமன்றத்தின்” வெளியீடுகளை இப்போது நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் பார்வையிட முடியும். இணைப்பில் நூல்கள்- http://tinyurl.com/nrdegj9 கலைமுகம் இதழ்கள்: http://tinyurl.com/Kalaimugam {{உலகளாவிய ரீதியில் இலங்கைத்தமிழ் பேசும் சமூகம் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கும் அவற்றை அனைவருக்கும் பகிர்வதற்கும் உங்களது ஆவணங்களை நூலகத்துடன் பகிர்ந்துகொள்வதற்கு தொடர்பு கொள்ளுங்கள்- +94 112 363 261/ +94 212 231 292}}

நூலகத்தில் வேலணையூர் தாஸ் படைப்புக்கள்

Published on Author Noolaham Foundation

யாழ் இலக்கியக் குவியத்தின் முன்னணி இலக்கியச் செயற்பாட்டாளரும் கவிஞர், எழுத்தாளர் மற்றும் விமர்சகர், இலக்கிய நிகழ்வுகளின் இணைப்பாளர் ‘வேலணையூர் தாஸ்’ அவர்கள் தனது நூல்களை நூலக நிறுவனத்தில் ஆவணப்படுத்துவதற்கான அனுமதியினை வழங்கியுள்ளார். இணைப்பில் நூல்கள்- http://tinyurl.com/oyrkmm5 {{உலகளாவிய ரீதியில் இலங்கைத்தமிழ் பேசும் சமூகம் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கும் அவற்றை திறந்த அணுக்கத்தில் அனைவருக்கும் பகிர்வதற்கும் உங்களது ஆவணங்களை நூலகத்துடன் பகிர்ந்துகொள்வதற்கு தொடர்பு கொள்ளுங்கள்- +94 112 363 261/ +94 212 231 292}}

நூலகத்தில் ஏட்டண்ணாவியார் செல்லையா சிவநாயகம் படைப்புகள்

Published on Author Noolaham Foundation

மட்டக்களப்பு, சீலாமுனையைச் சேர்ந்த ஏட்டண்ணாவியார் செல்லையா சிவநாயகம் தனது எழுத்தில் அமைந்த நூல்களை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்திப் பகிர்வதற்கான அனுமதியினை அளித்துள்ளார். செ.சிவநாயகம் பல மீளுருவாக்கக் கூத்துக்களை எழுதியுள்ளதுடன் தொடர்ச்சியாக கூத்துச்செயற்பாடுகளிலும் ஈடுபட்டுவருபவர். கூத்து மீளுருவாக்கம் தொடர்பில் ஆரம்பத்திலிருந்து அக்கிராமத்துடன் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றார். இணைப்பில் நூல்கள்- http://tinyurl.com/Sivanayagam {{உலகளாவிய ரீதியில் இலங்கைத்தமிழ் பேசும் சமூகம் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கும் அவற்றை திறந்த அணுக்கத்தில் அனைவருக்கும் பகிர்வதற்கும் உங்களது ஆவணங்களை நூலகத்துடன் பகிர்ந்துகொள்வதற்கு தொடர்பு கொள்ளுங்கள்-… Continue reading நூலகத்தில் ஏட்டண்ணாவியார் செல்லையா சிவநாயகம் படைப்புகள்

நூலகத்தில் நூல் தேட்டம் செல்வராஜாவின் நூல்கள்

Published on Author Noolaham Foundation

நூல் தேட்டம் செல்வராஜா என அனைவராலும் அறியப்படும் திரு. நடராஜா செல்வராஜா நூலக நிறுவனச் செயற்பாடுகளுக்குப் பலகாலமாகப் பங்களித்து வருபவர். அவ்வாறான நேரடிச் செயற்பாட்டாளர்கள் என்றாலும் ஒரு நிறுவனமாக முறைப்படி ஆவணப்படுத்துவதற்கு எழுத்துமூல அனுமதிகளை நூலக நிறுவனம் பெற்று வருகிறது. அவ்வகையில் செல்வராஜா அண்மையில் நூல் தேட்டப் பணிகளுக்காக இலங்கை வந்திருந்தபோது தனது அனுமதியினை நூலக நிறுவனத்திடம் அளித்துள்ளார். ஈழத்து நூலகவியலாளரில் மிக முக்கிய இடம் வகிக்கும் செல்வராஜா ஓர் எழுத்தாளர்; ஆய்வாளர்; பதிப்பாளரும் ஆவார். நூல்… Continue reading நூலகத்தில் நூல் தேட்டம் செல்வராஜாவின் நூல்கள்

நூலகத்தில் கெளரிபாலனின் நூல்கள்

Published on Author Noolaham Foundation

மட்டக்களப்பு குருக்கள்மடத்தினைச் சேர்ந்த சிறுகதை, நாடகம் மற்றும் சிறுவர் இலக்கிய எழுத்தாளர், சமூக ஆய்வாளர் வி.கெளரிபாலன் அவர்கள், தமது நூல்களை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்துவதற்கான அனுமதியினையும், தனது நூல்களையும் நூலக நிறுவனத்திடம் கையளித்துள்ளார். இவரது நூல்களான 1) பறப்பிழந்த வண்ணத்துப் பூச்சிகள், 2) வானுறையும் தெய்வத்தினுள் முதலிய நூல்கள் ஏற்கனவே நூலக நிறுவனத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இணைப்பில் கெளரிபாலனது நூல்கள்- http://tinyurl.com/Gowripalan {{உலகலாவிய ரீதியில் இலங்கைத்தமிழ் பேசும் சமூகம் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கும் அவற்றை திறந்த அணுக்கத்தில்… Continue reading நூலகத்தில் கெளரிபாலனின் நூல்கள்