பல்துறைக் கலைஞர் ஏ. ரீ. பொன்னுத்துரை அவர்களின் நூல்கள் எண்ணிம நூலகத்தில்

Published on Author Noolaham Foundation

ஈழத்துத் தமிழ் உலகில் 1960கள் முதல் தலை சிறந்து விளங்கிய நாடகவியலாளர், எழுத்தாளர் போன்ற பல்துறை விற்பன்னர், மறைந்த கலைப்பேரரசு ஏ.ரீ. பொன்னுத்துரை அவர்களின் எழுத்தில் அமைந்த வெளியிடப்பட்ட நூல்கள் நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் எண்ணிம ஆவணப்படுத்தப்பட்டு மறக்க முடியா வரலாறாக விளங்குகின்றது. கலைப்பேரரசு ஏ.ரீ. பொன்னுத்துரை அவர்களின் நூல்களை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் எண்ணிம ஆவணமாக்கிப் பகிர்வதற்கான அனுமதியினை அவரது மகள் திருமதி தயாபரன் அவர்கள் 31/08/2015 அன்று நூலக நிறுவனத்திடம் கையளித்தார்.… Continue reading பல்துறைக் கலைஞர் ஏ. ரீ. பொன்னுத்துரை அவர்களின் நூல்கள் எண்ணிம நூலகத்தில்