கேப்பாபுலவு : நிலமீட்புக்கான மக்கள் போராட்டத்தின் கதை

Published on Author Noolaham Foundation
கேப்பாபுலவு

கேப்பாபுலவு மக்கள் தமது வாழ்விடங்களை இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து மீளப்பெறுவதற்காக தன்னிச்சையாக உறுதியுடன் வயது பாரபட்ச்சமின்றி இரவு பகலாக போராடி வருகின்றனர். இந்த நூலானது 20 நாட்கள் தாண்டிய அவர்களது அறப்போரட்ட காலத்தில் வரலாற்றுப்பதிவாக வெளிவந்துள்ளது. இதில் கேப்பாபுலவின் வரலாறு, இராணுவ ஆக்கிரமிப்பு , மக்களின் மனநிலைகளை அவரவர்களின் வார்த்தைகளிலும், அறப்போரட்ட நிகழ்வுகளை கால அட்டவணையிலும் விரிவாக பதியப்பட்டிருக்கிறது. ஈழத்தமிழர் வரலாற்றில் இவ்வாறன வரலாற்றுப்பதிவுகள் அவை நிகழும் சமகாலத்தில் எழுதப்படுவது அரிது. இந்த நூலினை நூலகத்தில் வாசிக்கலாம் http://www.noolaham.org/wiki/index.php/கேப்பாபுலவு:_நிலமீட்புக்கான_மக்கள்_போராட்டத்தின்_கதை

நூலக நிறுவன வழிகாட்டுநர் சபையின் புதிய உறுப்பினர்கள்

Published on Author Noolaham Foundation

ஈழத் தமிழ் பேசும் சமூகங்களை ஆவணப்படுத்தலில் விரிவான ஈடுபாடும், அனுபவமும், ஆற்றலும் உள்ள மூன்று புதியவர்கள் நூலக நிறுவனத்தின் வழிகாட்டுநர் சபையில் தெரிவுசெய்யப்பட்டு இணைந்துள்ளார்கள்.  அவர்களை நாம் அன்புடன் வரவேற்கிறோம். இ. மயூரநாதன் இ. மயூரநாதன் தமிழ் விக்கிப்பீடியாவின் (ta.wikipedia.org) முன்னோடிப் பங்களிப்பாளர் ஆவார். இலங்கையில் வண்ணார்பண்ணையில் பிறந்து, கட்டிடக்கலையில் முதுநிலைப் பட்டம் பெற்று, ஐக்கிய அரபு அமீரகத்தில் நெடுங்காலம் பணிபுரிந்தவர். தற்போது ஓய்வு பெற்று யாழில் மீள் குடியேறியுள்ளார். 2003 ஆம் ஆன்று தமிழ் விக்கிப்பீடியாவைத்… Continue reading நூலக நிறுவன வழிகாட்டுநர் சபையின் புதிய உறுப்பினர்கள்

திறந்த அணுக்க வாரம் – ஒக்ரோபர் 24 – 30, 2016

Published on Author Noolaham Foundation

இந்த வாரம் (ஒக்ரோபர் 24 – 30, 2016) திறந்த அணுக்க வாரம் (Open Access Week) ஆகும்.  திறந்த அணுக்கம் என்பது அறிவு வளங்களை அனைவருக்கும் கட்டற்று கிடைக்கச் செய்தலுக்கான கொள்கையும் வழிமுறையும் ஆகும்.  திறந்த அணுக்கத்தில் அறிவு வளங்கள் கிடைப்பது கல்வி, ஆய்வு, சமூக வளர்ச்சிக்கு அவசியம் ஆகும். மொழி, கணிதம், அறிவியல், கலைகள் என்று அறிவு என்றும் கட்டற்று இருப்பதன் ஊடாகவே மனித சமூகம் வளர்சி பெறுகின்றது.  ஆனால் இந்த அறிவு வளங்களின்… Continue reading திறந்த அணுக்க வாரம் – ஒக்ரோபர் 24 – 30, 2016

நூலகத்தில் தினப்புயல் வாரப் பத்திரிகை

Published on Author Noolaham Foundation

“தினப்புயல்” வாரப்பத்திரிகை; வன்னிமண்ணிலிருந்து 2012ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.  இப்பத்திரிகைகளின் ஆரம்ப வெளியீடுகள் முதல் அனைத்து வெளியீடுகளையும் நூலக நிறுவன எண்ணிம நூலகத்தினூடாக இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக ஆவணப்படுத்தி வெளியிடுவதற்கான அனுமதியினை “தினப்புயல்” இயக்குணரும், முன்னணி ஊடகவியலாளரும், இரணியன் எனும் புனைபெயரில் ஊடகங்களில் எழுதிவரும் சக்திவேல் பிள்ளை பிரகாஷ் அவர்கள் நூலக நிறுவன தொடர்பாடல் மற்றும் சமூகத்தொடர்பு அலுவலகரிடம், வவுனியாவில் தேக்கவத்தையில் அமைந்துள்ள “தினப்புயல்”… Continue reading நூலகத்தில் தினப்புயல் வாரப் பத்திரிகை

சாந்திகம் அலுவலகர்களுடன் சந்திப்பு

Published on Author Noolaham Foundation

உளநல ஆலோசனைகள், பயிற்சிகள், உளவள கற்கை நெறிகள் தொடர்பில் பல உளவள வைத்திய நிபூணர்கள் மற்றும் ஆலோசகர்களின் பங்களிப்புடன் யாழ்ப்பாணத்தில் இருந்து நீண்டகாலமாக சேவையாற்றிவரும் சாந்திகம் நிலையத்தில் (Shanthiham-Association for health and Counselling) அந் நிறுவன இயக்குணர் ஜே.தற்பனன் மற்றும் நிறுவன அலுவலர்கள், மூத்த உளவள வைத்திய நிபூணர் வைத்திய கலாநிதி.தயா சோமசுந்தரம் முதலியோருடன் 05/12/2015 அன்று நூலக நிறுவன தொடர்பாடல் அலுவலகர் நூலக நிறுவன செயற்பாடுகள் தொடர்பில் ஓர் சிறு கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார். இதன்… Continue reading சாந்திகம் அலுவலகர்களுடன் சந்திப்பு

நூலகத்தில் மொழிதல் ஆய்விதழ்

Published on Author Noolaham Foundation

மட்டக்களப்பில் இருந்து ஓர் ஆய்விதழாக வெளிவரும் ‘மொழிதல்’ இதழ்களினை இப்போது நூலகம் நிறுவன எண்ணிம நூலகத்தில் பார்வையிடமுடியும். இவ் ஆய்விதழ் அரையாண்டிதழாக 2014ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வெளிவர ஆரம்பித்தது. கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களான சி.சந்திரசேகரம், வ.இன்பமோகன், சு.சிவரத்தினம் முதலியோர் இவ் இதழ்களினது ஆசிரியர்களாக உள்ளனர். மேலும் பல முன்னாள் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களும் இவ் இதழின் ஆலோசகர்வட்டத்தில் பங்கெடுக்கின்றனர். பல்வேறு புலமையாளர்களின் கட்டுரைகளை உள்ளடக்கங்களாகக் கொண்டு இவ் ஆய்விதழ் வெளியாகின்றது. இதனை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில்… Continue reading நூலகத்தில் மொழிதல் ஆய்விதழ்

நூலகத்தில் கெளரீஸ்வரனின் வெளியீடுகள்

Published on Author Noolaham Foundation

மட்டக்களப்பின் இளம் சமூக செயற்பாட்டாளரும், சமூக அரங்கான கூத்தரங்கின் ஆய்வாளரும், மூன்றாவது கண் உள்ளூர் அறிவுத்திறன் செயற்பாட்டுக்குழுவின் மூத்த உறுப்பினரும், எழுத்தாளருமான ஆசிரியர் திரு. துரை. கெளரீஸ்வரன் அவர்களுடைய எழுத்துக்களை தற்போது நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் அணுகி வாசிக்கலாம். இதற்கான அனுமதியினை ஆசிரியர் திரு.துரை.கெளரீஸ்வரன் அவர்கள் நூலக நிறுவனத்திடம் கையளித்தார். இணைப்பில் நூல்கள்- http://tinyurl.com/och87xy {{உலகளாவிய ரீதியில் இலங்கைத்தமிழ் பேசும் சமூகம் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கும் அவற்றை திறந்த அணுக்கத்தில் அனைவருக்கும் பகிர்வதற்கும் உங்களது உறவினர்களுடைய நினைவுமலர்களையும்… Continue reading நூலகத்தில் கெளரீஸ்வரனின் வெளியீடுகள்