‘செல்வி.தங்கேஸ்வரி’ அவர்கள் நூல்களை அணுக்கப்படுத்தல் அனுமதியை அளித்துள்ளார்

Published on Author Noolaham Foundation

இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்(2004), மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் முன்னாள் கலாசார உத்தியோகத்தரும், சமூக ஆய்வாளருமான ‘செல்வி.தங்கேஸ்வரி’ அவர்கள்; நூலக நிறுவனத்தில் தனது நூல்களை எண்ணிம ஆவணப்படுத்திப் பகிர்வதற்குரிய அனுமதியை அளித்துள்ளார். இவரது நூல்களான, 1) சுவாமி விபுலானந்தரின் தொல்லியலாய்வுகள் 2) குளக்கோட்டன் தரிசனம் 3) கிழக்கிலங்கை வரலாற்றுப் பாரம்பரியங்கள் போன்ற பல நூல்களை நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலகத்தில் அணுகிப் பயன்பெறமுடியும். கீழுள்ள இணைப்பில் அந் நூல்களையும் அவர் பற்றிய சிறு குறிப்பினையும் பார்வையிடலாம். 1)… Continue reading ‘செல்வி.தங்கேஸ்வரி’ அவர்கள் நூல்களை அணுக்கப்படுத்தல் அனுமதியை அளித்துள்ளார்

பேராசிரியர் செ. யோகராசா தனது நூல்களை அணுக்கப்படுத்தலுக்கான அனுமதியினை அளித்துள்ளார்

Published on Author Noolaham Foundation

கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் மூத்த பேராசிரியர் திரு.செ.யோகராசா அவர்கள் தனது நூல்களை நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்தி பகிர்வதற்கான அனுமதியினை நூலக நிறுவனத்துக்கு அளித்துள்ளார். மேலும் நூலக நிறுவனத்தின் ஆலோசனைக்குழுவில் அங்கத்துவம் வகித்துவரும் இவர்; நூலக நிறுவனத்தால் 2013ல் ஒழுங்கமைக்கப்பட்ட ஆய்வு மாநாட்டில் முக்கிய ஆலோசகராகவும், வளவாளராகவும் ஈழத்தமிழ் ஆவணப்படுத்தலுக்கு முக்கிய பங்காற்றியுமுள்ளார். அவரது நூல்களில் 1) இன்றைய இலக்கியங்களில் இதிகாசப் பெண்பாத்திரங்கள் 2) ஈழத்து நவீன இலக்கியம் 3) ஈழத்து நவீன கவிதை 4)… Continue reading பேராசிரியர் செ. யோகராசா தனது நூல்களை அணுக்கப்படுத்தலுக்கான அனுமதியினை அளித்துள்ளார்

வடமாகாண அமைச்சர் பொ. ஐங்கரநேசன் நூலக நிறுவனச் செயற்பாடுகளுக்கு உதவி

Published on Author Noolaham Foundation

வடமாகாண சூழலியல் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் திரு. பொன்னுத்துரை ஐங்கரநேசன், நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் செயற்பாடுகளுக்கு தொடர்ச்சியாக வலுச்சேர்க்கும் வகையில் சில உபகரணங்களை அவரது அலுவலகத்தில் வைத்து நூலக நிறுவனத்திடம் 23/09/2015 அன்று கையளித்தார். மேலும் அவர் எழுதிய நூல்களையும், 1993 இல் இருந்து 2012 வரையான காலப்பகுதியில் வெளியாகிய அவரது “நங்கூரம்” சஞ்சிகைகளையும் நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்தி திறந்த அணுக்கத்தில் பகிர்வதற்கான அனுமதியினையும் 2015/05/22 அன்று நூலக நிறுவனத்திடம் கையளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. நூலக… Continue reading வடமாகாண அமைச்சர் பொ. ஐங்கரநேசன் நூலக நிறுவனச் செயற்பாடுகளுக்கு உதவி

பல்துறைக் கலைஞர் ஏ. ரீ. பொன்னுத்துரை அவர்களின் நூல்கள் எண்ணிம நூலகத்தில்

Published on Author Noolaham Foundation

ஈழத்துத் தமிழ் உலகில் 1960கள் முதல் தலை சிறந்து விளங்கிய நாடகவியலாளர், எழுத்தாளர் போன்ற பல்துறை விற்பன்னர், மறைந்த கலைப்பேரரசு ஏ.ரீ. பொன்னுத்துரை அவர்களின் எழுத்தில் அமைந்த வெளியிடப்பட்ட நூல்கள் நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் எண்ணிம ஆவணப்படுத்தப்பட்டு மறக்க முடியா வரலாறாக விளங்குகின்றது. கலைப்பேரரசு ஏ.ரீ. பொன்னுத்துரை அவர்களின் நூல்களை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் எண்ணிம ஆவணமாக்கிப் பகிர்வதற்கான அனுமதியினை அவரது மகள் திருமதி தயாபரன் அவர்கள் 31/08/2015 அன்று நூலக நிறுவனத்திடம் கையளித்தார்.… Continue reading பல்துறைக் கலைஞர் ஏ. ரீ. பொன்னுத்துரை அவர்களின் நூல்கள் எண்ணிம நூலகத்தில்

கே.ஸ்.சிவகுமாரன் தமது எழுத்துக்களை அணுக்கப்படுத்த அனுமதியினை வழங்கியுள்ளார்

Published on Author Noolaham Foundation

ஈழத்தின் மூத்த பல்துறை எழுத்தாளரும், இலக்கியவாதியும், நூலக நிறுவனத்துடன் இணைந்து இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களை ஆவணப்படுத்துதல் தொடர்பான செயற்பாடுகளுக்கு பலகாலமாக வலுச்சேர்த்து வருபவருமான “கே.ஸ்.சிவகுமாரன்” அவர்கள் தமது எழுத்துக்களை நூலக நிறுவனத்தில் எண்ணிம ஆவணப்படுத்தி அனைவருக்கும் திறந்த அணுக்கத்தில் பகிர்வதற்கான அனுமதியினை வழங்கியுள்ளார். கே.ஸ். சிவகுமாரன் அவர்களின் எழுத்தில் அமைந்த இலக்கிய திறனாய்வு பற்றிய நூல்கள், சிறுகதைகள், சினிமா பற்றிய நூல்கள் போன்ற இன்னோரன்ன பலநூல்களும் நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் தொடர்ச்சியாக ஆவணப்படுத்தப்படுகின்றன. {{உலகலாவிய… Continue reading கே.ஸ்.சிவகுமாரன் தமது எழுத்துக்களை அணுக்கப்படுத்த அனுமதியினை வழங்கியுள்ளார்

ஒளவை விக்னேஸ்வரன்” (ஒளவை) தனது எழுத்துக்களை அணுக்கப்படுத்த அனுமதியினை வழங்கினார்

Published on Author Noolaham Foundation

சமகால ஈழத்தின் புலம்பெயர் பெண் எழுத்தாளரான “ஒளவை விக்னேஸ்வரன்” (ஒளவை) தனது எழுத்துக்களை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்தி அனைவருக்கும் திறந்த அணுக்கத்தில் பகிர்வதற்கான அனுமதியினை 23/09/2015 அன்று நூலக நிறுவனத்திடம் கையளித்திருந்தார். {{ஈழத்தின் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களினையும் எண்ணிம ஆவணப்படுத்தி நூலக நிறுவனத்தினூடாக பகிர்வதற்கும் சமூகம் சார்ந்து ஆவணப்படுத்தலை மேற்கொள்வதற்கும் தொடர்புகொள்ளுங்கள்- +94 112 363 261/ +94 212 231 292}}

தமிழரின் பரவலும் மாறாம்புலத்தின் தோற்றமும் – நூல் அறிமுகம்

Published on Author Noolaham Foundation

தமிழரின் பரவலும் மாறாம்புலத்தின் தோற்றமும் நூல் அறிமுகம் பூ. நகுலன் ரவல், என்கின்ற விடயங்களைத் தாங்கியதாக முதலாம் பகுதி அமைந்துள்ளது. தமிழர்கள் யாவரும் தான் சார்ந்த தன்னைச் சூழ நிகழ்ந்த விடயங்களையும் தன் அனுபவத்தின் பெறுமதியையும் உணர்ந்து ‘தமிழரின் பரவலும் மாறாம்புலத்தின் தோற்றமும்’ என்ற நூலை அல்வாயைச் சேர்ந்த சி. கணேசமூர்த்தி எழுதியுள்ளார். வரலாறு சமய ஆய்வு என்பவற்றை ஆய்வுப்பொருளாகக் கொண்டதாக இந்நூல் அமைகின்றது. 2010 மார்கழியில் முதலாவது பதிப்பை இந்நூல் கண்டுள்ளது. இந்நூலின் உள்ளடக்கம் இரண்டு… Continue reading தமிழரின் பரவலும் மாறாம்புலத்தின் தோற்றமும் – நூல் அறிமுகம்