அதிபர்கள் சந்திப்பும் பாடசாலை ஆவணமாக்கலும்

Published on Author தண்பொழிலன்

நூலக நிறுவனமானது வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளின் வெளியீடுகளை ஆவணப்படுத்தும் நோக்கில் பாடசாலைகளிலிருந்து மேற்கொள்ளப்பட்ட வெளியீடுகள் ,மாகாண, வலய மட்ட பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் பரிகார கற்றல் கையேடுகள் உட்பட மாணவர் கற்றல் கற்பித்தல் சார் விடயங்கள் போன்றவற்றை சேகரித்து எண்ணிமப்படுத்தி இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்கான எழுத்து மூல அனுமதியை வடமாகாண கல்வித்திணைக்களத்திடமிருந்து பெற்றுள்ளது. இதற்கு தேவையான உதவிகளை வழங்குமாறு சுற்றறிக்கை மூலம் வட மாகாண கல்விப்பணிப்பாளர் செ.உதயகுமார் வலயப்பாடசாலை அதிபர்களை கேட்டுள்ளார்.   இதன் முதற்கட்டமாக , துணுக்காய்… Continue reading அதிபர்கள் சந்திப்பும் பாடசாலை ஆவணமாக்கலும்

நூலகத்தின் ஊர் ஆவணப்படுத்தல் திட்டம்

Published on Author தண்பொழிலன்

வரலாறு என்றால், நாமெல்லாம் சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு, என்று பட்டியல் வாசிப்போம். இதே கேள்வியை தொன்மையான வரலாற்றுக் குடியிருப்புகள் என்றால், மதுரை, தஞ்சை, காஞ்சி என்றோ, கீழடி, ஆதிச்சநல்லூர் என்றோ மீண்டும் தமிழகத்திலேயே போய் நிற்போம்.   கொஞ்சம் விடயம் தெரிந்தவர் என்றால் யாழ்ப்பாண இராச்சியம், வன்னிச் சிற்றரசுகள், மட்டக்களப்பு வன்னிமைகள் திருக்கோணமலை, கந்தரோடை, பொம்பரிப்பு, என்று இங்குள்ள பட்டியலையும் சேர்த்துக்கொள்ளுவோம். . இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். நீங்கள் பிறந்த ஊரின் வரலாறு உங்களுக்குத் தெரியுமா? தமிழரின் வரலாற்றுக் குடியிருப்புகளில் உங்கள் ஊரின் பெயரையும்… Continue reading நூலகத்தின் ஊர் ஆவணப்படுத்தல் திட்டம்

யாழில் சுவடி ஆவணப்படுத்தல் கண்காட்சி

Published on Author தண்பொழிலன்

வட இலங்கையின் சுவடிச்சேகரங்களை எண்ணிமப்படுத்தும் செயற்றிட்டமானது, இங்கிலாந்தின் ஆபத்துக்குள்ளான சுவடிக்காப்பகத் திட்டத்தின் அனுசரணையில் இடம்பெற்றுவருகின்றது. இதன் ஒரு பாகமாக, சுவடிகளை ஆவணப்படுத்துவது எவ்வாறு என்பதை விவரிக்கும் கண்காட்சி ஒன்று நூலக நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் அக்டோபர் 12 (வெள்ளி) முதல் 14 (ஞாயிறு) வரை இது கொக்குவில் ஆடிய பாதம் வீதியிலுள்ள நூலக நிறுவனத்தில் இடம்பெறும்.     ஆய்வு, ஆவணப்படுத்தல், மரபுரிமை தொடர்பான ஆர்வமுள்ள அனைவரதும் வருகையினை நூலக நிறுவனம் எதிர்பார்க்கிறது

மூடப்பட்ட இணைய உள்ளடக்கத்தை ஆவணப்படுத்தல், பகுப்பாய்தல், காட்சிப்படுத்தல், தேடல்

Published on Author தண்பொழிலன்

ஒவ்வொரு கணப்பொழுதிலும் இணையத்தில் பெரும் எண்ணிக்கையிலான தகவல்கள் பதிவுசெய்யப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. வலைத்தளங்கள், வலைப்பதிவுகள், மன்றங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் என்பனவற்றில் அறிவியல், பண்பாட்டு, அரசியல் உட்பட்ட பல துறைகளைச் சார்ந்த முக்கிய தகவல்கள் இருக்கின்றன. தமிழ்ச் சூழலைப் பொறுத்தவரை, 1992 இல் ஆரம்பமான soc.culture.tamil usernet குழுமம் தொடங்கி, ஜியோசிட்டிஸ் (geocities), மன்றங்கள், வலைத்தளங்கள், வலைப்பதிவுகள் (blogs), அண்மைய டுவிட்டர் கீச்சுக்கள் (tweets) வரை விரிவான உள்ளடக்கம் உண்டு. ஏதேனும் ஒரு ஆய்வுப்பரப்பில், ஒரு தலைப்பை ஆய்வு… Continue reading மூடப்பட்ட இணைய உள்ளடக்கத்தை ஆவணப்படுத்தல், பகுப்பாய்தல், காட்சிப்படுத்தல், தேடல்

மலரின் தாய் – மலரன்னை வாய்மொழி வரலாறு

தூரத்தே கிறீச்சிடும் பறவைகள். மெல்ல ஓலமிடும் நாய். படுவேகமாகக் கடந்து செல்லும் வாகனங்கள். அவற்றின் இடையே தீனமான ஆனால் உறுதியான குரலில், “இப்ப உடல்நிலை சரியில்ல. தொடர்ந்து எழுதேலாமக் கிடக்கு. ஆனா தொடர்ந்து எழுதோணும் எண்டு ஆசையா இருக்கு.” என்று மலரன்னை சொல்லும் போது, அக்குரல் நம்மையும் ஏதோ செய்வதைக் உணரலாம். பழைய எழுத்தாளர்களில் ஒருவரான கச்சாய் இரத்தினத்தின் மூத்த மகளாகப் பிறந்த “அற்புதராணி காசிலிங்கம்” அம்மையாரின் புனைபெயர் தான் மலரன்னை. தற்போது யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் வசித்து… Continue reading மலரின் தாய் – மலரன்னை வாய்மொழி வரலாறு

தமிழ் ஓலைச் சுவடிகளை வாசிப்பதற்கான பயிற்சிப் பட்டறை

Published on Author தண்பொழிலன்

‘அண்ணாமலைக் கனடா’ மற்றும் ‘நூலகம் நிறுவனம்’ என்பன இணைந்து பழந்தமிழ் ஓலைச்சுவடிகளை வாசிப்பதற்கான பயிற்சிப்பட்டறை ஒன்றினை ஒழுங்கு செய்திருக்கின்றன. பயிற்றுனர்: முனைவர் பால சிவகடாட்சம் அவர்கள்  (முந்நாள் உயிரியல் துறைத் தலைவர், விவசாயபீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) இடம்: அண்ணாமலை கனடா (101-1240 Ellesmere Rd, Scarborough, ON M1P 2X4) காலம்: சனிக்கிழமை (16 ஜூன் 2018) பி.ப. 1.00 முதல் பி.ப. 3.00 வரை பழந்தமிழ் ஓலைச்சுவடிகளை வாசிப்பதில் ஆர்வமுள்ளவர்களைக் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.… Continue reading தமிழ் ஓலைச் சுவடிகளை வாசிப்பதற்கான பயிற்சிப் பட்டறை

மட்டக்களப்பில் நூலகம் – விக்கிப்பீடியா பயிற்சிப்பட்டறை

Published on Author தண்பொழிலன்

2018 மார்ச் 31ஆம் திகதி சனிக்கிழமையன்று, நூலகம் நிறுவனமும் விக்கிப்பீடியாவும் இணைந்து நடத்திய பயிற்சிப் பட்டறையானது, மட்டக்களப்பு ஆரையம்பதி உயர் தொழிநுட்ப நிறுவனத்தின் கணினிக்கூடத்தில் இடம்பெற்றது. திரு.சஞ்சீவி சிவகுமார், திரு.பிரசாத் சொக்கலிங்கம், திரு.வி.துலாஞ்சனன் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாகப் பங்காற்றிய இப்பட்டறையில், யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த திரு.மயூரநாதன் கலந்துகொண்டு, பெறுமதியான பல கருத்துக்களை முன்வைத்தார். உயர் தொழிநுட்ப நிறுவனத்தின் இயக்குநர் திரு. செல்வரத்தினம் ஜெயபாலன் அவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார். விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்தல், நூலகம் நிறுவனத்தால் தற்போது மேற்கொள்ளப்படும் வடக்கு – கிழக்கு … Continue reading மட்டக்களப்பில் நூலகம் – விக்கிப்பீடியா பயிற்சிப்பட்டறை