யாழ்ப்பாணத் தமிழ் நாடக அரங்கு – கந்தையா ஸ்ரீகணேசன்

Published on Author தண்பொழிலன்

இலங்கை தொன்றுதொட்டே பல நிகழ்த்துகலைகளுக்கு நிலைக்களனாகத் திகழ்ந்து வந்திருக்கிறது. அவற்றில் சிங்கள மரபு சார்ந்த அரங்காற்றுகைகளும் கலைகளும் பெருமளவு ஆவணப்படுத்தப்பட்டு பரவலான அங்கீகாரத்தைப் பெற்று இன்றும் அரங்கேற்றப்படுகின்றன.ஆனால் ஈழத்தமிழ் சார்ந்த நிகழ்த்துகலைகளுக்கு , போதிய சமூக அங்கீகாரமோ, பரவலாக்கமோ அவை காணவில்லை. அதிலும் சில நிகழ்த்துகலைகள் குறிப்பிட்ட பிரதேசத்துக்கும் குறிப்பிட்ட சமூக அந்தஸ்து கொண்டோருக்கும் வரையறுக்கப்பட்டனவாக உள்ளன. காலவோட்டத்தில் மிக வேகமாக அருகிவரும் இவை, இன்னும் முறைப்படி ஆவணப்படுத்தப்படவோ அங்கீகரிக்கப்படவோ இல்லை எனலாம். அந்த வகையில், அரங்கியல்… Continue reading யாழ்ப்பாணத் தமிழ் நாடக அரங்கு – கந்தையா ஸ்ரீகணேசன்

இரண்டாம் உலகப்போருக்கு முன் இலங்கையில் ஒருநாள் – காலக்கண்ணாடி 02

Published on Author தண்பொழிலன்

  உலகின் வல்லரசுகள் பல ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்த இரண்டாம் உலகப்போர் 1939 முதல் 1945 வரை இடம்பெற்றது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். அதற்கும் முன் இலங்கையில் வெளியான ஒரு பத்திரிகையின் செய்தியொன்றை இவ்வாரம் நாம் பார்க்கலாம்.   இந்தப் பத்திரிகை வெளியான ஆண்டு 1935. வெளியிட்ட பத்திரிகையின் பெயர், ஈழகேசரி ஈழகேசரி, 1930களிலிருந்து சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான ஒரு பத்திரிகை. அதை நிறுவியவர் குறிப்பிடத்தக்க ஈழத்து ஆளுமைகளுள் ஒருவரான நா.பொன்னையா அவர்கள்.அதன் 1935.07.21 திகதியிட்ட பத்திரிகையில் “இலங்கையில் யுத்தவீரர்… Continue reading இரண்டாம் உலகப்போருக்கு முன் இலங்கையில் ஒருநாள் – காலக்கண்ணாடி 02

மனவெளி கலையாற்றுக் குழுவின் “ஒரு பொம்மையின் வீடு”

Published on Author தண்பொழிலன்

  கனடாவின் முன்னணித் தமிழ் அரங்காற்றுகைக் குழுமங்களில் ஒன்றான “மனவெளி கலையாற்றுக் குழு” ஆனது, எதிர்வரும் யூன் 30 அன்று “ஒரு பொம்மையின் வீடு” நாடகத்தை மேடையேற்ற உள்ளது. “ஒரு பொம்மையின் வீடு” (A Doll’s House) எனும் நாடகம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைசிறந்த நாடகக் கலைஞர்களில் ஒருவரும், நவீனத்துவ முன்னோடிகளில் ஒருவருமான ஹென்ரிக் இப்சனின்  படைப்பாகும். அந்நாடகம் அரங்கேறிய 1879இலிருந்து தொடர்ச்சியான விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் சந்தித்த நாடகம் அது. நோரா எனும் பாத்திரப் படைப்பின் மூலம்,… Continue reading மனவெளி கலையாற்றுக் குழுவின் “ஒரு பொம்மையின் வீடு”

“யாழ்ப்பாண இராச்சியம்” – பேராசிரியர்.சி.க.சிற்றம்பலம்

Published on Author தண்பொழிலன்

“யாழ்ப்பாண இராச்சியம்” எனும் நூலானது, இலங்கைத் தமிழரின் வரலாற்றைப் பொறுத்தவரை, மிக முக்கியமானதாகும். பேராசிரியர்.சி.க.சிற்றம்பலம் அவர்களின் தொகுப்பில், 1992 இல் யாழ்.பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்த இந்நூல், வட இலங்கையில் நிலவிய தமிழரசு பற்றிய அதிகபட்ச சான்றாதாரங்களுடன் எழுதப்பட்ட அருமையான நூல் ஆகும். இந்நூலானது, அதிகபட்ச வரலாற்றுணர்வோடு இலங்கையில் எழுதப்பட்ட தமிழ்நூல்களில் ஒன்று எனலாம். யாழ் தீபகற்பத்தின் வரலாற்றைப் பாடுகின்ற, கைலாயமாலை, வையாபாடல், யாழ்ப்பாண வைபவ மாலை ஆகிய தொன்மங்களை அப்படியே எடுத்தாளாமல், அவற்றில் “கதை” எனத் தள்ளத்தக்கவற்றைத்… Continue reading “யாழ்ப்பாண இராச்சியம்” – பேராசிரியர்.சி.க.சிற்றம்பலம்

ஐந்து புத்தக சவால் – இலங்கை வரலாறு!

Published on Author தண்பொழிலன்

முகநூலில் அண்மையில் பிரபலமாக இருந்த ஐந்து புத்தகங்கள் சவால் (Five books challenge) பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். பொதுவாக இந்த சவாலில் தங்களுக்குப் பிடித்த ஐந்து புத்தகங்களின் அட்டைகளைப் பதிவிட்டு, இன்னும் ஐந்து பேரை இணைத்துக்கொள்வார்கள். அவ்வாறு இணைக்கப்பட்ட ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த ஐந்து புத்தகங்களின் அட்டைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். பிரபலமான அல்லது பலருக்கும் பிடித்தமான புத்தகங்களின் அட்டைகளே இந்த சவாலில் பெரும்பாலும் பகிர்ந்துகொள்ளப்பட்டன. எனினும், முகநூல் பதிவர்கள், பத்தோடு பதினொன்றாகக் கருதி அந்தப் பதிவுக்கு விருப்பம்… Continue reading ஐந்து புத்தக சவால் – இலங்கை வரலாறு!

Library – Archive – Museum: தோற்றமும் பின்னணியும் பற்றிய வளங்கள்

Published on Author Natkeeran L. Kanthan

கல்வித் துறைகள், ஆய்வு முறைமைகள், சமூக நிறுவனங்கள் என்பன ஆக்கபூர்வமான விமர்சன நோக்கில் அணுகப்பட வேண்டியது அவசியம்.  நூலகங்கள் (Libraries), ஆவணகங்கள் (Archives), அருங்காட்சியகங்கள்  (Museums) ஆகிய மூன்றும் இவ்வாறே கூர்மையாக நோக்கப்படவேண்டும்.  பெரும்பாலும் இத்தகைய நினைவக நிறுவனங்கள் சமூகத்தின் அதிகார மையங்களோடு தொடர்புடையவையாகவே அமைகின்றன. இவற்றில்  எது ஆவணப்படுத்தப்படுகிறது, யார் ஆவணப்படுத்துகிறார்கள், எப்படி ஆவணப்படுத்துகிறது, யாருக்கு அணுக்கம் உள்ளது உட்பட்ட கேள்விகள் முக்கியமானவையாக அமைகின்றன. இன்றைய நவீன நூலகம் – ஆவணகம் – அருங்காட்சியக துறை நிறுவனங்களின்… Continue reading Library – Archive – Museum: தோற்றமும் பின்னணியும் பற்றிய வளங்கள்

காலக்கண்ணாடி 01: காலங்கள் மாறும் காட்சிகள் மாறாது

Published on Author தண்பொழிலன்

“சிங்களத்தையும் தமிழையும் இந்த நாட்டின் உத்தியோக பாஷைகளாக்க இலங்கை அரசியல் சட்டத்தை மாற்றுவோம் என்று இலங்கைப் பிரதமர் சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் கூறியதை எதிர்த்து வெகுசீக்கிரத்தில் அரசாங்க பாராளுமன்ற கட்சிக் கூட்டத்தில் பிரச்சினை எழுப்பப்படும்” இந்தச் செய்தியைப் படித்து நீங்கள் ஒன்றும் குழப்பமடையத் தேவையில்லை. இது சமகாலச் செய்தி அல்ல.செய்தியில் கூறப்படும் பிரதமர் சேர். ஜோன் கொத்தலாவல. இலங்கையின் மூன்றாவது பிரதமர். ஆம். சரியாக அறுபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன் இலங்கையின் பழம்பெரும் பத்திரிகைகளில் ஒன்றான சுதந்திரனின், 1954… Continue reading காலக்கண்ணாடி 01: காலங்கள் மாறும் காட்சிகள் மாறாது