சரிநிகர் சமானமாக வாழ்வம்|காலக்கண்ணாடி 04

Published on Author தண்பொழிலன்

இலங்கைப் பத்திரிகைச் சூழலைப் பொறுத்தவரை, சரிநிகர் மிக முக்கியமான மாற்று இதழ். “சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே” என்ற பாரதியின் வரிகளிலிருந்து தனக்கான பெயரைச் சூடியிருந்தது இவ்விதழ். 2001 வரை பல்வேறு செய்திகளைச் சுமந்துவந்த சரிநிகர், இலங்கையின் போர்க்கால சூழலில், மாற்றுக்கருத்துக்களுக்கு மாத்திரமன்றி, சிறுகதை, கவிதை முதலியவற்றிலும் பல பரிசோதனைகள் இடம்பெற இடமளித்து, ஈழத்து இலக்கியத்தையும் செழுமைப்படுத்தியது. 1990 யூன் மாதம் மாத இதழாக வெளிவர ஆரம்பித்த இது, பின்னர் வார இதழாக வெளியாக ஆரம்பித்தது. சரிநிகரின் ஆறாவது… Continue reading சரிநிகர் சமானமாக வாழ்வம்|காலக்கண்ணாடி 04

மலையக நாட்டாரியல் | காட்டேரி வழிபாடு

Published on Author தண்பொழிலன்

  வாய்மொழி வரலாறு என்பது வாய்மொழியின் ஊடாக, நினைவுகள் ஊடாக நபர்கள், சமூகங்கள், நிகழ்வுகள், விடயங்கள் பற்றி வரலாற்றுத் தகவல்கள்களைத் திரட்டுதல், பாதுகாத்தல், பகிர்தல், விளங்க்கிக்கொள்தல் முறையையும், அது தொடர்பான கற்கையையும், அந்தச் சேகரிப்புக்களையும் குறிக்கிறது.[1] வாய்மொழி வரலாறு எழுத்தாவணங்களைத் தாண்டி தகவலைப் பெற, பதிவுசெய்ய முனைகிறது நாட்டாரியல் மிகச்சுவாரசியமானது. மனிதனின் உளவியலையும், சமூகக்கூட்டு மனத்தையும் ஆராய அதைவிட மிகச்சிறந்த துறை வேறெதுவும் இல்லை. அதிலும் மனிதசக்தியை மீறியதாக மக்கள் நம்பும் நாட்டார் வழிபாடுகள் பற்றிய கற்கைகள், மானுடவியலில் மிகக்குறிப்பிடத்தக்க… Continue reading மலையக நாட்டாரியல் | காட்டேரி வழிபாடு

மலரின் தாய் – மலரன்னை வாய்மொழி வரலாறு

தூரத்தே கிறீச்சிடும் பறவைகள். மெல்ல ஓலமிடும் நாய். படுவேகமாகக் கடந்து செல்லும் வாகனங்கள். அவற்றின் இடையே தீனமான ஆனால் உறுதியான குரலில், “இப்ப உடல்நிலை சரியில்ல. தொடர்ந்து எழுதேலாமக் கிடக்கு. ஆனா தொடர்ந்து எழுதோணும் எண்டு ஆசையா இருக்கு.” என்று மலரன்னை சொல்லும் போது, அக்குரல் நம்மையும் ஏதோ செய்வதைக் உணரலாம். பழைய எழுத்தாளர்களில் ஒருவரான கச்சாய் இரத்தினத்தின் மூத்த மகளாகப் பிறந்த “அற்புதராணி காசிலிங்கம்” அம்மையாரின் புனைபெயர் தான் மலரன்னை. தற்போது யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் வசித்து… Continue reading மலரின் தாய் – மலரன்னை வாய்மொழி வரலாறு

மலையகத் தமிழ் இலக்கியம் – ஓர் அறிமுக நூல்

Published on Author தண்பொழிலன்

மலையகம் பல இலக்கியவாதிகளை பிரசவித்த மண்.மலையக இலக்கியம் பற்றி மிக முக்கியமான நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. வெளிவந்த நூல்களில் கலாநிதி.க.அருணாசலத்தால் எழுதப்பட்டு 1994இல் வெளியிடப்பட்ட “மலையகத் தமிழ் இலக்கியம்” குறிப்பிடத்தக்க ஒன்றெனக் கருதலாம். தமிழ் மன்றத்தின் வெளியீடாக வெளிவந்த இந்நூலின் ஆசிரியர், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் முதுமுறை விரிவுரையாளர் என்பது அதிக கவனிப்பைப் பெற்றுக்கொள்கிறது.   இந்நூலில் ஐந்து அத்தியாயங்கள் அடங்குகின்றன. “தோட்டத்தொழிலாளர்கள் ஒரு அறிமுகம்” எனும் முதலாவது அத்தியாயம், மலையகத்தமிழரின் வரலாற்றுப்பின்னணி , அவர்கள் சந்தித்த… Continue reading மலையகத் தமிழ் இலக்கியம் – ஓர் அறிமுக நூல்

மட்டக்களப்பின் முதல் தினசரி | காலக்கண்ணாடி 03

Published on Author தண்பொழிலன்

கிழக்கைத் தளமாகக் கொண்டு வெளியான பத்திரிகைகளில் சில பத்திரிகைகளே தொடர்ச்சியாக வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கது தினக்கதிர். 1990களின் நடுப்பகுதியில் மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்ட தினக்கதிர், பல்சுவைத் தகவல்களைத் தாங்கிய தினசரிப் பத்திரிகையாக வெளிவந்துகொண்டிருந்தது. அதன் சில இதழ்கள் இருவார இதழ்களாக வெளியாயின. அவற்றில்  1998 ஜூன் 14- 20  திகதியிட்ட “தினக்கதிர்” பத்திரிகை ஒன்றேயே நாம் இன்று பார்க்கவுள்ளோம். இவ்விதழின் தலைப்புச் செய்தியாக “திட்டமிட்டபடி யூலை மாதம் சார்க் மாநாடு. சார்க் தலைவர்கள் இனப்பிரச்சினைத் தீர்வினை… Continue reading மட்டக்களப்பின் முதல் தினசரி | காலக்கண்ணாடி 03

யாழ்ப்பாணத் தமிழ் நாடக அரங்கு – கந்தையா ஸ்ரீகணேசன்

Published on Author தண்பொழிலன்

இலங்கை தொன்றுதொட்டே பல நிகழ்த்துகலைகளுக்கு நிலைக்களனாகத் திகழ்ந்து வந்திருக்கிறது. அவற்றில் சிங்கள மரபு சார்ந்த அரங்காற்றுகைகளும் கலைகளும் பெருமளவு ஆவணப்படுத்தப்பட்டு பரவலான அங்கீகாரத்தைப் பெற்று இன்றும் அரங்கேற்றப்படுகின்றன.ஆனால் ஈழத்தமிழ் சார்ந்த நிகழ்த்துகலைகளுக்கு , போதிய சமூக அங்கீகாரமோ, பரவலாக்கமோ அவை காணவில்லை. அதிலும் சில நிகழ்த்துகலைகள் குறிப்பிட்ட பிரதேசத்துக்கும் குறிப்பிட்ட சமூக அந்தஸ்து கொண்டோருக்கும் வரையறுக்கப்பட்டனவாக உள்ளன. காலவோட்டத்தில் மிக வேகமாக அருகிவரும் இவை, இன்னும் முறைப்படி ஆவணப்படுத்தப்படவோ அங்கீகரிக்கப்படவோ இல்லை எனலாம். அந்த வகையில், அரங்கியல்… Continue reading யாழ்ப்பாணத் தமிழ் நாடக அரங்கு – கந்தையா ஸ்ரீகணேசன்

நூலகத்தின் தொழிற்கலை ஆவணப்படுத்தல் திட்டம் – தும்புக்கைத்தொழில்

Published on Author தண்பொழிலன்

நூலக நிறுவனமும் தமிழ் விக்கிப்பீடியாவும் இணைந்து, இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் தொழிற்கலைகளை ஆவணப்படுத்தும் திட்டத்தை தற்போது நடைமுறைப்படுத்தி வருகின்றது. அருகிவரும் தொழிற்கலைகளை பல்லூடகங்களைப் பயன்படுத்தி ஆவணப்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும். புகைப்படங்கள், காணொளிகள், வாய்மொழி வரலாறுகள் என்பன பெறப்பட்டு, அவை நூலகத்தின் ஆவணகம் வலைத்தளத்தில் தனிச்சேகரங்கள் திறக்கப்பட்டு அங்கு சேகரிக்கப்படுகின்றன.   இதுவரை ஏழுக்கும் மேற்பட்ட தொழிற்கலைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் தும்புக்கைத்தொழிலானது, கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி கிராமத்தை மையமாகக் கொண்டு ஆவணப்படுத்தப்பட்டது. தென்னம்மட்டையை பெற்றுக்கொள்ளல்,… Continue reading நூலகத்தின் தொழிற்கலை ஆவணப்படுத்தல் திட்டம் – தும்புக்கைத்தொழில்