நூலக நலன்விரும்பிகளின் நூலக விஜயம் – 26.05.2023

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனத்தின் ஆளுகைச் சபை உறுப்பினரான சசீவன் கணேசானந்தன் மற்றும் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், மனித உரிமைகள் சட்டத்தரணி மற்றும் மனித உரிமைகள் ஆர்வலரான அம்பிகா சத்குணநாதன் ஆகியோர் கடந்த 26.05.2023 அன்று நூலக நிறுவனத்தின் யாழ் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார்கள்.

இவர்கள் இருவரும் நூலக நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன் குறிப்பாக அம்பிகா சத்குணநாதன் அவர்கள் நூலக நிறுவனத்தின் சட்ட ரீதியான பிரச்சினைகள், தூதரகங்களுடன் எவ்வாறு ஒருங்கிணந்து செயற்படலாம், ஏனைய நிறுவனங்களுடன் எவ்வாறாக நூலக நிறுவனத்தை ஒருங்கிணைக்கலாம் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.

நூலக நிறுவனம் சார்பில் நூலகப் பிரதம நிறைவேற்று அலுவலகர் றஞ்சுதமலர் நந்தகுமார், எண்ணிமப் பாதுகாப்பு மற்றும் செயன்முறைக் குழு, எண்ணிம நூலக மற்றும் ஆவணகத்துறைக் குழு மற்றும் ஏனைய நூலகப் பணியாளர்களும் இச்சந்திப்பில் பங்கு கொண்டனர்.

IMG_8587 IMG_8589