வன்னி புத்தகத் திருவிழாவில் நூலக நிறுவன செயற்பாடுகள் – 2023

Published on Author Loashini Thiruchendooran

தமிழ்மாமன்றத்தின் 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜூன் 24,25 ஆம் திகதிகளில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நடாத்தப்பட்ட வன்னியின் புத்தகப் பண்பாட்டு திருவிழாவில் நூலக நிறுவனமும் கலந்து கொண்டது.

இந்நிகழ்வில் நூலக நிறுவனம் சார்பில் சிறகுகள் அமைய வன்னி பிராந்திய செயற்பாட்டாளர்கள்  கலந்து கொண்டதுடன்  பார்வையாளர்கள் மத்தியில் நூலக நிறுவனம் தொடர்பிலான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிப்பு, நூலகத்தின் ஈ-பள்ளிக்கூடம் செயற்றிட்டம் தொடர்பான விளக்கமளிப்பு மற்றும் நூலக நிறுவன செயற்பாடுகள் தொடர்பான விளக்கமளிப்பு என்பன இடம்பெற்றன.

image16 image2

குறிப்பாக நூலக ஆளுகைச் சபை அங்கத்தவர் சுஜீவன் தர்மரத்தினம் அவர்களால் 25 ஆம் திகதி காலை 10 மணிக்கு நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் பணிகளை அறிமுகப்படுத்தும் சிறப்புக் கலந்துரையாடலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

image13 image19

image14 image11