நூலகத்தில் தினச்செய்தி வாரப் பத்திரிகை

Published on Author Noolaham Foundation

அண்மைக்காலமாக யாழில் இருந்து வெளியாகிக் கொண்டிருக்கும் ‘தினச்செய்தி’ வாரப்பத்திரிகைகளை நூலக நிறுவனத்தில் ஆவணப்படுத்துவதற்கு, அதன் தலைமை ஆசிரியரும், ஏசியன் ரிபீயூன் (Asian Tribune) செய்தித்தளத்தின் தலைமை ஆசிரியருமான கே.ரீ.ராஜசிங்கம் அவர்கள் இணங்கியதுடன், தினச்செய்தியின் ஆரம்ப வெளியீடுகளை நிறுவனத்திடம் கையளித்தார்.

K t r

15/10/2015 அன்று அவரது தினச்செய்தி பணிமனையில் வைத்து நூலக நிறுவனத்தின் தொடர்பாடல் அலுவலகர் மற்றும் நூலக நிறுவனத்தின் தன்னார்வலருடனும் இடம்பெற்ற இச் சந்திப்பிலேயே கே.ரீ.ராஜசிங்கம் அவர்கள் இவ் இணக்கத்தினை தெருவித்திருந்ததுடன் அவரது எழுத்தில் வெளியான இரு நூல்களையும் நூலகத்தில் ஆவணப்படுத்துவதற்காக வழங்கியிருந்தார். இச்செய்தி இவ்வார தினச்செய்திப் பத்திரிகையிலும் பிரசுரமாகி இருந்தது.

K t raja

K t raj

K t ra

விரைவில் நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலகத்தில் அவ்வெளியீடுகள் ஆவணப்படுத்தப்பட்டு அனைவருக்கும் பகிரப்படும்.

{{உலகலாவிய ரீதியில் இலங்கைத்தமிழ் பேசும் சமூகம் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கும் அவற்றை திறந்த அணுக்கத்தில் அனைவருக்கும் பகிர்வதற்கும் உங்களது ஆவணங்களை நூலகத்துடன் பகிர்ந்துகொள்வதற்கு தொடர்பு கொள்ளுங்கள்- +94 112 363 261/ +94 212 231 292}}