நூலகத்தில் வேலணையூர் தாஸ் படைப்புக்கள்

Published on Author Noolaham Foundation

யாழ் இலக்கியக் குவியத்தின் முன்னணி இலக்கியச் செயற்பாட்டாளரும் கவிஞர், எழுத்தாளர் மற்றும் விமர்சகர், இலக்கிய நிகழ்வுகளின் இணைப்பாளர் ‘வேலணையூர் தாஸ்’ அவர்கள் தனது நூல்களை நூலக நிறுவனத்தில் ஆவணப்படுத்துவதற்கான அனுமதியினை வழங்கியுள்ளார். இணைப்பில் நூல்கள்- http://tinyurl.com/oyrkmm5 {{உலகளாவிய ரீதியில் இலங்கைத்தமிழ் பேசும் சமூகம் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கும் அவற்றை திறந்த அணுக்கத்தில் அனைவருக்கும் பகிர்வதற்கும் உங்களது ஆவணங்களை நூலகத்துடன் பகிர்ந்துகொள்வதற்கு தொடர்பு கொள்ளுங்கள்- +94 112 363 261/ +94 212 231 292}}

நூலகத்தில் ஏட்டண்ணாவியார் செல்லையா சிவநாயகம் படைப்புகள்

Published on Author Noolaham Foundation

மட்டக்களப்பு, சீலாமுனையைச் சேர்ந்த ஏட்டண்ணாவியார் செல்லையா சிவநாயகம் தனது எழுத்தில் அமைந்த நூல்களை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்திப் பகிர்வதற்கான அனுமதியினை அளித்துள்ளார். செ.சிவநாயகம் பல மீளுருவாக்கக் கூத்துக்களை எழுதியுள்ளதுடன் தொடர்ச்சியாக கூத்துச்செயற்பாடுகளிலும் ஈடுபட்டுவருபவர். கூத்து மீளுருவாக்கம் தொடர்பில் ஆரம்பத்திலிருந்து அக்கிராமத்துடன் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றார். இணைப்பில் நூல்கள்- http://tinyurl.com/Sivanayagam {{உலகளாவிய ரீதியில் இலங்கைத்தமிழ் பேசும் சமூகம் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கும் அவற்றை திறந்த அணுக்கத்தில் அனைவருக்கும் பகிர்வதற்கும் உங்களது ஆவணங்களை நூலகத்துடன் பகிர்ந்துகொள்வதற்கு தொடர்பு கொள்ளுங்கள்-… Continue reading நூலகத்தில் ஏட்டண்ணாவியார் செல்லையா சிவநாயகம் படைப்புகள்

நூலகத்தில் நூல் தேட்டம் செல்வராஜாவின் நூல்கள்

Published on Author Noolaham Foundation

நூல் தேட்டம் செல்வராஜா என அனைவராலும் அறியப்படும் திரு. நடராஜா செல்வராஜா நூலக நிறுவனச் செயற்பாடுகளுக்குப் பலகாலமாகப் பங்களித்து வருபவர். அவ்வாறான நேரடிச் செயற்பாட்டாளர்கள் என்றாலும் ஒரு நிறுவனமாக முறைப்படி ஆவணப்படுத்துவதற்கு எழுத்துமூல அனுமதிகளை நூலக நிறுவனம் பெற்று வருகிறது. அவ்வகையில் செல்வராஜா அண்மையில் நூல் தேட்டப் பணிகளுக்காக இலங்கை வந்திருந்தபோது தனது அனுமதியினை நூலக நிறுவனத்திடம் அளித்துள்ளார். ஈழத்து நூலகவியலாளரில் மிக முக்கிய இடம் வகிக்கும் செல்வராஜா ஓர் எழுத்தாளர்; ஆய்வாளர்; பதிப்பாளரும் ஆவார். நூல்… Continue reading நூலகத்தில் நூல் தேட்டம் செல்வராஜாவின் நூல்கள்

நூலகத்தில் கெளரிபாலனின் நூல்கள்

Published on Author Noolaham Foundation

மட்டக்களப்பு குருக்கள்மடத்தினைச் சேர்ந்த சிறுகதை, நாடகம் மற்றும் சிறுவர் இலக்கிய எழுத்தாளர், சமூக ஆய்வாளர் வி.கெளரிபாலன் அவர்கள், தமது நூல்களை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்துவதற்கான அனுமதியினையும், தனது நூல்களையும் நூலக நிறுவனத்திடம் கையளித்துள்ளார். இவரது நூல்களான 1) பறப்பிழந்த வண்ணத்துப் பூச்சிகள், 2) வானுறையும் தெய்வத்தினுள் முதலிய நூல்கள் ஏற்கனவே நூலக நிறுவனத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இணைப்பில் கெளரிபாலனது நூல்கள்- http://tinyurl.com/Gowripalan {{உலகலாவிய ரீதியில் இலங்கைத்தமிழ் பேசும் சமூகம் தொடர்பான ஆவணப்படுத்தலுக்கும் அவற்றை திறந்த அணுக்கத்தில்… Continue reading நூலகத்தில் கெளரிபாலனின் நூல்கள்

நூலகத்தில் தினச்செய்தி வாரப் பத்திரிகை

Published on Author Noolaham Foundation

அண்மைக்காலமாக யாழில் இருந்து வெளியாகிக் கொண்டிருக்கும் ‘தினச்செய்தி’ வாரப்பத்திரிகைகளை நூலக நிறுவனத்தில் ஆவணப்படுத்துவதற்கு, அதன் தலைமை ஆசிரியரும், ஏசியன் ரிபீயூன் (Asian Tribune) செய்தித்தளத்தின் தலைமை ஆசிரியருமான கே.ரீ.ராஜசிங்கம் அவர்கள் இணங்கியதுடன், தினச்செய்தியின் ஆரம்ப வெளியீடுகளை நிறுவனத்திடம் கையளித்தார். 15/10/2015 அன்று அவரது தினச்செய்தி பணிமனையில் வைத்து நூலக நிறுவனத்தின் தொடர்பாடல் அலுவலகர் மற்றும் நூலக நிறுவனத்தின் தன்னார்வலருடனும் இடம்பெற்ற இச் சந்திப்பிலேயே கே.ரீ.ராஜசிங்கம் அவர்கள் இவ் இணக்கத்தினை தெருவித்திருந்ததுடன் அவரது எழுத்தில் வெளியான இரு நூல்களையும்… Continue reading நூலகத்தில் தினச்செய்தி வாரப் பத்திரிகை

‘செல்வி.தங்கேஸ்வரி’ அவர்கள் நூல்களை அணுக்கப்படுத்தல் அனுமதியை அளித்துள்ளார்

Published on Author Noolaham Foundation

இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்(2004), மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் முன்னாள் கலாசார உத்தியோகத்தரும், சமூக ஆய்வாளருமான ‘செல்வி.தங்கேஸ்வரி’ அவர்கள்; நூலக நிறுவனத்தில் தனது நூல்களை எண்ணிம ஆவணப்படுத்திப் பகிர்வதற்குரிய அனுமதியை அளித்துள்ளார். இவரது நூல்களான, 1) சுவாமி விபுலானந்தரின் தொல்லியலாய்வுகள் 2) குளக்கோட்டன் தரிசனம் 3) கிழக்கிலங்கை வரலாற்றுப் பாரம்பரியங்கள் போன்ற பல நூல்களை நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலகத்தில் அணுகிப் பயன்பெறமுடியும். கீழுள்ள இணைப்பில் அந் நூல்களையும் அவர் பற்றிய சிறு குறிப்பினையும் பார்வையிடலாம். 1)… Continue reading ‘செல்வி.தங்கேஸ்வரி’ அவர்கள் நூல்களை அணுக்கப்படுத்தல் அனுமதியை அளித்துள்ளார்

பேராசிரியர் செ. யோகராசா தனது நூல்களை அணுக்கப்படுத்தலுக்கான அனுமதியினை அளித்துள்ளார்

Published on Author Noolaham Foundation

கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் மூத்த பேராசிரியர் திரு.செ.யோகராசா அவர்கள் தனது நூல்களை நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்தி பகிர்வதற்கான அனுமதியினை நூலக நிறுவனத்துக்கு அளித்துள்ளார். மேலும் நூலக நிறுவனத்தின் ஆலோசனைக்குழுவில் அங்கத்துவம் வகித்துவரும் இவர்; நூலக நிறுவனத்தால் 2013ல் ஒழுங்கமைக்கப்பட்ட ஆய்வு மாநாட்டில் முக்கிய ஆலோசகராகவும், வளவாளராகவும் ஈழத்தமிழ் ஆவணப்படுத்தலுக்கு முக்கிய பங்காற்றியுமுள்ளார். அவரது நூல்களில் 1) இன்றைய இலக்கியங்களில் இதிகாசப் பெண்பாத்திரங்கள் 2) ஈழத்து நவீன இலக்கியம் 3) ஈழத்து நவீன கவிதை 4)… Continue reading பேராசிரியர் செ. யோகராசா தனது நூல்களை அணுக்கப்படுத்தலுக்கான அனுமதியினை அளித்துள்ளார்