திருகோணமலை மாவட்ட எழுத்தாளர்களின் புத்தக கண்காட்சியில் நூலக நிறுவனம் – 2023

Published on Author Loashini Thiruchendooran

ஒக்ரோபர் மாதம் 22 ஆம் திகதி காலை 9.00 மணிமுதல், திருகோணமலை பொதுநூலக கேட்போர் கூடத்தில், திருகோணமலை நகராட்சி மன்ற நூலகத்தின் வாசகர் வட்டம் ஒழுங்கமைத்த “திருகோணமலை மாவட்ட எழுத்தாளர்களின் புத்தக கண்காட்சி 2023” இல் நூலக நிறுவனமும் பங்குபற்றியது. 

புத்தக மாதத்தை முன்னிட்டு இடம்பெற்ற இக்கண்காட்சியில் திருகோணமலை மாவட்டத்தினை சேர்ந்த எழுத்தாளர்களின் நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், உள்ளுர் உணவு உற்பத்தி, சுயதொழில் உற்பத்தி கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வும் இடம்பெற்றது.

ஆரம்பத்தில் புத்தகக் கண்காட்சி பற்றிய ஒரு பொது நிகழ்வும் அதனைத் தொடர்ந்து புத்தகக் கண்காட்சியும் நடைபெற்றது.

WhatsApp Image 2023-11-02 at 12.34.39 (2) WhatsApp Image 2023-11-02 at 12.34.39 (1)

நூலக நிறுவனம் சார்பில் இந்நிகழ்வில் திருகோணமலை அலுவலகப் பணியாளர் கலந்துகொண்டிருந்தார். இப்புத்தக கண்காட்சியில்,

  • நூலக நிறுவனம் பற்றிய விபரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
  • அங்கு வருகை தந்தவர்களுக்கு நூலக நிறுவனம் பற்றியும் அதனது செயற்பாடுகள் பற்றியும் விளக்கம் கொடுக்கப்பட்டது.
  • திருகோணமலை எழுத்தாளர்கள் தொடர்பிலான தரவுகள் திரட்டப்பட்டன.
  • எழுத்தாளர்களின் படைப்புகள் தொடர்பில், நூலக வலைத்தளத்தில் ஆவணப்படுத்த தவறவிடப்பட்டவை பற்றி குறிப்பிட்ட எழுத்தாளர்களுக்கு தெரியப்படுத்தியதுடன் அவற்றுள் ஒரு சில படைப்புகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருந்தது.
  • மேலும் நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட வேண்டிய திருகோணமலையை சார்ந்த எழுத்தாளர்களை அடையாளங்காணக்கூடியதாக இருந்தது.

இக்கண்காட்சியானது நூலகத்தின் ஆவணப்படுத்தல் செயற்பாட்டிற்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 WhatsApp Image 2023-11-02 at 12.34.39