இந்திய தூதரகத்தினரின் நூலக நிறுவனத்திற்கான வருகை

Published on Author Noolaham Foundation

இந்திய தூதரகத்திலிருந்து நூலக நிறுவனத்தைப் பார்வையிடுவதற்காக இந்தியத் துணைத்தூதுவர் ச. பாலச்சந்திரன் (S. Balachandran) அவர்கள் 25 / 06 / 2020 அன்று வருகை தந்திருந்தார்.

அவருக்கு நூலக நிறுவன செயற்பாடுகள், அடைவுகள் பற்றி விளக்கமளிக்கப்பட்டது. நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டார். மேலும், இந்தியத்தூதரகம் யாழ்ப்பாணத்திற்கு வழங்கும் வசதிகள் பற்றியும் அதனைப்பயன்படுத்தும் படியும் கேட்டுக்கொண்டார்.

நூலக நிறுவனம் சார்பில் நூலக நிறுவன ஆளுகை சபையை சேர்ந்த இ. மயூரநாதன், நூலக நிறுவன நலன்விரும்பி ஜெஹான் அருளையா மற்றும் நூலக நிறுவனத்தின் தலைமைச் செயற்பாட்டு அலுவலர் குலசிங்கம் சோமராஜ் ஆகியோர் இச்சந்திப்பில் பங்கு கொண்டனர்.

 

Image may contain: one or more people, people sitting and sunglasses

 

Image may contain: 1 person, glasses

Image may contain: 2 people, people sitting and indoor