திரு. அகிலேசபிள்ளை அவர்களின் ஓலைச்சுவடிகளை மீளவும் கையளிக்கும் நிகழ்வு

Published on Author Noolaham Foundation

திருகோணமலையில் கணேசலிங்கம் ஸ்ரீதரன் அவர்களினால் பாதுகாக்கப்பட்டு வந்த திரு. அகிலேசபிள்ளை அவர்களின் ஓலைச்சுவடிகள் நுாலக நிறுவனத்தினரால் எண்ணிம வடிவில் ஆவணப்படுத்தப்பட்டு, மீளவும் கையளிக்கும் நிகழ்வு வைத்திய கலாநிதி த.ஜீவராஜ் அவர்களின் பங்குபற்றுதலுடன் 27.06.2020 அன்று திருகோணமலையில் அமைந்ததுள்ள கணேசலிங்கம் ஸ்ரீதரன் அவர்களின் வீட்டில் இடம்பெற்றது.

திருகோணமலை வரலாற்று ஆவணக்காப்பாளராக கருதப்படும் அமரர் வே. அகிலேசபிள்ளை அவர்கள் தஷ்ணகைலாய புராணம், திருகோணமலைப் புராணம், திருக்கரசைப் புராணம், கம்பசாத்திரம், பெரியவளமைப் பத்ததி, கோணேசர் கல்வெட்டு போன்ற நூல்களைக் கற்றுணர்ந்து அதனைப் பலரும் அறியவேண்டும் என்ற ஆவலில் உரைநடையாக திருக்கோணாசல வைபவம் என்ற நூலாக்கித் தந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Image may contain: food and indoor

 

Image may contain: 4 people, people sitting, table, child and indoor

 

Image may contain: 2 people, people sitting, table and indoor