சுன்னாகம் பொது நூலகக் கண்காட்சியில் நூலக நிறுவனம்

Published on Author Loashini Thiruchendooran

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு சுன்னாகம் பொது நூலக நிர்வாகத்தின் ஏற்பாட்டில்  எங்கட புத்தகங்களின் கண்காட்சியும் விற்பனையும் கடந்த 14.10.2022 அன்று யாழ்.சுன்னாகம் பொது நூலக மண்டபத்தில் ஆரம்பமானது. “அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு” எனும் தொனிப்பொருளில் அனைவரின் மத்தியிலும் வாசிப்பை ஊக்குவிக்கும் முகமாக குறித்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டதுடன் மேற்படி கண்காட்சியில் நூலக நிறுவனம் பங்குபற்றியது.

IMG_4556 IMG_4646

தொடர்ந்து நான்கு நாட்கள் இடம்பெற்ற இக்கண்காட்சியில் நூலக நிறுவன செயற்பாடுகள் தொடர்பான விளக்கமளிப்பும் குறிப்பாக சுவடிகளின் காட்சிப்படுத்தல்கள் மற்றும் அவற்றை எண்ணிமப்படுத்துவது தொடர்பிலும் விளக்கம் கொடுக்கப்பட்டது.

IMG_4810 a c b f d