யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொழிற்சந்தையில் நூலக நிறுவனம்

Published on Author Loashini Thiruchendooran
03.03.2023 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தொழிற்சந்தையில் நூலக நிறுவனமும் கலந்து கொண்டது. பெருமளவிலான தொழில் நிறுவனங்கள் பங்குகொண்ட இத்தொழிற் சந்தையில் நூலக நிறுவனம் சார்பில் நிறுவன பிரதம நிறைவேற்று அலுவலகர் றஞ்சுதமலர் நந்தகுமார் அவர்கள் கலந்துகொண்டு தொழில் வாய்ப்புகள் பற்றிய விளக்கத்தை வழங்கினார்.
இந்நிகழ்வில் 100 இற்கும் மேற்பட்ட தொழில் தேடுநர்கள் நூலக நிறுவனம் மற்றும் அதனது செயற்பாடுகள் பற்றி அறிந்து கொண்டதுடன் தம்மை பதிவு செய்து கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
image1    image2
image3    image5
image6