இரண்டாம் உலகப்போருக்கு முன் இலங்கையில் ஒருநாள் – காலக்கண்ணாடி 02

Published on Author தண்பொழிலன்

  உலகின் வல்லரசுகள் பல ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்த இரண்டாம் உலகப்போர் 1939 முதல் 1945 வரை இடம்பெற்றது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். அதற்கும் முன் இலங்கையில் வெளியான ஒரு பத்திரிகையின் செய்தியொன்றை இவ்வாரம் நாம் பார்க்கலாம்.   இந்தப் பத்திரிகை வெளியான ஆண்டு 1935. வெளியிட்ட பத்திரிகையின் பெயர், ஈழகேசரி ஈழகேசரி, 1930களிலிருந்து சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான ஒரு பத்திரிகை. அதை நிறுவியவர் குறிப்பிடத்தக்க ஈழத்து ஆளுமைகளுள் ஒருவரான நா.பொன்னையா அவர்கள்.அதன் 1935.07.21 திகதியிட்ட பத்திரிகையில் “இலங்கையில் யுத்தவீரர்… Continue reading இரண்டாம் உலகப்போருக்கு முன் இலங்கையில் ஒருநாள் – காலக்கண்ணாடி 02

“யாழ்ப்பாண இராச்சியம்” – பேராசிரியர்.சி.க.சிற்றம்பலம்

Published on Author தண்பொழிலன்

“யாழ்ப்பாண இராச்சியம்” எனும் நூலானது, இலங்கைத் தமிழரின் வரலாற்றைப் பொறுத்தவரை, மிக முக்கியமானதாகும். பேராசிரியர்.சி.க.சிற்றம்பலம் அவர்களின் தொகுப்பில், 1992 இல் யாழ்.பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்த இந்நூல், வட இலங்கையில் நிலவிய தமிழரசு பற்றிய அதிகபட்ச சான்றாதாரங்களுடன் எழுதப்பட்ட அருமையான நூல் ஆகும். இந்நூலானது, அதிகபட்ச வரலாற்றுணர்வோடு இலங்கையில் எழுதப்பட்ட தமிழ்நூல்களில் ஒன்று எனலாம். யாழ் தீபகற்பத்தின் வரலாற்றைப் பாடுகின்ற, கைலாயமாலை, வையாபாடல், யாழ்ப்பாண வைபவ மாலை ஆகிய தொன்மங்களை அப்படியே எடுத்தாளாமல், அவற்றில் “கதை” எனத் தள்ளத்தக்கவற்றைத்… Continue reading “யாழ்ப்பாண இராச்சியம்” – பேராசிரியர்.சி.க.சிற்றம்பலம்

ஐந்து புத்தக சவால் – இலங்கை வரலாறு!

Published on Author தண்பொழிலன்

முகநூலில் அண்மையில் பிரபலமாக இருந்த ஐந்து புத்தகங்கள் சவால் (Five books challenge) பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். பொதுவாக இந்த சவாலில் தங்களுக்குப் பிடித்த ஐந்து புத்தகங்களின் அட்டைகளைப் பதிவிட்டு, இன்னும் ஐந்து பேரை இணைத்துக்கொள்வார்கள். அவ்வாறு இணைக்கப்பட்ட ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த ஐந்து புத்தகங்களின் அட்டைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். பிரபலமான அல்லது பலருக்கும் பிடித்தமான புத்தகங்களின் அட்டைகளே இந்த சவாலில் பெரும்பாலும் பகிர்ந்துகொள்ளப்பட்டன. எனினும், முகநூல் பதிவர்கள், பத்தோடு பதினொன்றாகக் கருதி அந்தப் பதிவுக்கு விருப்பம்… Continue reading ஐந்து புத்தக சவால் – இலங்கை வரலாறு!

புத்தகங்களுக்கு ஒரு நாள்!

Published on Author தண்பொழிலன்

இந்த ஆண்டிற்கான உலக புத்தக தினமானது ஏப்ரல் 23, 2018 திங்கட்கிழமையன்று உலகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. கடந்த 1995இலிருந்து யுனெஸ்கோ அமைப்பின் அனுசரணையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் திகதி கொண்டாடப்பட்டுவரும் இத்தினமானது புத்தகம், அதன் பதிப்புரிமை மற்றும்  வாசிப்பைப் பழக்கத்தை அதிகரித்தல் முதலியவற்றை நோக்கமாகக் கொண்டதாகும். எனவே, சில இடங்களில் இது “புத்தக பதிப்புரிமை தினம்” என்றும் அழைக்கப்படுகிறது. 1920களிலேயே ஸ்பெயினில் உலக புத்தக தினம் பற்றிய கருதுகோள் தோன்றிவிட்டது என்றாலும், 1995ஆம் ஆண்டிலேயே யுனெஸ்கோ… Continue reading புத்தகங்களுக்கு ஒரு நாள்!

2017இல் நூலக நிறுவனம்: ஒரு மீள் பார்வை

Published on Author தண்பொழிலன்

நூலக நிறுவனமானது, வெற்றிகரமாக தனது 14 ஆவது ஆண்டுக்குள் காலடியெடுத்து வைக்கும் இவ்வேளையில், கடந்த 2017இல் சிறப்பாகச் செய்துமுடித்த முக்கியமான மைல்கற்களையும், அடுத்த ஆண்டுக்காகவும் தொடரும் நடவடிக்கைகளையும் கவனப்படுத்த விரும்புகின்றது. நூலகத்தின் 2017ஆம் ஆண்டில் செய்து முடிக்கப்பட்ட முதன்மை அடைவுகளாக பின்வருவனவற்றைப் பட்டியல் படுத்தலாம். 50,000 எழுத்தாவணங்கள் இலக்கைத் தாண்டியது – எண்ணிம நூலகம் ஆவணகத் தளம் வெளியீடும் சுமார் 2,500 பல்லூடகங்களின் சேமிப்பும் 70 இற்கும் மேற்பட்ட வாய்மொழி வரலாறுகள் ஈழத்து நூற்பட்டியலை எண்ணிமப்படுத்தல் – 11,500 நூல் விபரங்கள் மலையகம், திருகோணமலை,… Continue reading 2017இல் நூலக நிறுவனம்: ஒரு மீள் பார்வை

காலக்கண்ணாடி 01: காலங்கள் மாறும் காட்சிகள் மாறாது

Published on Author தண்பொழிலன்

“சிங்களத்தையும் தமிழையும் இந்த நாட்டின் உத்தியோக பாஷைகளாக்க இலங்கை அரசியல் சட்டத்தை மாற்றுவோம் என்று இலங்கைப் பிரதமர் சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் கூறியதை எதிர்த்து வெகுசீக்கிரத்தில் அரசாங்க பாராளுமன்ற கட்சிக் கூட்டத்தில் பிரச்சினை எழுப்பப்படும்” இந்தச் செய்தியைப் படித்து நீங்கள் ஒன்றும் குழப்பமடையத் தேவையில்லை. இது சமகாலச் செய்தி அல்ல.செய்தியில் கூறப்படும் பிரதமர் சேர். ஜோன் கொத்தலாவல. இலங்கையின் மூன்றாவது பிரதமர். ஆம். சரியாக அறுபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன் இலங்கையின் பழம்பெரும் பத்திரிகைகளில் ஒன்றான சுதந்திரனின், 1954… Continue reading காலக்கண்ணாடி 01: காலங்கள் மாறும் காட்சிகள் மாறாது

பல்லூடக ஆவணக வளர்ச்சி

Published on Author Noolaham Foundation

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட பல்லூடக ஆவணகம் பல பரிணாமங்களில் வளர்ச்சி பெற்று வருகின்றது. ஜெயரூபி சிவபாலன், குலசிங்கம் வசீகரன், இ. மயூரநாதன், ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம், பிரபாகர் நடராசா, தமிழினி, ச. சாந்தன் உட்பட்ட பல பங்களிப்பாளர்களின் தன்னார்வப் பங்களிப்பால் நூலக ஒளிப்படச் சேகரம் 1,100 படங்களை தாண்டியுள்ளது.  இந்தப் படங்கள் சமூக வரலாற்று கல்வி முக்கியத்துவம் வாந்த படங்கள்.  பெரும்பாலானவை ஆவணக தரத்தில் (archival quality) அமைந்தவை.  இவர்களுக்கு எமது நன்றிகளும் வாழ்த்துகளும். இலங்கைத் தமிழ்… Continue reading பல்லூடக ஆவணக வளர்ச்சி