எண்ணிம ஆவணப்படுத்தல் மற்றும் இலத்திரனியல் பள்ளிக்கூடம் நோக்கி மலையகம்

Published on Author Noolaham Foundation

‘இந்த காலத்தில் எல்லாமே கொம்பியூட்டர்தான்’ என்பதே இப்போது பலரும் உச்சரிக்கும் வசனங்களாகிப் போகுமளவுக்கு கொம்பியூட்டர் எனப்படும் கணிணியும் அதனோடு இணைந்த இணைய (இன்டர்நெட்) பாவணையும் வந்துவிட்டது. விரும்பியோ விரும்பாமலோ அந்த தொழிநுட்பம் சார்ந்து நமக்கான தெரிவுகளைச் செய்யத் தூண்டப்படுகிறோம். வீட்டுக்கு ஒரு கணிணியும் ஆளுக்கொரு தொலைபேசியும் இப்போது அத்தியாவசியமாகிவிட்டது. இணையப் பாவனை பரவலாக்கப்பட்டு கைப்பேசியிலேயேகூட இணைய வசதியைப் பெறும் நிலைமை இன்று உள்ளது. இந்த வளர்ச்சி காலகட்டத்திற்குள் நாம் எவ்வாறு நமது முன்னோக்கிய பயணத்திற்கு இந்த கணிணி… Continue reading எண்ணிம ஆவணப்படுத்தல் மற்றும் இலத்திரனியல் பள்ளிக்கூடம் நோக்கி மலையகம்

ஓலைச்சுவடி அறிமுகமும் பாதுகாப்பும்

Published on Author Noolaham Foundation

     முனைவர் ஜெ. முத்துச்செல்வன்  உலகில் மனித இனம் தோன்றி அவற்றின் படிப்படியான வளர்ச்சியின் காரணமாக மொழிகள் உருவாகின.  அம்மொழியானது தொடக்க நிலையில் ஒலிக்குறிப்புகளையும், அதற்கு அடுத்த நிலையில் பேச்சுமொழியையும், வளர்ந்த நிலையில்  இலக்கியங்களையும், வளர்ச்சியின் உச்சநிலையில் இலக்கணங்களையும் உருவாக்கி, தன் நிலையின் வளர்ச்சிப் படிநிலைகளைப் பதிவு செய்கின்றது.  இவ்வாறு உலகில் தோன்றிய பழமையான மொழிகளுள் ஒன்று தமிழ்மொழி.  இம்மொழியின் தோற்றம்,  ஆதிவடிவம் போன்றவற்றை அறியமுடியவில்லை.  ஆனால் கி.மு. 2ஆம் நூற்றாண்டிலிருந்த தமிழ் எழுத்துகளின் வடிவம் காலத்திற்குக்… Continue reading ஓலைச்சுவடி அறிமுகமும் பாதுகாப்பும்

நூலக நிறுவனத்தின் பதிப்புச் செயற்பாடுகள்

Published on Author Noolaham Foundation

இலங்கையின் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான ஆவணப்படுத்தலில் ஈடுபட்டுவரும் நூலக நிறுவனம் அது சார்ந்த பதிப்பு முயற்சிகளையும் தொடங்கியுள்ளது என்பதனை அறியத் தருவதில் மகிழ்ச்சியடைகிறோம். பின்வரும் வகையான பதிப்புச் செயற்பாடுகளில் ஈடுபட நூலக நிறுவனம் தீர்மானித்துள்ளது. 1. பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நுற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதிகளிலும் வெளியாகிய நுல்களை ஆவணப்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் சில மீள்பதிப்புக்களைக் வெளிகொண்டு வருவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 2. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அதற்கு முன்னரும் வாழ்ந்த முக்கிய எழுத்தாளுமைகளுடைய தொகுப்புக்களை செம்பதிப்புக்களாக வெளிக்கொணர்வதற்கு… Continue reading நூலக நிறுவனத்தின் பதிப்புச் செயற்பாடுகள்

சமூக ஆய்வுகளின் புதிய தளம்; “நூலகம்” ஆய்விதழ்

Published on Author Noolaham Foundation

இலங்கையின் தமிழ் பேசும் சமூகங்கள் தமக்குள் கொண்டிருக்கும் மரபறிவுச்செல்வங்கள் ஏராளமானவை. ஒவ்வொரு காலப்பரப்பிலும் அவை கண்டுகொள்ளப்படாமல் அழிந்தொழிந்து போகின்றன. நமக்கு முந்தைய தலை முறையினரிடம் இருந்து, நாம் பெற்றுக்கொண்டவற்றை விட இழந்தவைகள் ஏராளம். ஒவ்வொரு தலைமுறை எழுச்சியின் போதும் இந்த விபத்து நடந்துகொண்டே இருக்கின்றது. நமது சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகள் ஒவ்வொன்றும் ஆராயப்பட்டு மிகக்கவனமாக ஆவணப்படுத்தப் பட வேண்டும் என்பதில் நமக்குள் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் இதுவரை செயலில் இறங்கி அதைச் செய்தவர்கள் மிகச்சிலரே. நேற்று… Continue reading சமூக ஆய்வுகளின் புதிய தளம்; “நூலகம்” ஆய்விதழ்

நூலக நிறுவனத்தின் ஓலைச்சுவடி ஆவணப்படுத்தல் செயல்த்திட்டம்

Published on Author Noolaham Foundation

 நூலகம் நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் முயற்சியில் ஓலைச்சுவடி ஆவணப்படுத்தல் என்ற செயற்பாடு அண்மையில் சுன்னாகம் பொது நூலகத்தில் இடம்பெற்றது.சோதிடம் மற்றும் மருத்துவம் சம்பந்தமான குறிப்பிட்ட தொகைச் சுவடிகள் முதற்கட்டமாக மின்வடிவத்திற்கு மாற்றப்பட்டன. இவ்வாறு 1385 சுவடிகளும் 75 வரையான பண்டைக்கால நாணயங்களும் மின்னூல் வடிவத்தில் ஆவணப்படுத்தப்பட்டன. ஓலைச்சுவடிகள் ஆவணமாக்கல் தொடர்பான பயிற்சி ஒன்றினை அண்மையில் பாண்டிச்சேரியில் நிறைவு செய்து கொண்டு திரும்பிய நூலக நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி சிவானந்தமூர்த்தி சேரனுடன் நூலகம் ஓலைச்சுவடிகள் ஆவணப்படுத்தலுக்குப் பொறுப்பான முனைவர்    … Continue reading நூலக நிறுவனத்தின் ஓலைச்சுவடி ஆவணப்படுத்தல் செயல்த்திட்டம்

“பனையோலை” – ஆவணப்படுத்தல் செயலமர்வு

Published on Author Noolaham Foundation

நூலகத்தின் ஏற்பாட்டில் “பனையோலை – ஆவணப்படுத்தல் செயலமர்வு” 09.09.2012அன்று யாழ்ப்பாணம், ‘தொடர்பகம்’ மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு நூலகம் நிறுவனத்தின் யாழ் இணைப்பாளர் திரு கே. கௌதமன் தலைமை வகித்தார். “இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்களின் ஆவணப்படுத்தலின் அவசியம்” என்ற தலைப்பில் யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் கு. குருபரன், “இலங்கை தமிழ்பேசும் சமூகங்களின் ஆவணப்படுத்தல் சார்ந்து இன்றைய எமது நிலை” என்ற தலைப்பில் முனைவர் ஜெ. அரங்கராஜ், “சர்வதேச நியமங்களினுடனான உலக நாடுகளின் ஆவணப்படுத்தல்” என்ற தலைப்பில்… Continue reading “பனையோலை” – ஆவணப்படுத்தல் செயலமர்வு

ஈழநாதன் காலமானார் – துயர் பகிர்கிறோம்

Published on Author Noolaham Foundation

நூலகத் திட்டத்தின் தொடக்க உறுப்பினர்களுள் ஒருவரும் நூலக நிறுவனத்தின் முக்கிய பங்களிப்பாளருமான புவனேந்திரன் ஈழநாதன் அவர்கள் 30.09.2012 அன்று அகால மரணமடைந்ததை முன்னிட்டு நூலக நிறுவனம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றது. நூலகத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து நூலகத்தின் செயற்பாடுகளில் பங்கு கொண்டு தனது உழைப்பைச் செலுத்தியவர் ஈழநாதன் அவர்கள். மிகச் சிறிய அளவிலிருந்த நூலகத் திட்டத்துக்கு வளங்களைத் திரட்டியும் பெருமளவு பங்களிப்பாளர்களை இணைத்தும் அதன் செயற்பாடுகளைச் சாத்தியமாக்கியவர் ஈழநாதன். அவரது பங்களிப்பு கிடைக்காது போயிருந்தால்… Continue reading ஈழநாதன் காலமானார் – துயர் பகிர்கிறோம்