பல்லூடக ஆவணக மைல்கல் – 100+ ஒலிப்பதிவுகள்

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனத்தின் பல்லூடக ஆவணக வலைத்தளத்தில் சேகரிக்கப்பட்டுள்ள ஒலிப் பதிவுகளின் எண்ணிக்கை இன்று 100 இனைக் கடந்துள்ளது. நூல் வெளியீடுகளின் ஒலிப்பதிவுகள், மேடைப் பேச்சுக்கள், வாய்மொழி வரலாறுகள், மெல்லிசைப் பாடல்கள், வானொலி நிகழ்ச்சிகள், நேர்காணல்கள் எனப் பல்வேறு பதிவுகள் இடம்பெற்றுள்ளன.   http://aavanaham.org/islandora/object/islandora:audio_collection       நூலக பல்லூடக ஆவணகத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் ஆக்கங்களை noolahamcollections@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.      இந்தத் தளத்தில் நீங்களும் ஆக்கங்களை அனுமதி பெற்று பதிவேற்ற… Continue reading பல்லூடக ஆவணக மைல்கல் – 100+ ஒலிப்பதிவுகள்

கேப்பாபுலவு : நிலமீட்புக்கான மக்கள் போராட்டத்தின் கதை

Published on Author Noolaham Foundation
கேப்பாபுலவு

கேப்பாபுலவு மக்கள் தமது வாழ்விடங்களை இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து மீளப்பெறுவதற்காக தன்னிச்சையாக உறுதியுடன் வயது பாரபட்ச்சமின்றி இரவு பகலாக போராடி வருகின்றனர். இந்த நூலானது 20 நாட்கள் தாண்டிய அவர்களது அறப்போரட்ட காலத்தில் வரலாற்றுப்பதிவாக வெளிவந்துள்ளது. இதில் கேப்பாபுலவின் வரலாறு, இராணுவ ஆக்கிரமிப்பு , மக்களின் மனநிலைகளை அவரவர்களின் வார்த்தைகளிலும், அறப்போரட்ட நிகழ்வுகளை கால அட்டவணையிலும் விரிவாக பதியப்பட்டிருக்கிறது. ஈழத்தமிழர் வரலாற்றில் இவ்வாறன வரலாற்றுப்பதிவுகள் அவை நிகழும் சமகாலத்தில் எழுதப்படுவது அரிது. இந்த நூலினை நூலகத்தில் வாசிக்கலாம் http://www.noolaham.org/wiki/index.php/கேப்பாபுலவு:_நிலமீட்புக்கான_மக்கள்_போராட்டத்தின்_கதை

நூலக நிறுவன பல்லூடகத் தள வெளியீடு

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனத்தின் பல்லூடாக ஆவணகத் தளம் (aavanaham.org) இன்று பொதுவில் வெளியிடப்படும் செய்தியைப் பகிர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.  நீண்ட காலம் எமது இலக்குகளில் ஒன்றாக இருந்த இந்தச் செயற்திட்டம் வெளிவருவது நூலக நிறுவன ஆவணப்படுத்தற் பணிகளைச் சிறப்பாக முன்னெடுப்பதில் முக்கிய பங்காற்றும். நூலக பல்லூடாக ஆவணகம் (Multimedia Archiving Platform) நூலக நிறுவனத்தின் பின்வரும் முக்கிய தேவைகளை நிறைவேற்ற உதவுகின்றது. * ஒலிக் கோப்புக்கள் (audio), நிகழ்படங்கள் (video), ஒளிப்படங்கள் (photos), எண்ணிம ஆவணங்கள் (born… Continue reading நூலக நிறுவன பல்லூடகத் தள வெளியீடு

நூலகத்தில் தினப்புயல் வாரப் பத்திரிகை

Published on Author Noolaham Foundation

“தினப்புயல்” வாரப்பத்திரிகை; வன்னிமண்ணிலிருந்து 2012ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.  இப்பத்திரிகைகளின் ஆரம்ப வெளியீடுகள் முதல் அனைத்து வெளியீடுகளையும் நூலக நிறுவன எண்ணிம நூலகத்தினூடாக இனிவரும் காலங்களில் தொடர்ச்சியாக ஆவணப்படுத்தி வெளியிடுவதற்கான அனுமதியினை “தினப்புயல்” இயக்குணரும், முன்னணி ஊடகவியலாளரும், இரணியன் எனும் புனைபெயரில் ஊடகங்களில் எழுதிவரும் சக்திவேல் பிள்ளை பிரகாஷ் அவர்கள் நூலக நிறுவன தொடர்பாடல் மற்றும் சமூகத்தொடர்பு அலுவலகரிடம், வவுனியாவில் தேக்கவத்தையில் அமைந்துள்ள “தினப்புயல்”… Continue reading நூலகத்தில் தினப்புயல் வாரப் பத்திரிகை

நூலகத்தில் மட்டக்களப்பு இசைநாடகப் பள்ளியின் வெளியீடுகள்

Published on Author Noolaham Foundation

இசைநாடகப்பள்ளி; மட்டக்களப்பின் குருக்கள் மடத்தில் இருந்து கீதா கெளரிபாலன் என்பவரால் கடந்த இருஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு இசை மற்றும் நாடகம் முதலியவற்றினை தொடர்ச்சியாக பேணும் நோக்குடனும் புதியதோர் தலைமுறையினை இதன்பால் வளர்த்தெடுக்கும் நோக்குடனும் தொடர்ந்து இயங்கிவருகின்றது. இவ் இசைநாடகப் பள்ளியின் வெளியீடாக ‘வியளம்’ எனும் சஞ்சிகை சிறுவர்கள், இளையோர்கள் போன்றோரின் ஆற்றலுக்கு களமமைக்கும் விதமாக அண்மைக்காலமாக வெளியிடப்படுகின்றது. இச் சஞ்சிகைகள் நூலக நிறுவனத்தில் தொடர்ச்சியாக ஆவணப்படுத்தப்படுகின்றன. இவற்றின் பிரதிகள் மற்றும் அனுமதிகள் போன்றவற்றினை ‘இசைநாடகப் பள்ளியின்’ நிறுவனரும்,… Continue reading நூலகத்தில் மட்டக்களப்பு இசைநாடகப் பள்ளியின் வெளியீடுகள்

நூலகத்தில் வலம்புரி நாளிதழ்

Published on Author Noolaham Foundation

பதினைந்து ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள வலம்புரிப் பத்திரிகையானது 1999ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இற்றை வரை சிறப்பான செய்திப்பதிவுகளை மேற்கொண்டுவரும் ஓர் தினசரி செய்திப் பத்திரிகை ஆகும். மேலும் இலங்கையின் வடபகுதி ஊடகங்களில் பதினைந்து ஆண்டுகால சிறப்பான செய்திப்பதிவுகள் அடங்கிய வரலாற்றுப் பின்புலத்தினை கொண்ட இப்பத்திரிகையானது தனது ஆரம்பகால வெளியீடுகள் உட்பட அனைத்து வெளியீடுகளையும் இலங்கை தமிழ் பேசும் சமூகத்தின் எண்ணிம ஆவணக்காப்பகமான நூலக நிறுவனத்தில் ஆவணப்படுத்தி உலகலாவிய ரீதியில் திறந்த அணுக்கத்தில் பகிரவுள்ளது. நூலக… Continue reading நூலகத்தில் வலம்புரி நாளிதழ்

நூலகத்தில் நினைவு மலர்கள்

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனம் கடந்த பதினொரு ஆண்டுகளில் இலங்கைத் தமிழ்பேசும் சமூகம் தொடர்பான எண்ணிம ஆவணப்படுத்தலின் ஒரு பகுதியாக 300க்கும் மேற்பட்ட நினைவு மலர்களை (கல்வெட்டுக்கள்) ஆவணப்படுத்தி http://tinyurl.com/nt5bqcf மூலம் பகிர்ந்துள்ளது. பொதுவாக நூலகங்களிலோ ஆவணகங்களிலோ நினைவு மலர்கள், அந்தியட்டி, திவச கல்வெட்டுக்கள் ஆவணப்படுத்துதல் அரிதாக உள்ளது. எமது சமூக, சமய, பண்பாட்டு, பிரதேச வரலாற்றுத் தகவல்களைக் கொண்டிருக்கும் இந்த வெளியீடுகளின் முக்கியத்துவம் போதிய அளவில் புரிந்து கொள்ளப்படவில்லை. இச் சூழலில் நூலக நிறுவனம் இவற்றின் முக்கியத்துவம் கருதிப்… Continue reading நூலகத்தில் நினைவு மலர்கள்