‘செல்வி.தங்கேஸ்வரி’ அவர்கள் நூல்களை அணுக்கப்படுத்தல் அனுமதியை அளித்துள்ளார்

Published on Author Noolaham Foundation

இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்(2004), மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் முன்னாள் கலாசார உத்தியோகத்தரும், சமூக ஆய்வாளருமான ‘செல்வி.தங்கேஸ்வரி’ அவர்கள்; நூலக நிறுவனத்தில் தனது நூல்களை எண்ணிம ஆவணப்படுத்திப் பகிர்வதற்குரிய அனுமதியை அளித்துள்ளார். இவரது நூல்களான, 1) சுவாமி விபுலானந்தரின் தொல்லியலாய்வுகள் 2) குளக்கோட்டன் தரிசனம் 3) கிழக்கிலங்கை வரலாற்றுப் பாரம்பரியங்கள் போன்ற பல நூல்களை நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலகத்தில் அணுகிப் பயன்பெறமுடியும். கீழுள்ள இணைப்பில் அந் நூல்களையும் அவர் பற்றிய சிறு குறிப்பினையும் பார்வையிடலாம். 1)… Continue reading ‘செல்வி.தங்கேஸ்வரி’ அவர்கள் நூல்களை அணுக்கப்படுத்தல் அனுமதியை அளித்துள்ளார்

பேராசிரியர் செ. யோகராசா தனது நூல்களை அணுக்கப்படுத்தலுக்கான அனுமதியினை அளித்துள்ளார்

Published on Author Noolaham Foundation

கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் மூத்த பேராசிரியர் திரு.செ.யோகராசா அவர்கள் தனது நூல்களை நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்தி பகிர்வதற்கான அனுமதியினை நூலக நிறுவனத்துக்கு அளித்துள்ளார். மேலும் நூலக நிறுவனத்தின் ஆலோசனைக்குழுவில் அங்கத்துவம் வகித்துவரும் இவர்; நூலக நிறுவனத்தால் 2013ல் ஒழுங்கமைக்கப்பட்ட ஆய்வு மாநாட்டில் முக்கிய ஆலோசகராகவும், வளவாளராகவும் ஈழத்தமிழ் ஆவணப்படுத்தலுக்கு முக்கிய பங்காற்றியுமுள்ளார். அவரது நூல்களில் 1) இன்றைய இலக்கியங்களில் இதிகாசப் பெண்பாத்திரங்கள் 2) ஈழத்து நவீன இலக்கியம் 3) ஈழத்து நவீன கவிதை 4)… Continue reading பேராசிரியர் செ. யோகராசா தனது நூல்களை அணுக்கப்படுத்தலுக்கான அனுமதியினை அளித்துள்ளார்

வடமாகாண அமைச்சர் பொ. ஐங்கரநேசன் நூலக நிறுவனச் செயற்பாடுகளுக்கு உதவி

Published on Author Noolaham Foundation

வடமாகாண சூழலியல் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் திரு. பொன்னுத்துரை ஐங்கரநேசன், நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் செயற்பாடுகளுக்கு தொடர்ச்சியாக வலுச்சேர்க்கும் வகையில் சில உபகரணங்களை அவரது அலுவலகத்தில் வைத்து நூலக நிறுவனத்திடம் 23/09/2015 அன்று கையளித்தார். மேலும் அவர் எழுதிய நூல்களையும், 1993 இல் இருந்து 2012 வரையான காலப்பகுதியில் வெளியாகிய அவரது “நங்கூரம்” சஞ்சிகைகளையும் நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்தி திறந்த அணுக்கத்தில் பகிர்வதற்கான அனுமதியினையும் 2015/05/22 அன்று நூலக நிறுவனத்திடம் கையளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. நூலக… Continue reading வடமாகாண அமைச்சர் பொ. ஐங்கரநேசன் நூலக நிறுவனச் செயற்பாடுகளுக்கு உதவி

மகுடம் வெளியீடுகளை அணுக்கப்படுத்தலுக்கான அனுமதி பெறப்பட்டது

Published on Author Noolaham Foundation

‘மகுடம்’ இதழ் 2012ஆம் ஆண்டின் முற்பகுதியிலிருந்து ஆண்டுக்கு நான்கு இதழ்களாக கிழக்கிலங்கை மட்டக்களப்பிலிருந்து கலை இலக்கிய சமூக பண்பாட்டுக்கான காலாண்டிதழாக தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றது. மகுடம் இதழின் ஆசிரியர் திரு வி.மைக்கல் கொலின் அவர்கள் நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் மகுடம் காலாண்டிதழ்களையும், மகுடம் வெளியீட்டால் வெளியிடப்படும் இதர வெளியீடுகளையும் ஆவணப்படுத்தும் அனுமதியினை அளித்திருந்தார். நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ‘இதழ்கள்’ பகுதியினூடாக மகுடம் சஞ்சிகைகளையும் இன்னும் பிற நூல்களையும் உலகலாவிய ரீதியில் தொடர்ச்சியாக அணுகிப் பயன்பெறமுடியும்.… Continue reading மகுடம் வெளியீடுகளை அணுக்கப்படுத்தலுக்கான அனுமதி பெறப்பட்டது

பல்துறைக் கலைஞர் ஏ. ரீ. பொன்னுத்துரை அவர்களின் நூல்கள் எண்ணிம நூலகத்தில்

Published on Author Noolaham Foundation

ஈழத்துத் தமிழ் உலகில் 1960கள் முதல் தலை சிறந்து விளங்கிய நாடகவியலாளர், எழுத்தாளர் போன்ற பல்துறை விற்பன்னர், மறைந்த கலைப்பேரரசு ஏ.ரீ. பொன்னுத்துரை அவர்களின் எழுத்தில் அமைந்த வெளியிடப்பட்ட நூல்கள் நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் எண்ணிம ஆவணப்படுத்தப்பட்டு மறக்க முடியா வரலாறாக விளங்குகின்றது. கலைப்பேரரசு ஏ.ரீ. பொன்னுத்துரை அவர்களின் நூல்களை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் எண்ணிம ஆவணமாக்கிப் பகிர்வதற்கான அனுமதியினை அவரது மகள் திருமதி தயாபரன் அவர்கள் 31/08/2015 அன்று நூலக நிறுவனத்திடம் கையளித்தார்.… Continue reading பல்துறைக் கலைஞர் ஏ. ரீ. பொன்னுத்துரை அவர்களின் நூல்கள் எண்ணிம நூலகத்தில்

நூலகத்தில் அம்பலம், நடுகை இதழ்கள்

Published on Author Noolaham Foundation

“அம்பலம் குழுமம்” 2000களில் வெளியிட்ட “அம்பலம் இதழ்”, “நடுகை கவிதை இதழ்” முதலியன உட்பட அவர்களது அனைத்து வெளியீடுகளையும் முழுமையாக நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் ஆவணப்படுத்தி, திறந்த அணுக்கத்தில் உலகலாவிய ரீதியில் பகிர்வதற்கான அனுமதியினை அதன் ஆசிரியர் த.பிரபாகரன் 25/09/2015 அன்று நூலக நிறுவன தொடர்பாடல் அலுவலகரிடம் நிறுவனத்தின் யாழ்ப்பாண நிகழ்ச்சித்திட்ட அலுவலகத்தில் வைத்து கையளித்தார். மேலும் அம்பலம் ஆசிரியர் த.பிரபாகரன் அவர்களால் “நெம்பு” எனும் பெயரில் அமைந்த இளைஞர்களுக்கான ஒரு மாத இதழும் விரைவில்… Continue reading நூலகத்தில் அம்பலம், நடுகை இதழ்கள்

“தீபம்” பத்திரிகை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில்

Published on Author Noolaham Foundation

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் இருந்து, வாரம் ஒருமுறைவெளிவருகின்ற “தீபம்” பத்திரிகையினை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில் எண்ணிம ஆவணப்படுத்தி திறந்த அணுக்கத்தில் பகிர்வதற்கான அனுமதியினை 01/10/2015 அன்று அதன் ஆசிரியர் நூலக நிறுவனத்திடம் கையளித்தார். விரைவில் நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலகத்தில் “தீபம்” பத்திரிகையின் முழு வெளியீடுகளையும் தொடர்ச்சியாக அணுகிப் பயன் பெறமுடியும். {{{உங்களது ஆவணங்களையும் நூலக நிறுவனத்தில் எண்ணிம ஆவணப்படுத்தி உலகம் முழுவதும் திறந்த அணுக்கத்தில் பகிர்வதற்கு தொடர்புகொள்ளவும். +94 112 363 261/ +94 212… Continue reading “தீபம்” பத்திரிகை நூலக நிறுவன எண்ணிம நூலகத்தில்