நூலக நிறுவனத்தின் வருட இறுதி பணியாளர் ஒன்றுகூடல் 2023

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனத்தின் வருட இறுதி பணியாளர் ஒன்றுகூடலானது 20.12.2023 அன்று காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் நூலக அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ் அலுவலகப் பணியாளர்கள் நேரடியாக கலந்து கொண்டதுடன், மட்டக்களப்பு அலுவலகப் பணியாளர்கள் Zoom ஊடாக இணையவழியில் இணைந்து கொண்டனர். 

image5  image7

இவ் ஒன்றுகூடலில் 5S சார்ந்த ஒழுங்கமைப்பு, 2024 ஆம் ஆண்டுக்கான செயற்பாடுகள் பற்றிய தெளிவூட்டல், நூலகத்திற்கான புதிய நலன்புரி அமைப்புக்கான உறுப்பினர் தெரிவு என்பன இடம்பெற்றன. அதன் பின்னர் நாட்டின் காலநிலை சீரின்மை காரணமாக யாழ் நூலகப் பணியாளர்கள் அனைவரும்,

  • ஜே ஹோட்டல்ஸ் (J Hotels Jaffna) இற்கும்,

மட்டக்களப்பு அலுவலகப் பணியாளர்கள்,

  • ஏறாவூர் லெகூன் பூங்கா (Eravur Lagoon Park)
  • புன்னக்குடா கடற்கரை (Punnakuda Beach)
  • கல்லடி கடற்கரை (Kalladi Beach)

ஆகிய இடங்களுக்கு சென்றதுடன் பணியாளர்களிடையே வேடிக்கையான விளையாட்டுக்களும் நடாத்தப்பட்டன.

image9 WhatsApp Image 2024-01-01 at 14.45.43

image14 WhatsApp Image 2024-01-01 at 14.32.53 (1)

image10 WhatsApp Image 2024-01-01 at 14.32.53

image12 image6