நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை

Published on Author Loashini Thiruchendooran

யாழ்ப்பாண பொது நூலகத்துடன் இணைந்து செய்கின்ற நூலக நிறுவனத்தின் எண்ணிமப்படுத்தல் செயற்றிட்டத்திற்கு அனுசரணை வழங்கும் மனித நேயம் அமைப்பின் உறுப்பினரான திரு. மித்திரன் அவர்களும், அவரது உதவியாளரும், நூலக நிறுவனத்தின் ஆளுகை சபை உறுப்பினரான திரு. சசீவன் கணேசானந்தன் அவர்களும் 18 ஜனவரி 2024, வியாழக்கிழமை அன்று யாழ் சுண்டுக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவனத்திற்கு வருகை தந்திருந்தனர். 

image2

இவர்கள் நூலக நிறுவனத்தின் எண்ணிமப்படுத்தல் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிடுவதற்கும் மனித நேயம் அமைப்பின் இரண்டாவது ஆண்டு நிறைவு பூர்த்தியை முன்னிட்டு வெளியிடப்போகும் ஆவண அறிக்கையிடலுக்கு தேவையான விடயங்கள்சார்ந்து கலந்தாலோசிப்பதற்கும் வருகை தந்திருந்தனர். இதில் நூலக நிறுவனத்தின் எண்ணிமப்படுத்தல் சார்ந்த பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. 

இவர்களுடனான சந்திப்பில், நூலக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அலுவலகர் திருமதி. றஞ்சுதமலர் நந்தகுமார் அவர்களும், எண்ணிமப் பாதுகாப்புச்   செயன்முறைப்   பணியாளர்கள், எண்ணிம நூலக ஆவணகத்துறைப்  பணியாளர்கள் மற்றும் நூலக நிறுவனத்தின் ஏனைய பணியாளர்களும் இணைந்து கொண்டனர். இறுதியாக, குழுவினர்  புகைப்படம் எடுக்கப்பட்டு, பிற்பகல் 4.30 மணியளவில் இவர்களுடனான சந்திப்பு இனிதே நிறைவடைந்தது.