நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை

Published on Author Loashini ThiruchendooranLeave a comment
20 ஆகஸ்ட் 2024, செவ்வாய்க்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு நூலக நலன்விரும்பிகளாகவும் பங்களிப்பாளர்களாகவும் திகழ்கின்ற பத்மகரன் பத்மநாதன் (ஜேர்மனி), துஷாந்த் தெய்வேந்திரம் (அவுஸ்திரேலியா) ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
இவர்கள் நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன் ஒவ்வொரு துறை சார்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்றிட்டங்கள் மற்றும் அவை சார் அடைவுகள் என்பன தொடர்பிலும் கலந்துரையாடினர்.
image1image8
image3 image4
image9இவர்களுள் துஷாந்த் என்பவர் அவுஸ்திரேலியா Chapter சார்ந்து 2022ஆம் ஆண்டில் இருந்தும் பத்மகரன் என்பவர் ஜேர்மனி Chapter சார்ந்து 2024ஆம் ஆண்டில் இருந்தும் தங்களது பங்களிப்பை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக துஷாந்த் என்பவர் இவ்வருடத்திற்கான தனது பங்களிப்பை நேரடியாக கையளித்ததுடன், “வட இலங்கை மருத்துவ வரலாற்று ஆவணமாக்கம்” செயற்றிட்டம் சார்ந்து மேலதிக தகவல்களையும் கேட்டறிந்து கொண்டார்.
மேலும், நிறுவனத்தின் புகைப்படக் கருவி மூலமான எண்ணிமப்படுத்தலை நேரடியாகப் பார்வையிட்ட பத்மகரன், இச்செயற்பாடுகளுக்கென 600D புகைப்படக் கருவி ஒன்றை அன்பளிப்பு செய்திருந்தார்.
இவர்களுடனான சந்திப்பில் நூலக நிறுவனத்தின் ஆளுகைச் சபை உறுப்பினரான சசீவன் கணேசானந்தன், நூலக பிரதம நிறைவேற்று அலுவலர் மற்றும் நிறுவனத்தின் ஏனைய பணியாளர்களும் இணைந்து கொண்டனர்.image2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *