7ஆவது அகவையை பூர்த்தி செய்யும் நூலகத் திட்டம் – சேரன்

Published on Author Noolaham Foundation

நன்றி: கம்ப்யூட்டர் ருடே ஆடி 2011, இதழ் 10. இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிப்பதோடு, தகவல் வளங்களையும் அறிவுச்சேகரங்களையும் ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்துவரும் இலாப நோக்கமற்ற தன்னார்வ முயற்சியான நூலகத்திட்டம் இவ்வருடத்துடன் தனது 7 ஆவது அகவையை பூர்த்தி செய்வது மட்டுமில்லாமல் இலங்கை தமிழ் பேசும் மக்களின் 10,000 ஆவணங்களையும் ஆவணப்படுத்தியுள்ளது என்பது அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு விடயமாகும். இனம் ஒன்று, தனது இருப்பை உறுதிசெய்வதும்,… Continue reading 7ஆவது அகவையை பூர்த்தி செய்யும் நூலகத் திட்டம் – சேரன்

வணக்கம் சஞ்சிகையில் சேரனது நேர்காணல்

Published on Author Noolaham Foundation

வணக்கம், ஆடி 2011,  இதழ் 04. யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவனும், மொரட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பீட முதலாம் வருட மாணவனுமான சிவானந்தமூர்த்தி சேரன் யாழ் நீர்வேலியை சொந்த இடமாகக் கொண்டவர். இவர் அண்மையில் சர்வதேச அமைப்பான “ASHOKA FOUNDATION” இன் “ASHOKA YOUTH VENTURE” (அசோகாவின் இளம் முயற்சியாளர்) விருதினையும் பெற்றிருந்தார். இவர் கடந்த சில வருடங்களாக நூலக நிறுவன தன்னார்வ தொண்டராக ஆவணப்படுத்தலில் ஏற்பட்ட சுய விருப்பால் பணியாற்றி வருகின்றார். தற்போது நிறுவன இயக்குனர்களில்… Continue reading வணக்கம் சஞ்சிகையில் சேரனது நேர்காணல்

ஆவணப்படுத்தல் தான் எமது வரலாற்றைப் பாதுகாக்கும்

Published on Author Noolaham Foundation

Thinakkural Sunday August 05 2012 ஊடகங்களிலே வலையூடகங்களின் வளர்ச்சியும் பயன்பாடும் இன்று அதிகரித்துச் சென்று கொண்டிருக்கின்றது. இதன் மூலம் எதிர்காலத்தில் எமது வரலாற்றை ஆவணப்படுத்துவதிலும் இந்த வலையூடகங்கள் (இணையத்தளங்கள்) பாரிய பங்களிப்பினை வழங்கி நிற்கின்றன. அந்த வகையில் ஈழத்தமிழர்களின் வரலாற்றையும் அவர்களின் தனித்துவத்தையும் பாதுகாத்து நிற்கும் வலையூடகமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றது நூலகம் (www.noolaham.org) இணையத்தளம். நூலகம் வலைத்தளம் ஈழம் தொடர்பான எழுத்தாவணங்கள் துண்டுப்பிரசுரங்கள் முதல் நூல்கள் வரை அச்சில் வரும் அனைத்தையும் மின்வடிவாக்கி பாதுகாத்து அவற்றை எவரும் எப்போதும் இணையத்தளத்தில் இலகுவாகப் பெற்றுப் படிப்பதற்கு ஏற்ற வண்ணம் வெளியிடும்… Continue reading ஆவணப்படுத்தல் தான் எமது வரலாற்றைப் பாதுகாக்கும்

பாண்டிச்சேரி ஆவணப்படுத்தற் பயிற்சி அனுபவக்குறிப்புக்கள் | சேரன்

Published on Author Noolaham Foundation

அழிவை எதிர்நோக்குகின்ற, எதிர்காலத்தில் பல்வேறுபட்ட ஆய்வுகளுக்கு துணைநிற்க கூடிய ஆவணங்களைத் தேடிக் கண்டடைந்து அவற்றைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், எண்ணிம வடிவில் ஆவணப்படுத்துவதற்காக பிரித்தானிய நூலகத்தினால் (British Library) தொடங்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் தான் Endangered Archive Program (EAP). இதனடிப்படையிலான செயற்றிட்டங்கள் பல்வேறு நாடுகளில் EAP தொடரிலக்கத்துடன் பிரித்தானிய நூலக அனுசரணையில் நடைபெற்று வருகின்றது. இந்தியாவின் பாண்டிச்சேரியில் உள்ள French Institute of Pondicheri இலிந்து மேற்கொள்ளப்படும் EAP 458 குழுவினர் நூலக நிறுவனத்திற்கு எண்ணிம ஆவணப்படுத்தல், பாதுகாத்தல்… Continue reading பாண்டிச்சேரி ஆவணப்படுத்தற் பயிற்சி அனுபவக்குறிப்புக்கள் | சேரன்

இணையத்தில் ஓர் ஈழத் தமிழ் நூலகம்

Published on Author Noolaham Foundation

Virakeasari Sunday Jun 24 இலங்கையில் வாழ்ந்த காலப்பகுதியில் சிறிது காலம் இலங்கை ஒலிப்பரப்புக்கூட்டுத்தாபனத்தில் ‘கலைக்கோலம்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக வாரத்தில் ஒரு தடவை செல்வதுண்டு. அக்காலத்தில் அரசஊடகங்களில் குறிப்பாக இலங்கை வானொலியில் ‘ஈழம்’ என்ற சொல்லை பாவிக்க முடியாதிருந்தது.ஈழத்து இலக்கிய வளர்ச்சி என்று தொடங்கும் வசனங்களையெல்லாம் இலங்கை இலக்கிய வளர்ச்சி என்றே திருத்தி வாசிக்க வேண்டும். அத்துடன் சாதி என்ற சொல்லும் வந்துவிடக்கூடாது. எழுத்தாளர் கே.டானியல் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் மறைந்ததையடுத்து கலைக்கோலம் நிகழ்ச்சியில் அவர் பற்றிய ஒரு அஞ்சலிக்கட்டுரையை… Continue reading இணையத்தில் ஓர் ஈழத் தமிழ் நூலகம்

உயில் கலை இலக்கிய சங்கத்தின் புனைவும் புதிதும் நூல் வெளியீடு – தினமுரசு

Published on Author Noolaham Foundation

THINAMURASU Monday May 21   உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் சு.குணேஸ்வரனின் புனைவும் புதிதும் நூல் வெளியீடும் மற்றும் புதிய நூலக செய்திமடல் அறிமுக நிகழ்வும் நேற்றும் முன் தினம் பி.ப. 3.00 மணியளவில் கொற்றாவத்தை பூமகள்சன சமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. யாத்திரிகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூல் ஆய்வுரையை மூத்த எழுத்தாளர் தெணியான், மதிப்பீட்டுரையை யாழ்.பல்கலைக்கழக சமூகவியல் துறை விரிவுரையாளர் ராஜேஸ்கண்ணன் ஆகியோர் வழங்கினர். புதிய நூலக செய்திமடல் அஜந்தகுமார் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது.

கொழும்புத் தமிழ்ச் சங்க தமிழ் இலக்கிய மாநாட்டில் சிற்றிதழ்களின் ஆய்வரங்கு – தினக்குரல்

Published on Author Noolaham Foundation

THINAKKURAL Sunday May 27 உலகத் தமிழ் இலக்கிய மாநாடு ஒன்றினை கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஜூன் முதல் வாரம் 2,3,4ஆம் திகதிகளில் நடத்தவுள்ளது. இந்த மாநாட்டில் இரண்டாவது நாள் ஆய்வரங்கில் முதல் நிகழ்வாக சிற்றிதழ்கள் பற்றிய ஆய்வரங்கு இடம் பெற உள்ளது. இந்தச் சிற்றிதழ்கள் அரங்கிற்கு இணைத்தலைவர்களாக பேராசிரியர் சபா ஜெயராசா, செங்கதிர் ஆசிரியர் த.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்பார்கள். மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா ஆய்வரங்களைத் தொடங்கி வைப்பார். மேற்படி ஆய்வரங்கில் ஐந்து காத்திரமான ஆய்வுரைகள்… Continue reading கொழும்புத் தமிழ்ச் சங்க தமிழ் இலக்கிய மாநாட்டில் சிற்றிதழ்களின் ஆய்வரங்கு – தினக்குரல்