அதிபர்கள் சந்திப்பும் பாடசாலை ஆவணமாக்கலும்

Published on Author தண்பொழிலன்

நூலக நிறுவனமானது வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளின் வெளியீடுகளை ஆவணப்படுத்தும் நோக்கில் பாடசாலைகளிலிருந்து மேற்கொள்ளப்பட்ட வெளியீடுகள் ,மாகாண, வலய மட்ட பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் பரிகார கற்றல் கையேடுகள் உட்பட மாணவர் கற்றல் கற்பித்தல் சார் விடயங்கள் போன்றவற்றை சேகரித்து எண்ணிமப்படுத்தி இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்கான எழுத்து மூல அனுமதியை வடமாகாண கல்வித்திணைக்களத்திடமிருந்து பெற்றுள்ளது. இதற்கு தேவையான உதவிகளை வழங்குமாறு சுற்றறிக்கை மூலம் வட மாகாண கல்விப்பணிப்பாளர் செ.உதயகுமார் வலயப்பாடசாலை அதிபர்களை கேட்டுள்ளார்.   இதன் முதற்கட்டமாக , துணுக்காய்… Continue reading அதிபர்கள் சந்திப்பும் பாடசாலை ஆவணமாக்கலும்

நூலகத்தின் ஊர் ஆவணப்படுத்தல் திட்டம்

Published on Author தண்பொழிலன்

வரலாறு என்றால், நாமெல்லாம் சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு, என்று பட்டியல் வாசிப்போம். இதே கேள்வியை தொன்மையான வரலாற்றுக் குடியிருப்புகள் என்றால், மதுரை, தஞ்சை, காஞ்சி என்றோ, கீழடி, ஆதிச்சநல்லூர் என்றோ மீண்டும் தமிழகத்திலேயே போய் நிற்போம்.   கொஞ்சம் விடயம் தெரிந்தவர் என்றால் யாழ்ப்பாண இராச்சியம், வன்னிச் சிற்றரசுகள், மட்டக்களப்பு வன்னிமைகள் திருக்கோணமலை, கந்தரோடை, பொம்பரிப்பு, என்று இங்குள்ள பட்டியலையும் சேர்த்துக்கொள்ளுவோம். . இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். நீங்கள் பிறந்த ஊரின் வரலாறு உங்களுக்குத் தெரியுமா? தமிழரின் வரலாற்றுக் குடியிருப்புகளில் உங்கள் ஊரின் பெயரையும்… Continue reading நூலகத்தின் ஊர் ஆவணப்படுத்தல் திட்டம்

யாழில் SETME2018 ஆய்வரங்கு

Published on Author தண்பொழிலன்

“தொழிநுட்ப உலகில், எதிர்வரும் காலம், நான்காவது கைத்தொழில் புரட்சிக்காலமாக இனங்காணப்படுகின்றது. இக்காலத்தில், இலத்திரனியலின் செல்வாக்கு மேலும் வீரியமாக எமது வாழ்க்கையைப் புரட்டிப்போடுமளவுக்கு ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்வுகூறப்படுகிறது. உதாரணமாக புதிய, முன்னெப்போதும் பெரிதும் அறிந்திராத the Internet of Things, autonomous vehicles, 3-D printing, nanotechnology, biotechnology, materials science, energy storage, and quantum computing போன்ற தொழில்நுட்பங்கள் கோலோச்சத் தொடங்கியிருக்கின்றன. இவை எப்போதுமில்லாத புதிய தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்தியிருப்பதோடு அவற்றுக்குத் தேவையான, எதிர்ப்பார்க்கப்படும் திறன்களும்… Continue reading யாழில் SETME2018 ஆய்வரங்கு

யாழில் சுவடி ஆவணப்படுத்தல் கண்காட்சி

Published on Author தண்பொழிலன்

வட இலங்கையின் சுவடிச்சேகரங்களை எண்ணிமப்படுத்தும் செயற்றிட்டமானது, இங்கிலாந்தின் ஆபத்துக்குள்ளான சுவடிக்காப்பகத் திட்டத்தின் அனுசரணையில் இடம்பெற்றுவருகின்றது. இதன் ஒரு பாகமாக, சுவடிகளை ஆவணப்படுத்துவது எவ்வாறு என்பதை விவரிக்கும் கண்காட்சி ஒன்று நூலக நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் அக்டோபர் 12 (வெள்ளி) முதல் 14 (ஞாயிறு) வரை இது கொக்குவில் ஆடிய பாதம் வீதியிலுள்ள நூலக நிறுவனத்தில் இடம்பெறும்.     ஆய்வு, ஆவணப்படுத்தல், மரபுரிமை தொடர்பான ஆர்வமுள்ள அனைவரதும் வருகையினை நூலக நிறுவனம் எதிர்பார்க்கிறது

தாய்வீடு அரங்கியல் விழா 2018

Published on Author தண்பொழிலன்

கனடாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் தாய்வீடு இதழானது, கடந்த சில ஆண்டுகளாக, ‘அரங்கியல் விழா’ என்ற கலையாற்றுகையை நிகழ்த்தி வருகின்றது. ‘நமது கலைகளை நாமே போற்றுவோம்’ என்பதற்கமைய உருவாக்கப்பட்ட கலைக்களம் இது. ஈழத்தமிழரின் தனித்துவமான கலையாடலான நாட்டுக்கூத்துக்கு தாய்வீடு அதிக முன்னுரிமை அளித்து வந்திருக்கிறது. அந்த விதத்தில்,  இதுவரை மூன்று கூத்துக்களை அரங்கேற்றியுள்ள தாய்வீடு, இவ்வாண்டும் ஒரு கூத்தை அரங்கேற்ற உள்ளது. இது தவிர, நாட்டியம், நாடகம் முதலான பல கலையாடல்களும் மேடையேற உள்ளன. இவ்வாண்டும் இந்நிகழ்வில் நூலகம்… Continue reading தாய்வீடு அரங்கியல் விழா 2018

நூலகத்தின் தொழிற்கலை ஆவணப்படுத்தல் திட்டம் – தும்புக்கைத்தொழில்

Published on Author தண்பொழிலன்

நூலக நிறுவனமும் தமிழ் விக்கிப்பீடியாவும் இணைந்து, இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் தொழிற்கலைகளை ஆவணப்படுத்தும் திட்டத்தை தற்போது நடைமுறைப்படுத்தி வருகின்றது. அருகிவரும் தொழிற்கலைகளை பல்லூடகங்களைப் பயன்படுத்தி ஆவணப்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும். புகைப்படங்கள், காணொளிகள், வாய்மொழி வரலாறுகள் என்பன பெறப்பட்டு, அவை நூலகத்தின் ஆவணகம் வலைத்தளத்தில் தனிச்சேகரங்கள் திறக்கப்பட்டு அங்கு சேகரிக்கப்படுகின்றன.   இதுவரை ஏழுக்கும் மேற்பட்ட தொழிற்கலைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் தும்புக்கைத்தொழிலானது, கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி கிராமத்தை மையமாகக் கொண்டு ஆவணப்படுத்தப்பட்டது. தென்னம்மட்டையை பெற்றுக்கொள்ளல்,… Continue reading நூலகத்தின் தொழிற்கலை ஆவணப்படுத்தல் திட்டம் – தும்புக்கைத்தொழில்

இலங்கையின் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தைக் காக்கும் எண்ணிம நூலகம் – ரோர்

Published on Author தண்பொழிலன்

“இனமுறுகல் வெடித்த 1981இல் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம், நாட்டின் அறிவுசார் வளங்கள் இல்லாமல் போன மிக மோசமான இழப்பாக இன்றும் நினைவுகூரப்படுகின்றது. இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்கள் அனுபவித்த கொடூரங்களில் ஒன்றாக இந்நிகழ்வு சித்தரிக்கப்படுகிறது. உண்மை என்னவென்றால், 97,000 புத்தகங்களோடு எரிந்தழிந்து போன யாழ் நூலகம், இலங்கையின் ஆவணப்படுத்தல் பாரம்பரியத்தின் மிகப்பெரிய அங்கமொன்றை இலங்கை இழந்த மாபெரும் இழப்பு அது. அப்படியொரு அனர்த்தம் மீள நிகழக்கூடாது என்பதே 2005 இல் எண்ணிம நூலகம் உருவானதன் முக்கியமான… Continue reading இலங்கையின் தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தைக் காக்கும் எண்ணிம நூலகம் – ரோர்