நூலக நிறுவனத்தின் 2017 ஆண்டுத் திட்டமிடல், வரவுசெலவு, வளந்திரட்டல்

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனம் தனது செயற்பாடுகளை ஆண்டுத் திட்டமிடல், வரவுசெலவை (Annual Plan and Budget) முன்வைத்தும் அதற்குத் தேவையான வளங்களை வளந் திரட்டுதல் திட்டம் (Resource Mobilization Plan) ஊடாகவும் முன்னெடுக்கின்றது.  இந்தப் பொறிமுறை நூலக நிறுவனமயாக்கச் செயற்பாடுகளின் ஒரு முக்கிய பகுதியாக 2012 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.  நாம் இந்தப் பொறிமுறையை  நேர்த்தியுடன் கடந்த சில ஆண்டுகளாக பின்பற்றி வருகிறோம். நூலக நிறுவனத்தின் 2017 ஆண்டுத் திட்டமிடல் தற்போது நடைபெற்று வருகிறது.  இதில் நூலக நிறுவனத்தின் பங்கேற்பாளரான… Continue reading நூலக நிறுவனத்தின் 2017 ஆண்டுத் திட்டமிடல், வரவுசெலவு, வளந்திரட்டல்

புதிய தன்னார்வலர்கள் நூலகத்துடன் இணைவு

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனத்தினால் கடந்த பதினொரு வருடங்களாக உலகளாவியரீதியில் மேற்கொள்ளப்படும் இலங்கைத் தமிழ்பேசும் சமூகம் சார்ந்த ஆவணங்களை எண்ணிம ஆவணப்படுத்தல், பாதுகாத்தல் செயற்பாடுகளுக்கு உலகம் பூராகவும் இருந்து நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் தொடர்ச்சியாக பலவழிகளில் பங்களிப்பு செய்துவருகின்றனர். அந்தவகையில் கடந்த சில மாதங்களில் நூலக நிறுவனத்தினோடு பல புதிய தன்னார்வலர்களும் இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும் இணைந்து கொண்டு, இலங்கை தமிழ்பேசும் சமூகம் தொடர்பான எண்ணிம ஆவணப்படுத்தலுக்கு பிரஞ்ஞை பூர்வமான தமது பங்களிப்பினை பலவழிகளிலும் செய்து வருகின்றனர். மேலதிக தன்னார்வலர்களின்… Continue reading புதிய தன்னார்வலர்கள் நூலகத்துடன் இணைவு

யாழ் அலுவலகத்துக்கு கொலம்பியா பல்கலையில் கலாநிதி படிப்பினை மேற்கொள்ளும் ‘மார்க் ப்ளம்போர்த்’ வருகை

Published on Author Noolaham Foundation

நூலக நிறுவனத்தின் யாழ் அலுவலகத்துக்கு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டப்படிப்பினை மேற்கொண்டிருக்கும் ‘மார்க் ப்ளம்போர்த்’ மற்றும் மக்கில் பல்கலைக்கழகம், மொன்ராரியல் கனடாவில் முதுகலைமானி பட்டப்படிப்பினை மேற்கொண்டிருக்கும் ‘ஹரினா அற்ரொன்’ முதலியோர் வருகைதந்து, நூலக செயற்பாடுகளினைக் கேட்டறிந்ததுடன், சில எண்ணிம ஆவணப்படுத்தல் சார் இணைச் செயற்பாடுகளை நூலகத்துடன் இணைந்து மேற்கொள்ளவும் விருப்பம் தெரிவித்திருந்தனர். http://noolahamfoundation.org/wiki/index.php?title=News%2F2015%2F2015.09.01

ரொறான்ரோ தமிழ் தெரு விழாவில் நூலக நிறுவன அறிமுகப்படுத்தல்

Published on Author Noolaham Foundation

“தமிழ் பெஸ்ட்” என்ற ஓர் வீதித் திருவிழா கனடா ரொரன்றோவில் கடந்த மாதம் 29/08/2015, 30/08/2015 ஆம் திகதிகளில் இடம்பெற்றது. அதன் போது நூலக நிறுவனம் தொடர்பான பரப்புரையும் கனடா வாழ் நூலக தன்னார்வலர்களால் மேற்கொள்ளப்பட்டது. இதனூடாக பலரும் நூலக நிறுவனத்தின் தன்னார்வப்பணிகளைப்பற்றியும் இதர செயற்பாடுகள் பற்றியும் அறிந்து கொண்டனர். இதன்போது நூலகத்தின் வெளியீடுகள் உட்பட்ட இதர ஆவணங்களும் ஓர் காட்சிக்கூடம் அமைத்துக் காட்சிப்படுத்தப்பட்டதுடன் நூலகத்தின் செயற்பாடுகள் உள்ளடங்கிய துண்டுப்பிரசுரங்களும் அனைவருக்கும் வழங்கப்பட்டன. https://www.facebook.com/hashtag/tamilfestto?source=feed_text&story_id=1030599340304788

தவில் தட்சணாமூர்த்தி ஆவணப்பட வெளியீட்டு விழாவில் அருண்மொழிவர்மன் ஆற்றிய உரை

Published on Author Noolaham Foundation

சமூகத்தினை நோக்கிய தசாப்தம் கடந்த பயணத்தின் தொடர்ச்சியில் “இலங்கையின் தமிழ் பேசும் சமூகத்தின் ஓர் எண்ணிம ஆவணக்காப்பகம்- “நூலக நிறுவனம்” கனடாவில் 09/05/2015 அன்று இடம்பெற்ற தவில் மேதை தட்சணாமூர்த்தி அவர்களின் ஆவண இறுவெட்டு வெளியீட்டு வைபவத்தில் நூலகத்தின் தனார்வலர்களின் ஒருவரான சுதர்சன் ஶ்ரீனிவாசன் (அருண்மொழிவர்மன்) அவர்கள், “நூலகத்துடன் உலகம் பூராகவும் பரந்து வாழும் தமிழ் பேசும் சமூகங்கள் இணைந்து பங்களிக்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார். நூலகத்துடன் அனைவரும் # அரிய பலஆவணங்களினைப் பகிந்தும், #… Continue reading தவில் தட்சணாமூர்த்தி ஆவணப்பட வெளியீட்டு விழாவில் அருண்மொழிவர்மன் ஆற்றிய உரை

தவில் தட்சணாமூர்த்தி ஆவணப்பட வெளியீட்டு விழாவில் இளையதம்பி தயானந்தா ஆற்றிய உரை

Published on Author Noolaham Foundation

லண்டனில் 26/04/2015 அன்று இடம்பெற்ற, “தவில் மேதை தட்சணாமூர்த்தி” அவர்களைப்பற்றிய ஆவண இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வில் நூலக நிறுவனம் பற்றியதும், நூலக நிறுவனத்தின் சாதனைகள் பற்றியதுமான சிறப்பான உரை ஒன்று இளையதம்பி தயானந்தா அவர்களினால் ஆற்றப்பட்டது. அவர் தனது உரையில் நூலகம் நிறுவனம், இலங்கைத் தமிழ் பேசும் சமூகம் சார் 15,000க்கும் மேற்பட்ட எழுத்தாவணங்களை கடந்த 11 வருடங்களில் ஆவணப்படுத்தி உலகம் பூராகவும் இலவசமாக பகிர்ந்திருப்பதனை நினைவு கூர்ந்தார். மேலும் அவரது அவ்வுரையில் நூலக நிறுவனத்தின் அனைத்து… Continue reading தவில் தட்சணாமூர்த்தி ஆவணப்பட வெளியீட்டு விழாவில் இளையதம்பி தயானந்தா ஆற்றிய உரை

நூலக நிறுவனத்தின் அறிவுப் பகிர்தல் பாதையின் தொடர்ச்சி

Published on Author Noolaham Foundation

யாழ்/ தென்மராட்சி கல்வி வலயத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட தென்மராட்சி கல்வி வலய பாடசாலை நூலகர்களுக்கான செயலமர்வு 04/07/2015 அன்று காலை 8.00மணி முதல் மாலை 4.30 மணி வரை சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் இடம் பெற்றது. அந்நிகழ்வில் வளவாளர்களாக நூலக நிறுவன அலுவலர்கள் அழைக்கப்பட்டிருந்ததுடன் நூலக தன்னியக்கமாக்கல் மற்றும் எண்ணிம நூலகம் தொடர்பில் பூரண விளக்கத்தினை அளித்திருந்தனர். இதில் 30க்கும் மேற்பட்ட தென்மராட்சி கல்வி வலய ஆசிரியர்கள் பங்குபற்றி பயன்பெற்றதுடன் நூலக நிறுவனத்தினரின் செயற்றிட்டங்கள் தொடர்பில் தமது ஆதரவினை… Continue reading நூலக நிறுவனத்தின் அறிவுப் பகிர்தல் பாதையின் தொடர்ச்சி