நூலக நிறுவனத்தின் பதிப்புச் செயற்பாடுகள்

Published on Author Noolaham Foundation

இலங்கையின் தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான ஆவணப்படுத்தலில் ஈடுபட்டுவரும் நூலக நிறுவனம் அது சார்ந்த பதிப்பு முயற்சிகளையும் தொடங்கியுள்ளது என்பதனை அறியத் தருவதில் மகிழ்ச்சியடைகிறோம். பின்வரும் வகையான பதிப்புச் செயற்பாடுகளில் ஈடுபட நூலக நிறுவனம் தீர்மானித்துள்ளது. 1. பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நுற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதிகளிலும் வெளியாகிய நுல்களை ஆவணப்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் சில மீள்பதிப்புக்களைக் வெளிகொண்டு வருவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 2. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அதற்கு முன்னரும் வாழ்ந்த முக்கிய எழுத்தாளுமைகளுடைய தொகுப்புக்களை செம்பதிப்புக்களாக வெளிக்கொணர்வதற்கு… Continue reading நூலக நிறுவனத்தின் பதிப்புச் செயற்பாடுகள்

“பனையோலை” – ஆவணப்படுத்தல் செயலமர்வு

Published on Author Noolaham Foundation

நூலகத்தின் ஏற்பாட்டில் “பனையோலை – ஆவணப்படுத்தல் செயலமர்வு” 09.09.2012அன்று யாழ்ப்பாணம், ‘தொடர்பகம்’ மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வுக்கு நூலகம் நிறுவனத்தின் யாழ் இணைப்பாளர் திரு கே. கௌதமன் தலைமை வகித்தார். “இலங்கைத் தமிழ்பேசும் சமூகங்களின் ஆவணப்படுத்தலின் அவசியம்” என்ற தலைப்பில் யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் கு. குருபரன், “இலங்கை தமிழ்பேசும் சமூகங்களின் ஆவணப்படுத்தல் சார்ந்து இன்றைய எமது நிலை” என்ற தலைப்பில் முனைவர் ஜெ. அரங்கராஜ், “சர்வதேச நியமங்களினுடனான உலக நாடுகளின் ஆவணப்படுத்தல்” என்ற தலைப்பில்… Continue reading “பனையோலை” – ஆவணப்படுத்தல் செயலமர்வு

ஈழநாதன் காலமானார் – துயர் பகிர்கிறோம்

Published on Author Noolaham Foundation

நூலகத் திட்டத்தின் தொடக்க உறுப்பினர்களுள் ஒருவரும் நூலக நிறுவனத்தின் முக்கிய பங்களிப்பாளருமான புவனேந்திரன் ஈழநாதன் அவர்கள் 30.09.2012 அன்று அகால மரணமடைந்ததை முன்னிட்டு நூலக நிறுவனம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றது. நூலகத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து நூலகத்தின் செயற்பாடுகளில் பங்கு கொண்டு தனது உழைப்பைச் செலுத்தியவர் ஈழநாதன் அவர்கள். மிகச் சிறிய அளவிலிருந்த நூலகத் திட்டத்துக்கு வளங்களைத் திரட்டியும் பெருமளவு பங்களிப்பாளர்களை இணைத்தும் அதன் செயற்பாடுகளைச் சாத்தியமாக்கியவர் ஈழநாதன். அவரது பங்களிப்பு கிடைக்காது போயிருந்தால்… Continue reading ஈழநாதன் காலமானார் – துயர் பகிர்கிறோம்

7ஆவது அகவையை பூர்த்தி செய்யும் நூலகத் திட்டம் – சேரன்

Published on Author Noolaham Foundation

நன்றி: கம்ப்யூட்டர் ருடே ஆடி 2011, இதழ் 10. இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிப்பதோடு, தகவல் வளங்களையும் அறிவுச்சேகரங்களையும் ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்துவரும் இலாப நோக்கமற்ற தன்னார்வ முயற்சியான நூலகத்திட்டம் இவ்வருடத்துடன் தனது 7 ஆவது அகவையை பூர்த்தி செய்வது மட்டுமில்லாமல் இலங்கை தமிழ் பேசும் மக்களின் 10,000 ஆவணங்களையும் ஆவணப்படுத்தியுள்ளது என்பது அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு விடயமாகும். இனம் ஒன்று, தனது இருப்பை உறுதிசெய்வதும்,… Continue reading 7ஆவது அகவையை பூர்த்தி செய்யும் நூலகத் திட்டம் – சேரன்

பாண்டிச்சேரி ஆவணப்படுத்தற் பயிற்சி அனுபவக்குறிப்புக்கள் | சேரன்

Published on Author Noolaham Foundation

அழிவை எதிர்நோக்குகின்ற, எதிர்காலத்தில் பல்வேறுபட்ட ஆய்வுகளுக்கு துணைநிற்க கூடிய ஆவணங்களைத் தேடிக் கண்டடைந்து அவற்றைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், எண்ணிம வடிவில் ஆவணப்படுத்துவதற்காக பிரித்தானிய நூலகத்தினால் (British Library) தொடங்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் தான் Endangered Archive Program (EAP). இதனடிப்படையிலான செயற்றிட்டங்கள் பல்வேறு நாடுகளில் EAP தொடரிலக்கத்துடன் பிரித்தானிய நூலக அனுசரணையில் நடைபெற்று வருகின்றது. இந்தியாவின் பாண்டிச்சேரியில் உள்ள French Institute of Pondicheri இலிந்து மேற்கொள்ளப்படும் EAP 458 குழுவினர் நூலக நிறுவனத்திற்கு எண்ணிம ஆவணப்படுத்தல், பாதுகாத்தல்… Continue reading பாண்டிச்சேரி ஆவணப்படுத்தற் பயிற்சி அனுபவக்குறிப்புக்கள் | சேரன்

இணையத்தில் ஓர் ஈழத் தமிழ் நூலகம்

Published on Author Noolaham Foundation

Virakeasari Sunday Jun 24 இலங்கையில் வாழ்ந்த காலப்பகுதியில் சிறிது காலம் இலங்கை ஒலிப்பரப்புக்கூட்டுத்தாபனத்தில் ‘கலைக்கோலம்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக வாரத்தில் ஒரு தடவை செல்வதுண்டு. அக்காலத்தில் அரசஊடகங்களில் குறிப்பாக இலங்கை வானொலியில் ‘ஈழம்’ என்ற சொல்லை பாவிக்க முடியாதிருந்தது.ஈழத்து இலக்கிய வளர்ச்சி என்று தொடங்கும் வசனங்களையெல்லாம் இலங்கை இலக்கிய வளர்ச்சி என்றே திருத்தி வாசிக்க வேண்டும். அத்துடன் சாதி என்ற சொல்லும் வந்துவிடக்கூடாது. எழுத்தாளர் கே.டானியல் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் மறைந்ததையடுத்து கலைக்கோலம் நிகழ்ச்சியில் அவர் பற்றிய ஒரு அஞ்சலிக்கட்டுரையை… Continue reading இணையத்தில் ஓர் ஈழத் தமிழ் நூலகம்

உயில் கலை இலக்கிய சங்கத்தின் புனைவும் புதிதும் நூல் வெளியீடு – தினமுரசு

Published on Author Noolaham Foundation

THINAMURASU Monday May 21   உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் சு.குணேஸ்வரனின் புனைவும் புதிதும் நூல் வெளியீடும் மற்றும் புதிய நூலக செய்திமடல் அறிமுக நிகழ்வும் நேற்றும் முன் தினம் பி.ப. 3.00 மணியளவில் கொற்றாவத்தை பூமகள்சன சமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. யாத்திரிகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூல் ஆய்வுரையை மூத்த எழுத்தாளர் தெணியான், மதிப்பீட்டுரையை யாழ்.பல்கலைக்கழக சமூகவியல் துறை விரிவுரையாளர் ராஜேஸ்கண்ணன் ஆகியோர் வழங்கினர். புதிய நூலக செய்திமடல் அஜந்தகுமார் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது.