நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 22.04.2024

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

22 ஏப்ரல் 2024, திங்கட்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு அமெரிக்காவிலிருந்து Dr. சங்கரப்பிள்ளை நாகேந்திரன் வருகை தந்திருந்தார். இவர் நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், நிறுவனம் எவ்வாறு செயற்படுகிறது, நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்றிட்டங்கள் மற்றும் அவை சார் அடைவுகள் என்பன தொடர்பில் கலந்துரையாடினார். அத்துடன் நிறுவனத்தில் ஆவணப்படுத்தப்பட்டுப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பழமையான ஆவணங்களையும் பார்வையிட்டார்.     மேலும் நூலக நிறுவனத்தின் செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதில், “நூலகத்தின் வட… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 22.04.2024

நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 18.04.2024

Published on Author Loashini ThiruchendooranLeave a comment

18 ஏப்ரல் 2024, வியாழக்கிழமை யாழ் சுண்டிக்குளியில் அமைந்துள்ள நூலக நிறுவன அலுவலகத்தைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட புவியியற்றுறையின் திட்டமிடல் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளரான திட்டமிடலாளர் செல்வராஜா ரவீந்திரன் மற்றும் இராசலிங்கம் மங்களேஸ்வரன் ஆகியோர் வருகை தந்திருந்தனர். இவர்கள் நூலக நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், செல்வராஜா ரவீந்திரன் நூலகத்தின் அரிதான ஆவணங்கள் மற்றும் எண்ணிமப்படுத்தும் முறைகள் எண்ணிம சாதனங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தினர். குறிப்பாக, தனது கலாநிதி கற்கைக்காக இலங்கையின் வடமாகாணத்தின்… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக வருகை – 18.04.2024