யாழில் SETME2018 ஆய்வரங்கு

Published on Author தண்பொழிலன்

“தொழிநுட்ப உலகில், எதிர்வரும் காலம், நான்காவது கைத்தொழில் புரட்சிக்காலமாக இனங்காணப்படுகின்றது. இக்காலத்தில், இலத்திரனியலின் செல்வாக்கு மேலும் வீரியமாக எமது வாழ்க்கையைப் புரட்டிப்போடுமளவுக்கு ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்வுகூறப்படுகிறது. உதாரணமாக புதிய, முன்னெப்போதும் பெரிதும் அறிந்திராத the Internet of Things, autonomous vehicles, 3-D printing, nanotechnology, biotechnology, materials science, energy storage, and quantum computing போன்ற தொழில்நுட்பங்கள் கோலோச்சத் தொடங்கியிருக்கின்றன. இவை எப்போதுமில்லாத புதிய தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்தியிருப்பதோடு அவற்றுக்குத் தேவையான, எதிர்ப்பார்க்கப்படும் திறன்களும்… Continue reading யாழில் SETME2018 ஆய்வரங்கு

யாழில் சுவடி ஆவணப்படுத்தல் கண்காட்சி

Published on Author தண்பொழிலன்

வட இலங்கையின் சுவடிச்சேகரங்களை எண்ணிமப்படுத்தும் செயற்றிட்டமானது, இங்கிலாந்தின் ஆபத்துக்குள்ளான சுவடிக்காப்பகத் திட்டத்தின் அனுசரணையில் இடம்பெற்றுவருகின்றது. இதன் ஒரு பாகமாக, சுவடிகளை ஆவணப்படுத்துவது எவ்வாறு என்பதை விவரிக்கும் கண்காட்சி ஒன்று நூலக நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் அக்டோபர் 12 (வெள்ளி) முதல் 14 (ஞாயிறு) வரை இது கொக்குவில் ஆடிய பாதம் வீதியிலுள்ள நூலக நிறுவனத்தில் இடம்பெறும்.     ஆய்வு, ஆவணப்படுத்தல், மரபுரிமை தொடர்பான ஆர்வமுள்ள அனைவரதும் வருகையினை நூலக நிறுவனம் எதிர்பார்க்கிறது

கனடாவில் “கலையரசி 2018”

Published on Author தண்பொழிலன்

கனடாவில் இயங்கிவரும் யாழ் இந்துக்கல்லூரி சங்கத்தின் “கலையரசி 2018” நிகழ்வானது, “எமது கலாசாரங்களையும் விழுமியங்களையும் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளுடன், எதிர்வரும் 7 ஒக்டோபர் 2018 (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற இருக்கின்றது. கனடிய நேரம் மாலை 5.31 மணியளவில் பிளாட்டோ மார்கம் கலையரங்கில் இந்நிகழ்வு இடம்பெறும்.   யாழ் இந்துக்கல்லூரி சமூகமும் உள்ளூர்க்கலைஞர்களும் இணைந்து நடத்த இருக்கும் இந்த இயல் – இசை – நாடக விழாவில், வர்ண இராமேஸ்வரனின் திரை இசை ராகங்கள், ஹரிணியின் இன்னிசை, சண்முகலிங்கம் குழுவினரின்… Continue reading கனடாவில் “கலையரசி 2018”

தாய்வீடு அரங்கியல் விழா 2018

Published on Author தண்பொழிலன்

கனடாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் தாய்வீடு இதழானது, கடந்த சில ஆண்டுகளாக, ‘அரங்கியல் விழா’ என்ற கலையாற்றுகையை நிகழ்த்தி வருகின்றது. ‘நமது கலைகளை நாமே போற்றுவோம்’ என்பதற்கமைய உருவாக்கப்பட்ட கலைக்களம் இது. ஈழத்தமிழரின் தனித்துவமான கலையாடலான நாட்டுக்கூத்துக்கு தாய்வீடு அதிக முன்னுரிமை அளித்து வந்திருக்கிறது. அந்த விதத்தில்,  இதுவரை மூன்று கூத்துக்களை அரங்கேற்றியுள்ள தாய்வீடு, இவ்வாண்டும் ஒரு கூத்தை அரங்கேற்ற உள்ளது. இது தவிர, நாட்டியம், நாடகம் முதலான பல கலையாடல்களும் மேடையேற உள்ளன. இவ்வாண்டும் இந்நிகழ்வில் நூலகம்… Continue reading தாய்வீடு அரங்கியல் விழா 2018

அக்கினி உண்ட அரும்பொருட்கள்! | பிரேசிலின் துயரம்

Published on Author தண்பொழிலன்

தமிழர் வாழ்வில் மறக்கமுடியாத நாள் 1981 யூன் 1. அன்று நள்ளிரவிலேயே தமிழரின் கல்விச்சொத்தான யாழ்ப்பாண நூலகம், திட்டமிட்டு எரித்துச் சாம்பலாக்கப்பட்டது. அதன் விளைவையொத்த எதிர்பாராத இன்னொரு சம்பவத்தை இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் சந்தித்திருக்கிறது பிரேசில். அந்நாட்டின் தலைநகர் ரியோடி ஜெனிரோவில் அமைந்திருந்த தேசிய  அருங்காட்சியகம், கடந்த 2018 செப்டம்பர் இரண்டாம் திகதி நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்தில் எரிந்தொழிந்து போயிருக்கிறது.   ரியோ டி ஜெனிரோவின் அருங்காட்சியகம், அங்கிருந்த மிகப்பழைய கட்டிடங்களுள் ஒன்று. கடந்த 1892இல் அருங்காட்சியகமாக… Continue reading அக்கினி உண்ட அரும்பொருட்கள்! | பிரேசிலின் துயரம்

சரிநிகர் சமானமாக வாழ்வம்|காலக்கண்ணாடி 04

Published on Author தண்பொழிலன்

இலங்கைப் பத்திரிகைச் சூழலைப் பொறுத்தவரை, சரிநிகர் மிக முக்கியமான மாற்று இதழ். “சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே” என்ற பாரதியின் வரிகளிலிருந்து தனக்கான பெயரைச் சூடியிருந்தது இவ்விதழ். 2001 வரை பல்வேறு செய்திகளைச் சுமந்துவந்த சரிநிகர், இலங்கையின் போர்க்கால சூழலில், மாற்றுக்கருத்துக்களுக்கு மாத்திரமன்றி, சிறுகதை, கவிதை முதலியவற்றிலும் பல பரிசோதனைகள் இடம்பெற இடமளித்து, ஈழத்து இலக்கியத்தையும் செழுமைப்படுத்தியது. 1990 யூன் மாதம் மாத இதழாக வெளிவர ஆரம்பித்த இது, பின்னர் வார இதழாக வெளியாக ஆரம்பித்தது. சரிநிகரின் ஆறாவது… Continue reading சரிநிகர் சமானமாக வாழ்வம்|காலக்கண்ணாடி 04

மலையக நாட்டாரியல் | காட்டேரி வழிபாடு

Published on Author தண்பொழிலன்

  வாய்மொழி வரலாறு என்பது வாய்மொழியின் ஊடாக, நினைவுகள் ஊடாக நபர்கள், சமூகங்கள், நிகழ்வுகள், விடயங்கள் பற்றி வரலாற்றுத் தகவல்கள்களைத் திரட்டுதல், பாதுகாத்தல், பகிர்தல், விளங்க்கிக்கொள்தல் முறையையும், அது தொடர்பான கற்கையையும், அந்தச் சேகரிப்புக்களையும் குறிக்கிறது.[1] வாய்மொழி வரலாறு எழுத்தாவணங்களைத் தாண்டி தகவலைப் பெற, பதிவுசெய்ய முனைகிறது நாட்டாரியல் மிகச்சுவாரசியமானது. மனிதனின் உளவியலையும், சமூகக்கூட்டு மனத்தையும் ஆராய அதைவிட மிகச்சிறந்த துறை வேறெதுவும் இல்லை. அதிலும் மனிதசக்தியை மீறியதாக மக்கள் நம்பும் நாட்டார் வழிபாடுகள் பற்றிய கற்கைகள், மானுடவியலில் மிகக்குறிப்பிடத்தக்க… Continue reading மலையக நாட்டாரியல் | காட்டேரி வழிபாடு