மனவெளி கலையாற்றுக் குழுவின் “ஒரு பொம்மையின் வீடு”

Published on Author தண்பொழிலன்

  கனடாவின் முன்னணித் தமிழ் அரங்காற்றுகைக் குழுமங்களில் ஒன்றான “மனவெளி கலையாற்றுக் குழு” ஆனது, எதிர்வரும் யூன் 30 அன்று “ஒரு பொம்மையின் வீடு” நாடகத்தை மேடையேற்ற உள்ளது. “ஒரு பொம்மையின் வீடு” (A Doll’s House) எனும் நாடகம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைசிறந்த நாடகக் கலைஞர்களில் ஒருவரும், நவீனத்துவ முன்னோடிகளில் ஒருவருமான ஹென்ரிக் இப்சனின்  படைப்பாகும். அந்நாடகம் அரங்கேறிய 1879இலிருந்து தொடர்ச்சியான விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் சந்தித்த நாடகம் அது. நோரா எனும் பாத்திரப் படைப்பின் மூலம்,… Continue reading மனவெளி கலையாற்றுக் குழுவின் “ஒரு பொம்மையின் வீடு”

தமிழ் ஓலைச் சுவடிகளை வாசித்தல்

அண்ணாமலைக் கனடா’ மற்றும் ‘நூலகம் நிறுவனம்’ என்பன இணைந்து கடந்த சனிக்கிழமையன்று (16 ஜூன் 2018) நடத்திய பழந்தமிழ் ஓலைச்சுவடிகளை வாசிப்பதற்கான பயிற்சிப்பட்டறையானது மிகவும் பயனுள்ளதாகவும் வெற்றிகரமானதாகவும் அமைந்திருந்தது. பயிற்றுனர்: முனைவர் பால சிவகடாட்சம் அவர்களால், பயிற்சிக்கு வந்திருந்த ஆர்வலர்களுக்கு, பல்வேறு நிலைகளில் (நல்ல நிலையில் உள்ளவை, கறையான் அரித்தவை, தெளிவானவை, தெளிவற்றவை) கிடைக்கப்பெற்ற ஓலைச்சுவடிகள் பார்வையிடுவதற்காக வழங்கப்பட்டன. ஓலைச்சுவடிகளைத் தூய்மைப்படுத்தும் வழிவகைகள் மற்றும் அவற்றைப் பாதுகாக்கும் முறைகள் பற்றிய விளக்கங்களின் பின்னர் ஓலைச்சுவடிகளை வாசிக்கும் வழிமுறைகளும்… Continue reading தமிழ் ஓலைச் சுவடிகளை வாசித்தல்

தமிழ் ஓலைச் சுவடிகளை வாசிப்பதற்கான பயிற்சிப் பட்டறை

Published on Author தண்பொழிலன்

‘அண்ணாமலைக் கனடா’ மற்றும் ‘நூலகம் நிறுவனம்’ என்பன இணைந்து பழந்தமிழ் ஓலைச்சுவடிகளை வாசிப்பதற்கான பயிற்சிப்பட்டறை ஒன்றினை ஒழுங்கு செய்திருக்கின்றன. பயிற்றுனர்: முனைவர் பால சிவகடாட்சம் அவர்கள்  (முந்நாள் உயிரியல் துறைத் தலைவர், விவசாயபீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) இடம்: அண்ணாமலை கனடா (101-1240 Ellesmere Rd, Scarborough, ON M1P 2X4) காலம்: சனிக்கிழமை (16 ஜூன் 2018) பி.ப. 1.00 முதல் பி.ப. 3.00 வரை பழந்தமிழ் ஓலைச்சுவடிகளை வாசிப்பதில் ஆர்வமுள்ளவர்களைக் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.… Continue reading தமிழ் ஓலைச் சுவடிகளை வாசிப்பதற்கான பயிற்சிப் பட்டறை

அனைவருக்காகவும் நூலகங்கள்! – ஒரு படக்காட்சி

Published on Author தண்பொழிலன்

பால், இனம், மதம், வயது, உடல் இயலுமை, வர்க்கம் ஆகிய அனைத்து பாகுபாடுகளுக்கும் அப்பாற்பட்டவை நூலகங்கள். அனைவருடனும் பகிர்வையும், இணக்கத்தையும் பேணுவதையே அவை நோக்கமாகக் கொண்டிருக்கவேண்டும். இதை வலியுறுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்ந்த ரெபேக்கா மெக்கோர்கிண்டேல் (Rebecca McCorkindale) வெளியிட்ட சிறுமவியல் (minimalist) படங்கள், உலகில் பலரின் கவனத்தையும் கவர்ந்தன. ரெபேக்கா அமெரிக்காவின் Gretna, Nebraska என்ற ஒரு சிறிய ஊரில் நூலகராகப் பணியாற்றுபவர். “அனைவருக்காகவும் நூலகங்கள்” (Libraries Are For Everyone) என்ற தொனிப்பொருளில் இவர் வரைந்த… Continue reading அனைவருக்காகவும் நூலகங்கள்! – ஒரு படக்காட்சி

“யாழ்ப்பாண இராச்சியம்” – பேராசிரியர்.சி.க.சிற்றம்பலம்

Published on Author தண்பொழிலன்

“யாழ்ப்பாண இராச்சியம்” எனும் நூலானது, இலங்கைத் தமிழரின் வரலாற்றைப் பொறுத்தவரை, மிக முக்கியமானதாகும். பேராசிரியர்.சி.க.சிற்றம்பலம் அவர்களின் தொகுப்பில், 1992 இல் யாழ்.பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்த இந்நூல், வட இலங்கையில் நிலவிய தமிழரசு பற்றிய அதிகபட்ச சான்றாதாரங்களுடன் எழுதப்பட்ட அருமையான நூல் ஆகும். இந்நூலானது, அதிகபட்ச வரலாற்றுணர்வோடு இலங்கையில் எழுதப்பட்ட தமிழ்நூல்களில் ஒன்று எனலாம். யாழ் தீபகற்பத்தின் வரலாற்றைப் பாடுகின்ற, கைலாயமாலை, வையாபாடல், யாழ்ப்பாண வைபவ மாலை ஆகிய தொன்மங்களை அப்படியே எடுத்தாளாமல், அவற்றில் “கதை” எனத் தள்ளத்தக்கவற்றைத்… Continue reading “யாழ்ப்பாண இராச்சியம்” – பேராசிரியர்.சி.க.சிற்றம்பலம்

ஐந்து புத்தக சவால் – இலங்கை வரலாறு!

Published on Author தண்பொழிலன்

முகநூலில் அண்மையில் பிரபலமாக இருந்த ஐந்து புத்தகங்கள் சவால் (Five books challenge) பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். பொதுவாக இந்த சவாலில் தங்களுக்குப் பிடித்த ஐந்து புத்தகங்களின் அட்டைகளைப் பதிவிட்டு, இன்னும் ஐந்து பேரை இணைத்துக்கொள்வார்கள். அவ்வாறு இணைக்கப்பட்ட ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த ஐந்து புத்தகங்களின் அட்டைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். பிரபலமான அல்லது பலருக்கும் பிடித்தமான புத்தகங்களின் அட்டைகளே இந்த சவாலில் பெரும்பாலும் பகிர்ந்துகொள்ளப்பட்டன. எனினும், முகநூல் பதிவர்கள், பத்தோடு பதினொன்றாகக் கருதி அந்தப் பதிவுக்கு விருப்பம்… Continue reading ஐந்து புத்தக சவால் – இலங்கை வரலாறு!

புத்தகங்களுக்கு ஒரு நாள்!

Published on Author தண்பொழிலன்

இந்த ஆண்டிற்கான உலக புத்தக தினமானது ஏப்ரல் 23, 2018 திங்கட்கிழமையன்று உலகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. கடந்த 1995இலிருந்து யுனெஸ்கோ அமைப்பின் அனுசரணையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் திகதி கொண்டாடப்பட்டுவரும் இத்தினமானது புத்தகம், அதன் பதிப்புரிமை மற்றும்  வாசிப்பைப் பழக்கத்தை அதிகரித்தல் முதலியவற்றை நோக்கமாகக் கொண்டதாகும். எனவே, சில இடங்களில் இது “புத்தக பதிப்புரிமை தினம்” என்றும் அழைக்கப்படுகிறது. 1920களிலேயே ஸ்பெயினில் உலக புத்தக தினம் பற்றிய கருதுகோள் தோன்றிவிட்டது என்றாலும், 1995ஆம் ஆண்டிலேயே யுனெஸ்கோ… Continue reading புத்தகங்களுக்கு ஒரு நாள்!