நூலக நிறுவனத்தின் வருடாந்த பணியாளர் ஒன்றுகூடல் 2023

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனத்தின் வருடாந்த பணியாளர் ஒன்றுகூடலானது 29.06.2023 – 01.07.2023 வரையிலான காலப்பகுதியில் மூன்று நாட்கள் பயணமாக மட்டக்களப்பில் இடம்பெற்றது. இப்பயணத்தில் நூலக நிறுவனப் பணியாளர்கள் கலந்துகொண்டிருந்ததுடன் அவர்களிடையே வேடிக்கையான விளையாட்டுக்களும் நடாத்தப்பட்டன. இப்பயணத்தின் முதல் நாள், # குசலான மலையும் குசலான குமரன் ஆலயமும் # புல்லுமலை இரண்டாம் நாள், # ஸ்ரீ மாமாங்க பிள்ளையார் கோவில் # காத்தான்குடி கடற்கரை # கல்லடி கடற்கரை # கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் ஆலயம் # மட்டக்களப்பு நூலக… Continue reading நூலக நிறுவனத்தின் வருடாந்த பணியாளர் ஒன்றுகூடல் 2023

நூலக நலன்விரும்பிகளின் நூலக விஜயம் – 26.05.2023

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனத்தின் ஆளுகைச் சபை உறுப்பினரான சசீவன் கணேசானந்தன் மற்றும் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், மனித உரிமைகள் சட்டத்தரணி மற்றும் மனித உரிமைகள் ஆர்வலரான அம்பிகா சத்குணநாதன் ஆகியோர் கடந்த 26.05.2023 அன்று நூலக நிறுவனத்தின் யாழ் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார்கள். இவர்கள் இருவரும் நூலக நிறுவனம் சார்ந்த செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன் குறிப்பாக அம்பிகா சத்குணநாதன் அவர்கள் நூலக நிறுவனத்தின் சட்ட ரீதியான பிரச்சினைகள், தூதரகங்களுடன் எவ்வாறு ஒருங்கிணந்து செயற்படலாம், ஏனைய… Continue reading நூலக நலன்விரும்பிகளின் நூலக விஜயம் – 26.05.2023

வன்னி புத்தகத் திருவிழாவில் நூலக நிறுவன செயற்பாடுகள் – 2023

Published on Author Loashini Thiruchendooran

தமிழ்மாமன்றத்தின் 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜூன் 24,25 ஆம் திகதிகளில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நடாத்தப்பட்ட வன்னியின் புத்தகப் பண்பாட்டு திருவிழாவில் நூலக நிறுவனமும் கலந்து கொண்டது. இந்நிகழ்வில் நூலக நிறுவனம் சார்பில் சிறகுகள் அமைய வன்னி பிராந்திய செயற்பாட்டாளர்கள்  கலந்து கொண்டதுடன்  பார்வையாளர்கள் மத்தியில் நூலக நிறுவனம் தொடர்பிலான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிப்பு, நூலகத்தின் ஈ-பள்ளிக்கூடம் செயற்றிட்டம் தொடர்பான விளக்கமளிப்பு மற்றும் நூலக நிறுவன செயற்பாடுகள் தொடர்பான விளக்கமளிப்பு என்பன இடம்பெற்றன. குறிப்பாக… Continue reading வன்னி புத்தகத் திருவிழாவில் நூலக நிறுவன செயற்பாடுகள் – 2023

ஏறாவூர் புத்தகக் கொண்டாட்டத்தில் நூலக நிறுவன செயற்பாடுகள் – 2023

Published on Author Loashini Thiruchendooran

ஏறாவூர் வாசிப்பு வட்டமும் ஏறாவூர் நகரசபையும் இணைந்து நடத்திய ஏறாவூர் புத்தகக் கொண்டாட்டம் 05ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை ஏறாவூர் வாவிக்கரையோரம் அமைந்துள்ள டாக்டர் அஹமட் பரீட் விளையாட்டு மைதானத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றது. நூலக நிறுவனம் சார்பில் இந்நிகழ்வில் மட்டக்களப்பு அலுவலகப் பணியாளரான ரிஃப்கான் அவர்கள் கலந்துகொண்டதுடன் பார்வையாளர்கள் மத்தியில் நூலக நிறுவனம் தொடர்பிலான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பு, முஸ்லிம் எஃப்பமேரா செயற்றிட்டம் பற்றிய விளக்கமளிப்பு, மாணவர்களுக்கு ஈ-பள்ளிக்கூடம் தொடர்பான விளக்கமளிப்பு, நூலக நிறுவன செயற்பாடுகள்… Continue reading ஏறாவூர் புத்தகக் கொண்டாட்டத்தில் நூலக நிறுவன செயற்பாடுகள் – 2023

ஏறாவூர் புத்தகக் கொண்டாட்டத்தில் நூலக நிறுவனம் – 2023

Published on Author Loashini Thiruchendooran

ஏறாவூர் வாசிப்பு வட்டமும் ஏறாவூர் நகரசபையும் இணைந்து நடத்தும் ஏறாவூர் புத்தகக் கொண்டாட்டம் 05ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை ஏறாவூர் வாவிக்கரையோரம் அமைந்துள்ள டாக்டர் அஹமட் பரீட் விளையாட்டு மைதானத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. தமிழ், முஸ்லிம், சிங்கள பாரம்பரிய கலைகள், புத்தக வெளியீடுகள், ஆய்வுக் கருத்தரங்குகள், திரையிடுதல், உரையாடல்கள், சிறுவர்களுக்கான தனி அரங்குகள், சமகால தமிழ், சிங்கள இலக்கியங்கள், சிங்கள சினிமாக்கள், சமூகங்களுக்கிடையிலான ஆரோக்கியமான உரையாடல்கள், வாசிப்பை மேம்படுத்தும் வகையிலான மாணவர்களுக்கான நிகழ்வுகள்,… Continue reading ஏறாவூர் புத்தகக் கொண்டாட்டத்தில் நூலக நிறுவனம் – 2023

மட்டக்களப்பு புத்தகத் திருவிழாவில் நூலக நிறுவனம் – 2023

Published on Author Loashini Thiruchendooran

கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மட்டக்களப்பு அலுவலகமும் மட்டக்களப்பு மாநகர பொது நூலகமும் இணைந்து கடந்த ஏப்ரல் மாதம் 28,29,30 ஆந் திகதிகளில் முற்பகல் 09:15 மணி தொடக்கம் மாலை 07:15 மணி வரைக்கும் மட்டுநகர் காந்தி பூங்காவிற்கு அருகிலுள்ள வாவிக்கரையினை அண்டியுள்ள பொது நூலக வளாகத்தில் நடத்திய மட்டக்களப்பு புத்தகத் திருவிழாவில் நூலக நிறுவனமும் பங்குபற்றியது.              சர்வதேச புத்தகத் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற இக்கண்காட்சியில் மட்டக்களப்பிலிருந்து வெளிவந்துள்ள நூல்கள், சஞ்சிகைகள்,… Continue reading மட்டக்களப்பு புத்தகத் திருவிழாவில் நூலக நிறுவனம் – 2023

நூலக நிறுவனத்தின் புகைப்பட ஆவணமாக்கல் : பயிற்சிப்பட்டறை

Published on Author Loashini Thiruchendooran

நூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் செயன்முறைக்கு வலுச்சேர்க்கும் வகையில் தன்னார்வலர்களுக்கான புகைப்பட ஆவணமாக்கல் பயிற்சிப்பட்டறை ஏப்ரல் 02 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 9.30 மணி முதல் 12.00 மணி வரை யாழ்ப்பாணம், சுண்டுக்குளி சோமசுந்தரம் ஒழுங்கையில் அமைந்துள்ள நூலக நிறுவனத்தில் இடம்பெற்றது. சுரேன் போடோகிராஃப்பியின் நிறுவனரும் தகவல் தொழிநுட்பம் மற்றும் ஊடகக் கற்கைகள் விரிவுரையாளரான சுரேந்திரகுமார் கனகலிங்கம் அவர்கள் வளவாளராக செயற்பட்டு புகைப்படம் ஆவணமாக்கல் சம்பந்தமான பல கருத்துக்களை வழங்கியிருந்தார். ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், புகைப்படக்கலைஞர்கள், ஆவணப்படுத்துனர்கள், கணினித்துறை நிபுணர்கள்… Continue reading நூலக நிறுவனத்தின் புகைப்பட ஆவணமாக்கல் : பயிற்சிப்பட்டறை